தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அறிவியல் பாட செய்முறை தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
செய்முறை தேர்வு:
தமிழகத்தில் மே 19ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. இதனையடுத்து தேர்வில் பங்கேற்காதவர்கள் மற்றும் தோல்வியுற்றவர்களுக்கான துணைத்தேர்வு ஜூன் 27ம் தேதி துணைத்தேர்வு நடத்தபடும் என்று அரசு தேர்வு இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த துணைத்தேர்வில் பங்கேற்கவுள்ளவர்கள் அறிவியல் பாடத்தின் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். முதலில் அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மே 23ம் தேதி முதல் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் ரூ.125 கட்டணம் செலுத்தி அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்று கொள்ளலாம். இதன் மூலம் பயிற்சி அறிவியல் பாட செய்முறை தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். அறிவியல் பாட செய்முறை தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்த பிறகே கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.