Daily TN Study Materials & Question Papers,Educational News

TNPSC குரூப் 4 தேர்வு முடிவு குறித்து மனு தாக்கல்; அதிரடியான உத்தரவை வெளியிட்ட நீதிபதி!


நமது பாடவேளை வலைதளத்திலிருந்து தினந்தோறும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு செய்திகளை தொகுத்து வழங கி வருகிறோம். இந்த தகவல்களை உங்கள்  நண்பர்களுக்கும் பகிர மறந்து விடாதீர்கள் . இதோ TNPSC GROUP 4 பற்றிய புதிய செய்திஉங்களுக்காக.👇

தமிழகத்தில், திறமையான மற்றும் தகுதியான பணியாளர்களை தேர்வு செய்து, அரசுப் பணியில் அமைத்துவதற்காக TNPSC தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக, குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. 18.5 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த மார்ச் 24ம் தேதி வெளியாகியது.

இதன் தொடர்ச்சியாக, பணி நியமனத்திற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்த தேர்வு முடிவுகளில் பல குளறுபடிகள் உள்ளது என மறுப்புறம் புகாரும் எழுந்து வருகின்றன. இதனால், ஏமாற்றம் அடைந்துள்ள, தேர்வர்கள் போராட்டம் நடத்த இருப்பதாகவும் கூறியிருந்தனர். இதற்கிடையில், மதுரை ஐகோர்ட்டில், OMR விடைத்தாளை ஸ்கேனிங் செய்து, மதிப்பீடு செய்ததில் தவறு நடந்து இருக்கும்.

எனவே, பணி நியமனத்தில் எனக்கு ஒரு இடத்தை காலியாக வைத்திருக்குமாறு, தேர்வு முடிவில் அதிருப்தி அடைந்த திண்டுக்கல்லை சேர்ந்தவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குரூப் 4 பணிக்கான நியமன ஏற்பாடுகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே, இந்த ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்ததும், விடைத்தாள் நகலை மனுதாரரிடம், TNPSC வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share:

0 Comments:

إرسال تعليق

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

أرشيف المدونة الإلكترونية

Definition List

header ads

Unordered List

Support