Daily TN Study Materials & Question Papers,Educational News

திருப்பதி கோவிலில் இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம் – தேவஸ்தானத்தின் சூப்பர் பிளான்!!

திருப்பதி கோவிலில் இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம் – தேவஸ்தானத்தின் சூப்பர் பிளான்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் பொருட்டு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏழுமலையான் கோவில்:

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பல மணி நேரங்கள் கூட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்காமல் டிக்கெட் பெறுவதற்கான புதிய சேவையை தேவஸ்தானம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவில்களில் 34 கவுண்டர்களில் டிக்கெட் வழங்கப்படும் நிலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்களை வாங்கும் நிலை இருக்கிறது. இந்நிலையில், இந்த காத்திருப்பு நேரத்தை குறைக்கும் நோக்கில் ஆன்லைன் மூலமாகவே விஐபி பிரேக் தரிசனத்திற்கான டிக்கெட்களை பெரும் படி தேவஸ்தானம் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதாவது, விஐபி தரிசனம் மேற்கொள்வதற்கு சிபாரிசு கடிதங்களை சமர்ப்பித்த பின்னர் பக்தர்களின் மொபைல் எண்ணிற்கு செய்தி அனுப்பப்படும். அதில் வரும் லிங்கை பக்தர்கள் கிளிக் செய்து பணம் செலுத்தி விட்டால் உங்களுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

إرسال تعليق

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

أرشيف المدونة الإلكترونية

Definition List

header ads

Unordered List

Support