ரயில் பயணத்திலும் இனி இருக்கையை தேர்வு செய்யலாம் – வெளியான குட் நியூஸ்!
ரயில் பயணிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த ஒரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய அறிவிப்பு:
பேருந்து முதல் விமானம் வரை பயணம் செய்யும் பயணிகள் தங்கள் விரும்பும் இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது. ஆனால் ரயில் பயணத்தில் மட்டும் தங்களது இருக்கையை பயணிகள் தேர்வு செய்ய முடியாது. இதற்கு தொழில் நுட்ப ரீதியிலான காரணங்கள் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது ரயில்வே நிர்வாகம் நீண்ட நாட்களாக பயணிகள் எதிர்பார்த்து இருந்த வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது பயணிகள் தாங்கள் விரும்பும் சீட்டுகளை பஸ்களில் தேர்வு செய்வதுபோல ரயில்களிலும் இனி தேர்வு செய்து, முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி எழுந்துள்ளது.
0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.