கிருஷ்ணகிரியில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிவதற்கான, முன் திட்டமிடல் கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும், 6 முதல், 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இதில் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்-கெடுப்பு பணி மேம்படுத்திட மொபைல் செயலியை பயன்படுத்தி, மாணவர்களின் விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். கணக்கெடுப்பு பணியை பிறத்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். கணக்கெடுப்பு நடத்தி பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியப்பட்டவுடன், பள்ளியில் சேர்க்கை மற்றும் சிறப்பு பயிற்சி செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
இளம்வயது திருமணம், குழந்தை தொழிலாளர்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், போதை அடிமையாகும் குழந்தைகள், வேறு மாநிலம் மற்றும் மாவட்டத்திலிருந்து புலம் பெயர்ந்த குழந்தைகள், குடும்ப சூழலால் இடைநின்ற குழந்தைகள், பெற்றோர் இழந்த குழந்தைகள் ஆகியோரை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு, அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மாவட்ட சி.இ.ஓ., (பொ) முனிராஜ், உதவி திட்ட அலுவலர் வடிவேல், பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.