காஞ்சிபுரம், செங்கல்பட்டு தாலுகாக்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை – அரசு அறிவிப்பு!
பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை:
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இதன்காரணமாக மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மழை நின்ற நிலையிலும், வெள்ளம் வடியாமல் இருக்கிறது. இதனால் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே, டிசம்பர் 8ம் தேதியான நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.