Daily TN Study Materials & Question Papers,Educational News

குறையில்லாத செல்வம் பெற விநாயகர் சதுர்த்தி அன்று தவறாமல் சொல்ல வேண்டிய மந்திரம்..!

 குறையில்லாத செல்வம் பெற விநாயகர் சதுர்த்தி அன்று தவறாமல் சொல்ல வேண்டிய மந்திரம்..!


மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரின் துயர் நீக்க கடவுளானவர் நம்மை கண்காணித்து உடன் இருக்கிறார். நாம் செய்யும் நல்லவை கெட்டவை இரண்டுமே அவரால் கண்காணிக்கப்படுகிறது. இருந்தும் எல்லா தவறுகளையும் மனிதன் செய்து கொண்டு தான் இருக்கிறான். இக்கலியுகத்தில் அவன் ஆடும் ஆட்டத்திற்கு பல குறைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்து கொண்டிருப்பான். இதிலிருந்து விடுபட்டு துயர் நீங்கி, குறைகள் இல்லாத செல்வம் பெற விநாயகர் சதுர்த்தி அன்று மறக்காமல் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.


ஒவ்வொரு யுகங்களிலும், ஒவ்வொரு விஷயங்கள் மூலமாக கடவுளை அடைய மனிதனுக்கு ஒரு வழி இருந்ததாம். திரேதா யுகத்தில் யாகம் செய்து கடவுளை மனிதன், மக்கள் அடைந்தனர். துவாபர யுகத்தில் ஆலய வழிபாடு மூலமாக கடவுளை மனிதன் எளிதாக அடைந்தான். அது போல இக்கலியுகத்தில் கடவுளை அடைவதற்கு மந்திரம் ஒன்றே சிறந்த வழி என்று ஆன்மீகம் கூறுகிறது.

உச்சரித்து வந்தால் அந்த வீட்டில் கணவன் மனைவிக்குள் தேவையற்ற சண்டைகள், வாக்குவாதங்கள் நிகழாது என்று கூறப்படுகிறது. அடிக்கடி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி சண்டை போடுபவர்கள் இந்த விஷயத்தை செய்து பாருங்கள். பத்தே நாளில் உங்களுக்கு நல்ல மாற்றம் தெரியும். அந்த அளவிற்கு சக்திகள் மிகுந்த மந்திரங்களில் இந்த மந்திரத்தை விநாயகர் சதுர்த்தி அன்று உச்சரிப்பதால் வாழ்க்கையில் இருக்கக் கூடிய எல்லா துயர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி படிப்படியான குறை இல்லாத செல்வத்தை அடைய வழிவகுக்கும்.


விநாயகர் சதுர்த்தி அன்று முறைப்படி விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவருக்கு பிடித்த பலகாரங்கள் எல்லாம் தயார் செய்து படைத்து, பூஜை செய்யும் பொழுது கீழ் வரும் இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரியுங்கள். குடும்பத்தோடு அமர்ந்து மந்திரத்தை சொல்லிக் கொண்டே பூஜைகளை செய்யுங்கள். பூஜை செய்யும் போது ஒரு செம்பு பாத்திரத்தில் ஜலம் வைத்து கொள்ள மறக்க வேண்டாம். நீருக்கு மந்திர ஒலிகளை ஈர்க்கும் தன்மை உண்டு. தீர்த்த நீர் போல எல்லாருக்கும் நீரை கொஞ்சம் போல கடைசியாக பருக கொடுங்கள்.

விநாயகர் மந்திரம்:


கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்


இது போல குடும்பமாக மந்திரம் சொல்லி பூஜை செய்யும் போது, பூஜையின் நிறைவில் உங்களுக்கு மன நிம்மதியும், சாந்தமான, சந்தோஷமான சூழ்நிலையும் உருவாகி இருக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டைகள், குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து, ஒற்றுமையும், பொருளாதார ரீதியான முன்னேற்றமும், மன நிம்மதியும் கிடைக்க விநாயகர் சதுர்த்தி அன்று இந்த மந்திரத்தை சொல்ல மறக்காதீர்கள்.


Share:

0 Comments:

إرسال تعليق

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

أرشيف المدونة الإلكترونية

Definition List

header ads

Unordered List

Support