9th Tamil July Month assignment answer Key - Unit 2 Assignment

9th Tamil July Month assignment answer Key - Unit 2 Assignment

  • பாடம்: தமிழ்
  •   வகுப்பு: ஒன்பது

  •   ஒப்படைப்பு - விடைகள் 
  •   இயல் - 2 
  •  இயற்கை , சுற்றுச்சூழல்
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் “ என்று பாடியவர் யார் ?
  •  இளங்கோவடிகள்
2. தௌலீஸ்வரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
  •  கோதாவரி ஆறு 
3. 'மே தினமே வருக' இந்நூலின் ஆசிரியர் யார் ?
  • கவிஞர்.தமிழ்ஒளி 
4. கந்தம் என்ற சொல்லின் பொருள் யாது ?
  •    மணம் 
5. நீர்நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?
  •    சோழநாடு 
6. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?
  •  சேக்கிழார்
7. திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்?
  • நம்பியாண்டார் நம்பி.
8. பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் எது?
  • புறநானூறு
9. மல்லல் மூதூர் வயவேந்தே! - எவ்வகைத் தொடர்?
  •  விளித்தொடர்.
10.அடுபோர். இலக்கணக் குறிப்பு தருக.
  •   வினைத்தொகை
                          பகுதி - ஆ 

I1 குறுவினா

11. உறைக்கிணறு என்றால் என்ன?

               மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு உறைக்கிணறு எனப்படும்.

12. கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளுள் இரண்டினை எழுதுக.

                  * நிலைபெற்ற சிலை 

                  * மே தினமே வருக

                  * குருவிப்பட்டி 

13. களை பறிக்கும் பருவம் எது?
  • நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின முதலிலை சுருள் விரிந்தது.  அப்பருவத்தைக் கண்ட உழவர் இதுதான் களைபறிக்கும் பருவம் என்றனர்.
14. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே-குறிப்பு தருக.
  •  நீர் இன்றி அமையாத  உடல் உணவால் அமைவது ; உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே , உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
15. கூவல் என்று அழைக்கப்படுவது எது?
  • உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை.
                                     பகுதி-இ

III. நெடுவினா

16. பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?

பட்டமரத்தின் வருத்தங்கள் :

* மழைநீர் இன்மையால், மரங்கள் பட்டமரங்களாகக் காய்ந்து போகின்றன.

* இலை, தழைகளை யெல்லாம் பெற்றிருந்த மரம், பட்டமரமாகியதால், வெட்டப்படும் நாள் என்று வருமோ என வருந்தி நிற்கிறது.
 
* அழகிய மலர்களும் பசுமையான இலைகளுமாக நிழல் தந்த மரம், வெந்து வெம்பிக் குமைந்தது.

* மேல்பட்டையாகிய ஆடைகள் எல்லாம் விழுந்தன.

* பாடும் பறவை இனங்கள், வாழ வழியற்றுத் தவித்துப் போயின.

*கிளைகளில் ஏறிக் குதிரை ஆடும் சிறார்கள், விளையாட முடியாமல் ஏங்கினர்.

* இவை அனைத்தும் வெறும் கனவாகிப் போயினவே என்பன, பட்டமரம் வருந்தியது.

17. சோழர் காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது ?

சோழர்காலக் 'குமிழித்தூம்பின்  பயன்கள்

* அணையில் வழிந்தோடும் நீரின் அளவை அதிகரிக்கவும், அணையின் முன் தேங்கும் நீரின் சேற்றைக் குறைக்கவும் தமிழன் கையாண்ட அற்புதமான யுக்தி ‘குமிழித் தூம்பு'.

* மழைக்காலங்களில் ஏரியில் நீர் நிரம்பும்போது நீந்துவதில் வல்லவரான ஒருவர் தண்ணீருக்குள் சென்று கழிமுகத்தை அடைந்து, குமிழித்தூம்பை மேலே தூக்குவார்.

* அடியில் இருக்கும் இரு துளைகளின் வழியே, மேலே இருக்கும் நீர் ஓடித் துளையிலிருந்து வெளியேறும்.

* கீழே உள்ள சேறும் சகதியும், துளையில் இருந்து நீருடன் சேர்ந்து வெளியேறும். தூர் வாரவேண்டிய அவசியம் இருக்காது.

                                       பகுதி-ஈ

IV.செயல்பாடு

படத்தைப் பார்த்துக் கவிதை படைக்க. பசுமை யான மரம்-  ஒருவீடு

மாணவக் கவிஞர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கவிதையாக வடிக்கவும்.

9th std Tamil assignment Answer key,9th Tamil unit 2 Assignment Answer key ,m 9th Tamil July Month Answer key 

2 Comments

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...