10th std thirukural || sslc திருக்குறள் மனப்பாடப்பாடல்

10th std thirukural || sslc திருக்குறள் மனப்பாடப்பாடல் திருக்குறள் 

 திருக்குறள் 

 மெய் உணர்தல் 


எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு


 பெரியாரைத் துணைக்கோடல் 

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
 நல்லார் தொடர்கை விடல்


கண்ணோட்டம்

 பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
 கண்ணோட்டம் இல்லாத கண்
,

ஆள்வினை உடைமை

 அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் 
 பெருமை முயற்சி தரும்

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
 இன்மை புகுத்தி விடும் 

அமைச்சு

 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் 
 தியற்கை அறிந்து செயல்

 பொருள் செயல் வகை

 பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 
பொருளல்ல தில்லை பொருள்

  குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்
தொன் றுண்டாகச் செய்வான் வினை

குடிசெயல் வகை

 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
  சுற்றமாச் சுற்றும் உலகு


 நல்குரவு

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
 இன்மையே இன்னா தது

2 Comments

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...