Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label தமிழ் கட்டுரைகள். Show all posts
Showing posts with label தமிழ் கட்டுரைகள். Show all posts

நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் பற்றிய கட்டுரை.!

குறிப்பு சட்டகம்:

  • முன்னுரை
  • பிறப்பு மற்றும் வாழ்க்கை முறையும்
  • இந்திய குடியரசு தலைவர் ஆன கதை
  • இவரது சாதனைகள்
  • முடிவுரை

முன்னுரை:

நான் விரும்பும் தலைவர்களில் அப்துல் கலாம் அவர்களுக்கு எப்போதும் ஒரு தனியிடம் உண்டு. ஏனெனில் இவர் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து உலகமெங்கும் இந்தியாவின் பெருமையை பேச செய்த அணுவிஞ்ஞானி ஆவார்.

பின்னாளில் இவர் இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்தவர். வறுமையான பின்புலத்தில் இருந்து தனது தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்றவற்றால் சாதித்து காட்டிய அப்துல்கலாம் அவர்களுடைய வரலாறு பலபேருக்கு சிறந்த முன்னுதாரணமாக உள்ளது.

பிறப்பு மற்றும் வாழ்க்கை முறையும்:

அப்துல் கலாம் அவர்கள் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி  ஜைனுலாப்தீன்கும் ஆயிஷாமாவிற்கும் மகனாக இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் தனது ஆரம்ப கால பள்ளி படிப்பை இராமேஸ்வரத்தில் உள்ள தொடக்க பள்ளியில் பயின்றார்.
இவரது குடும்பம் எளிமையான குடும்பம் என்பதால் அதன் வருமானத்தை சமாளிக்கும் வகையில் சிறு வயதிலேயே பகுதி நேரங்களில் செய்தி தாள்களை விநியோகிக்கும் வேலை பார்த்தார்.
இவருக்கு கல்வி கற்பித்த சிவசுப்ரமணியம் என்ற ஆசிரியரின் உதவியோடு இவர் மேல்நிலை கல்வியினை தொடர்ந்தார். 1955 இல் சென்னை எம்.ஜ.ரி கல்லூரியில் சேர்ந்து விண்வெளி பொறியியல் படிப்பு படித்தார்.

இவருக்கு விமானியாக வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது அதற்காக நடத்தப்பட்ட தேர்வில் இவர் 9 ஆவது இடத்தையும் பிடித்தார். ஆனாலும் இவருக்கு விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
1960 இல் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் வானூர்தி அபிவிருத்தி அமைப்பில் விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கினார். பின்னாளில் இஸ்ரோவில் இணைந்து பணியாற்ற துவங்கினார்.

குடியரசு தலைவரான கதை:

இவர் தொடர்ச்சியாக விண்வெளியில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஏவிய செயற்கை கோளான Slv 3-யினை ஏவுவதில் முக்கிய பங்காற்றினார்.
இதனை பாராட்டும் வகையில் இந்திய அரசின் உயரிய விருதான “பத்ம பூசன்” 1981 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவ்வாறு இந்தியாவை தனது பணிகளால் பெருமையடைய செய்தார்.
அதை தொடர்ந்து 1963 தொடக்கம் முதல் 1983 வரை இஸ்ரோவில் சிறப்பாக பணியாற்றினார். பின்பு 1999 இல் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் பங்களித்தார்.

பின்னர் “அக்னி பிரித்வி ஆகாஷ்” எனப்படும் ஏவுகணை திட்டத்தில் முக்கிய பங்காற்றினார். இவ்வாறு இவரது செய்த சாதனைகளையும், சேவையையும் கண்டு பலரும் வியந்தனர்.
பின்னர் இவர் 2002 ஆம் ஆண்டில் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவரானார். இவர் மக்களின் ஜனாதிபதி என அன்போடு அழைக்கப்பட்டார்.

இவரது சாதனைகள்:

இவர் இந்தியாவிற்கென தனியாக செயற்கை கோள்களை விண்ணில் ஏவிய பெருமைக்குரியவர் மற்றும் கண்டம்விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகளை உருவாக்கினார்.
இவர் மாணவர்களுக்கு கற்பிப்பதை விரும்பினார் இதனால் சென்னை பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் போன்றவற்றில் வருகை விரிவுரையாளராக பணியாற்றினார்.
இவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்று இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற கனவை மக்கள் மனதில் பதிய வைத்தார். நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி உள்ளார்.
அறிவார்ந்த இளைஞர்கள் தமது அறிவு, நேரம், ஆற்றலை பயன்படுத்தி 2020-க்குள் இந்தியாவை அனைத்து துறையிலும் முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என இவர் விரும்பினார்.
இவர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார் இவர் “அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள்” போன்ற நூல்களையும் எழுதினார்.

முடிவுரை:

இந்தியா வல்லரசாக வேண்டும் என்றும் “கஷ்டம் வரும் போது கண்களை மூடாதே அது உனை கொன்று விடும் கண்ணை திறந்து பார் அதை நீ வென்று விடுவாய்” போன்ற நல்ல கருத்துக்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனதில் விதைத்த A.P.J அப்துல் கலாம் அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் சொற்பொழிவு ஆற்றி கொண்டிருக்கும் பொழுதே இறந்துவிட்டார்.
இவர் பல்வேறான விருதுகளை பெற்றிருந்தாலும் கூட மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் மக்களுக்காகவே வாழ்ந்தவர். இவரது உந்துதல் இன்றைய இந்தியாவுக்கும் உலகத்துக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும் என்பதில் எந்த ஒரு ஜயமும் இல்லை.

Share:

மாடு வியாபாரி கதை - சிறுகதை

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு

அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு

ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை

செய்கிறேன். ஆனால் நான் செய்யும்

வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது.



மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட

வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது

உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே

சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான். 

பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி, “மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்” என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்துக் கொண்டது.

புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றான்.


கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை” என்றது. 


அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்” என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம்

திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின

உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றான். 

“எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது.

வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை.

உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான்.


வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும்

மாட்டிற்கு கண்களில் நீர் வர

தொடங்கியது. “எஜமான்! நீங்கள்

செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன்.

இல்லாவிடில் நான் நீண்ட காலம்

ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்” என்றது.


அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது

துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில்

சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு

இருக்கலாம்” என்றான். மாடு தன் முட்டாள்

தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். பணியாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் √

படித்ததில் மனதே  கலங்கிய பதிவு

😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

Share:

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.10th tamil katturai

கட்டுரை எழுதுக : - உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச்சென்று வந்த  ̈நிகழ்வைக் கட்டுரையாக்குக, --------------

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

விடை:

முன்னுரை:

எங்கள் பகுதியான மதுரையில் அரசுப்பொருட்காட்சி ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் சித்திரை திருவிழாவை ஒட்டித் தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு அரசு செய்தி விளம்பரத் துறைப் பிரிவு சார்பில் நடைபெற்றது. அரசுப் பொருட்காட்சிப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சியின் சிறப்பம்சங்கள்: 


உலகில் கண்டு வியக்கத்தக்க பொருட்கள் நாள் தோறும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவ்வாறு தோன்றும் புதிய பொருட்களைக் காணவும், வாங்கவும் வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர். பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு பொருட்களையும் ஓர் இடத்தில் மக்கள் எளிதில் வந்து பார்க்கத் தகுந்த வகையில் கவர்ச்சிகரமான முறையில் வணிக நிறுவனங்கள் அரங்குகள் அமைத்து மக்கள் காணுமாறு செய்திருந்தனர்.

அரங்குகள் அமைப்பு:


இந்தப் பொருட்காட்சியில் 26 மாநில அரசுத்துறை நிறுவனங்கள், 12 தமிழக அரசுத்துறை நிறுவனங்கள், 3 மத்திய அரசு நிறுவனங்கள் என மொத்தம் 42 அரசு அரங்குகள் அரசின் சாதனை நலத்திட்டத்தை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. மேலும் 115 கடைகளும், 25 விற்பனை அரங்குகளும் தனியார் மூலம் அமைக்கப்பட்டிருந்தன. மதுரை திருமலை நாயக்கர் மஹால் வடிவமைப்பு பொருட்காட்சியின் முகப்பாக அமைக்கப்பட்டிருந்தது. நகர்ப்புற மக்கள், கிராமச் சூழ்நிலையை உணர்ந்து அனுபவிக்கும் வகையில் சிற்றூர் சுற்றுலா எனப்படும் சிறப்பு அரங்கு 25 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டிருந்தது.

கலைநிகழ்ச்சிகள்:


ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாங்கள் சென்றிருந்தபோது ஒரிசா, குஜராத், சிக்கிம், மிசோரம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்கண்ட், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் அம்மாநில மக்களின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் இருந்தது. இது இந்த ஆண்டுதான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார்கள்.

விளையாட்டு அரங்குகள்: 


இராட்சச ராட்டினம், குவளை இராட்டினம், மின்சாரத் தொடர்வண்டி, மரணக் கிணறு, மேஜிக்,குதித்து விளையாடும் மெத்தை எனப் பல்வேறு அரங்குகள் இருந்தன. அந்த அரங்குகளுக்குத் தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்பட்டது. நுழைவுக் கட்டணம்: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பொருட்காட்சி அலுவலக நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெற்றது. நாங்கள் சென்றபோது இதுவரை ஐந்து இலட்சம் பேர் வருகை புரிந்நதாகக் கூறினார்கள்.

முடிவுரை: 

பொருட்காட்சிக்கு வருகை புரிந்தது மூலம் நாங்கள் இதுவரை அறிந்திராத அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. பொழுது போக்கிற்காக நாங்கள் சென்று வந்த நிகழ்வுமிகவும் பயனுள்ளதாகவும் அறிவார்ந்த சிந்தனையை தூண்டுவதாகவும் அமைந்தது.

Share:

மதிப்புரை – பள்ளி ஆண்டுவிழா மலருக்காக. நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/ சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக - 10th tamil

மதிப்புரை – பள்ளி ஆண்டுவிழா மலருக்காக. நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/ சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக, 

குறிப்பு - நூலின் தலைப்பு - நூலின் மையப் பொருள் – மொ ̄நடை – வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர், --------------

பள்ளி ஆண்டு விழா மலருக்காக. நான் நூலகத்தில் படித்த ஒரு கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுதல்,

நூலின் தலைப்பு:- 

  • மு,மேத்தா எழுதிய கண்ணீர்ப் பூக்கள் (கவிதை நூல்)

நூலின் மையப்பொருள் :

இன்றைய சூழலில் ம2த2ன் ஏக்கங்களும் மனதில் ஏற்படும் தாக்கங்களும்

நூலின் மையப்பொருளாக அமைந்துள்ளன,

மொழிநடை :

இலக்கண விதிமுறைகள் அதிகம் இல்லாமல் இலக்கிய பாங்குடன் பாமரரும்

எளிதாக படித்துப் பொருள் உணரும் நடையில் எளிமையாக இந்நூல் அமைந்துள்ளது,

வெளிப்படுத்தும் கருத்து :

இக்கவிதை நூல் வாழ்வியல் எதார்த்தங்களை அப்படியே படம்பிடித்து காட்டுகின்றது, இந்த உலகம் போட்டி  ̈றைந்த உலகம்; பூசல்களைக் குறைத்தால் பூவுலகு பிறக்கும், ஆசைகளைத் துறந்தால்; ஆனந்தம் பிறக்கும், இறைவன் படைப்பில் அனைவரையும். சமமாக நடத்தப்பட வேண்டும், பெண்மையைப் போற்றும் இந்நாட்டில். பெண்ணை இ ̄வுபடுத்துகின்றோம், நாம் யாரிடமும் அன்பு செலுத்தாமல். 

நம்மிடம் அன்பு செலுத்த யாரும் இல்லையே என வருந்தக்கூடாது, 

மரங்களை வெட்டக்கூடாது; வளர்க்க வேண்டும்,

மனிதநேயம் வளர்க்க வேண்டும் . 

என்பது போன்ற பல கருத்துகள் இக்கவிதை நூலில் இடம் பெற்றுள்ளன,

நூலின் நயம் :

எதுகை. மோனை. இயைபு. முரண் ஆகிய தொடைநயங்கள் இக்கவிதை

நூலில் அதிகமாக இடம் பெற்றுள்ளன, அதற்கு எடுத்துக்காட்டாக உள்ள ஒரு பாடல் கீழ்வருமாறு:-

“பங்களா தேசத்துப் பாதையில்  ̈ன்றொரு

பாடகன் பாடுகின்றேன், வீர

பாரத பூஹயின் பாரதி ர்மையின்

பாடகன் பாடுகிறேன்!”, 

நூல் கட்டமைப்பு:- 

இந்நூல் 28 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும், இதில் உள்ள ஒவ்வொரு கவிதைகளும். ஒவ்வொரு கருத்தையும்; வாழ்வியல் எதார்த்தங்களையும் எடுத்தியம்புகிறது, 28 கவிதைகளில் ஒன்று கவிதைப்பூக்கள் என்னும் கவிதை,

இக்கவிதையையே புத்தகத்தின் தலைப்பாக அமைத்துள்ளார் ஆசிரியர், சில கவிதைகள் சிறியதாகவும். சில கவிதைகள் பெரியதாகவும் இந்நூலில் இடம் பிடித்துள்ளன,

சிறப்புக்கூறு :-

இக்கவிதை தொகுப்பு முப்பதாவது பதிப்பாகும், ஒரு புத்தகம் முப்பது முறை அச்சேறி பதிப்பு பெற்று வெளிவந்திருக்கிறது என்றால் அதைவிட சிறப்புக்கூறு வேறு என்ன வேண்டும்! அந்த அளவிற்கு இந்நூல் சிறப்பாக உள்ளது, பல்வேறு அழகான கருத்துகள் எளிய நடையில் அமைந்துள்ள நூல் இதுவாகும்,

நூல் ஆசிரியர் :

  • கண்ணீர்ப் பூக்கள் கவிதை நூலின் ஆசிரியர் மு,மேத்தா ஆவார்,

Share:

உழவுத் தொழில் கட்டுரை - 10th Tamil

உழவுத் தொழிலின் பெருமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

முன்னுரை

உழவு இல்லையேல் உணவு இல்லை

விவசாயத்தின் முக்கியத்துவம்

விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

விவசாயத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

முடிவுரை

முன்னுரை

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்கிறார் திருவள்ளுவர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கைப்பிடி உணவை உண்ணுவதற்கு அதில் ஒவ்வொரு விவசாயிகளினுடைய உழைப்பு தங்கியிருக்கும். ஆதலால் தான் உலகத்தில் பல தொழில்கள் இருந்தாலும் உழவுத் தொழில் தலைசிறந்த தொழிலாக காணப்படுகிறது.

இது வரைக்கும் விளம்பரத்தில் ஈடுபடாத ஒரே தொழில் விவசாயம் தான் ஏனென்றால் விவசாயம் தொழில் அல்ல எமது உயிர்நாடி. உலகத்தின் ஒவ்வொரு உயிர்களுக்கும் பசி என்ற உணர்வு இருக்கும் வரை விவசாயம் அழியாது.

இக்கட்டுரையில் விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயத்தில் இன்று காணப்படும் பிரச்சனைகள், விவசாயத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றன நோக்கப்படுகின்றன.

உழவு இல்லையேல் உணவு இல்லை

இங்கே யாரும் உழவில்லை யாரும் விதைக்கவில்லை யாரும் வியர்வை சிந்தி நெல்மணிகளை விதைவிக்கவில்லை என்றால் நாம் உணவிற்கு எங்கே போவது? சற்று சிந்தியுங்கள்.

“விவசாயி சேற்றில் கால்வைத்தால் தான் நாம் இங்கே சோற்றில் கை வைக்க முடியும்”

விவசாயம் ஒன்றும் அத்தனை இலகுவான தொழில் கிடையாது. கஷ்ரப்பட்டு நிலத்தை உழுது பண்படுத்தி வியர்வை சிந்தி பயிரிட்டு அதனை நீர் பாய்ச்சி பாதுகாத்து பசளையிட்டு நோய்களில் இருந்து காப்பாற்றி வெய்யிலில் காய்ந்து மழையில் நனைந்து விலங்குகள் பறவைகளில் இருந்து பயிரை காக்க காவல் இருந்து அறுவடை செய்யும் வரை விவசாயி பாடுபட்டு உழைத்தால் தான் விளைச்சலை பெற முடிகிறது.

இந்த கஷ்ரங்களை பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் அவர்கள் உழைத்து கொண்டிருப்பதால் தான் இவ்வுலகமே இயங்கி கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


இதனையே திருவள்ளுவர் “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை” என்கிறார்.

விவசாயத்தின் முக்கியத்துவம்

விவசாயம் என்பது ஒரு நாட்டினுடைய முதுகெலும்பு என்று கூறுவார்கள். ஒரு நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு காணவேண்டுமாயின் அங்குள்ள மக்களுக்கு போதிய உணவு கிடைக்க வேண்டும்.

அப்போது தான் அந்த தேசம் உத்வேகத்துடன் இயங்க முடியும். பஞ்சம், பசி, பட்டினி என்பன இல்லாத தேசம் ஒன்று உருவாக வேண்டும் என்றால் அந்நாடு விவசாயத்தில் உச்சநிலை பெற வேண்டும். இல்லாவிடில் அந்த நாடு வளர்ச்சி பெறுவதென்பது இயலாத காரியமாகும்.

உலகத்தின் வளர்ச்சி அடைகின்ற, அடைந்த எல்லா தேசங்களும் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் தான் அவை தன்னிறைவடைந்து காணப்படுகின்றன.

விவசாயத்தில் காணப்படும் பிரச்சனைகள்

முன்பு குறிப்பிட்டதனை போல தலைசிறந்த நாடுகள் தமது நாட்டின் விவசாயிகளை ஊக்குவிக்கின்றது. அவர்களது உற்பத்திகளை தாமே கொள்வனவு செய்கிறது. விவசாய உற்பத்திகளை முடிவு பொருட்களாக தனது தொழில்நுட்பங்கள் மூலமாக உற்பத்தி செய்து தனது உள்நாட்டு நுகர்வுக்கு பயன்படுத்தி எஞ்சியவற்றை சர்வதேசத்துக்கும் ஏற்றுமதி செய்கின்றது.

ஆனால் நம்முடைய வளர்முக நாடுகள் அவ்வாறில்லை முதலாளிகளின் கையிலே விவசாயம் உள்ளது. அதிகளவான நிலமும் வசதி படைத்தவர்களிடமே உள்ளது. சாதாரண ஏழை விவசாயிகள் கடன் பட்டு தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையானது இருக்கின்றது.

இயற்கை காரணிகளால் பயிர் சேதமடைந்தால் அவற்றுக்கான நஷ்ட ஈடுகளும் கிடைப்பது இல்லை

உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களுக்கு தனியார் தரகர்களே விலை நிர்ணயம் செய்கிறார்கள். குறைவான விலைக்கு கொள்வனவு செய்து மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து முதலாளிகள் அதிக இலாபம் ஈட்ட விவசாயிகளும் சாதாரண மக்களும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் விவசாயிகள் பல வருடங்களாக விவசாயம் செய்ய முடியாது கடன் சுமையால் தற்கொலை செய்வது மனதை உடைக்கும் துயர நிகழ்வுகளாகும். இவ்வாறு பல பிரச்சனைகள் இன்றைய விவசாயத்தில் காணப்படுகின்றன.

விவசாயத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

விவசாயம் செய்பவர்கள் இன்று குறைந்த வண்ணமே இருக்கிறது. மீண்டும் மீண்டும் எத்துயர் வரினும் தம் உடலை வருத்தி எமக்காக போராடும் விவசாயிகளை பாதுகாக்க அரசாங்கம் முழுமனதாக திட்டங்களை வகுக்கவேண்டும்.


விவசாயத்தில் ஊழல் செய்வோரை சிறையில் அடைக்கவேண்டும். விவசாய உற்பத்திகளை அரசாங்கமே கொள்வனவு செய்ய வேண்டும். விவசாய உற்பத்திகளிற்கு மிகச் சரியான கொள்வனவு விலை, விற்பனை விலைகளை நிர்ணயிக்க வேண்டும்.

விவசாயத்திற்கு வேண்டிய உள்ளீட்டு வசதிகள் தொழில்நுட்பங்கள் என்பவற்றை மேம்படுத்தல். விவசாயிகளுக்குரிய காப்புறுதி ஆதரவுகளையும் உரிய மரியாதையையும் கிடைக்க செய்தல்.

இவை போன்ற நடவடிக்கைகளால் விவசாயத்தை பாதுகாக்க முடியும்.

முடிவுரை

உணவு உற்பத்தி எனும் விடயம் உலகத்தில் எத்தனை தொழில்நுட்பங்கள் உருவானாலும் அதற்குரிய மதிப்பு என்றும் குறையாது.

சனத்தொகை பெருக்கம் பெருக்கல் விருத்தியில் பெருகி வருவதால் உணவு உற்பத்தி அதற்கேற்ப இல்லாவிடின் உலகமே பாரிய பிரச்சனைகளில் சிக்கி விடும்.

விவசாயிகள் அனுபவிக்கும் துன்பங்களை கண்டுகொள்ளாது அவர்களுக்காய் குரல் கொடுக்காமல் விட்டால் இங்குள்ள அனைவரும் உணவின்றி இறக்க நேரிடும். அனைவரும் உயிர் வாழ வேண்டுமென்றால் உழவுத்தொழிலை காக்க அனைவரும் முன்வரவேண்டும்.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories