Daily TN Study Materials & Question Papers,Educational News

மதிப்புரை – பள்ளி ஆண்டுவிழா மலருக்காக. நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/ சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக - 10th tamil

மதிப்புரை – பள்ளி ஆண்டுவிழா மலருக்காக. நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/ சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக, 

குறிப்பு - நூலின் தலைப்பு - நூலின் மையப் பொருள் – மொ ̄நடை – வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர், --------------

பள்ளி ஆண்டு விழா மலருக்காக. நான் நூலகத்தில் படித்த ஒரு கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுதல்,

நூலின் தலைப்பு:- 

  • மு,மேத்தா எழுதிய கண்ணீர்ப் பூக்கள் (கவிதை நூல்)

நூலின் மையப்பொருள் :

இன்றைய சூழலில் ம2த2ன் ஏக்கங்களும் மனதில் ஏற்படும் தாக்கங்களும்

நூலின் மையப்பொருளாக அமைந்துள்ளன,

மொழிநடை :

இலக்கண விதிமுறைகள் அதிகம் இல்லாமல் இலக்கிய பாங்குடன் பாமரரும்

எளிதாக படித்துப் பொருள் உணரும் நடையில் எளிமையாக இந்நூல் அமைந்துள்ளது,

வெளிப்படுத்தும் கருத்து :

இக்கவிதை நூல் வாழ்வியல் எதார்த்தங்களை அப்படியே படம்பிடித்து காட்டுகின்றது, இந்த உலகம் போட்டி  ̈றைந்த உலகம்; பூசல்களைக் குறைத்தால் பூவுலகு பிறக்கும், ஆசைகளைத் துறந்தால்; ஆனந்தம் பிறக்கும், இறைவன் படைப்பில் அனைவரையும். சமமாக நடத்தப்பட வேண்டும், பெண்மையைப் போற்றும் இந்நாட்டில். பெண்ணை இ ̄வுபடுத்துகின்றோம், நாம் யாரிடமும் அன்பு செலுத்தாமல். 

நம்மிடம் அன்பு செலுத்த யாரும் இல்லையே என வருந்தக்கூடாது, 

மரங்களை வெட்டக்கூடாது; வளர்க்க வேண்டும்,

மனிதநேயம் வளர்க்க வேண்டும் . 

என்பது போன்ற பல கருத்துகள் இக்கவிதை நூலில் இடம் பெற்றுள்ளன,

நூலின் நயம் :

எதுகை. மோனை. இயைபு. முரண் ஆகிய தொடைநயங்கள் இக்கவிதை

நூலில் அதிகமாக இடம் பெற்றுள்ளன, அதற்கு எடுத்துக்காட்டாக உள்ள ஒரு பாடல் கீழ்வருமாறு:-

“பங்களா தேசத்துப் பாதையில்  ̈ன்றொரு

பாடகன் பாடுகின்றேன், வீர

பாரத பூஹயின் பாரதி ர்மையின்

பாடகன் பாடுகிறேன்!”, 

நூல் கட்டமைப்பு:- 

இந்நூல் 28 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும், இதில் உள்ள ஒவ்வொரு கவிதைகளும். ஒவ்வொரு கருத்தையும்; வாழ்வியல் எதார்த்தங்களையும் எடுத்தியம்புகிறது, 28 கவிதைகளில் ஒன்று கவிதைப்பூக்கள் என்னும் கவிதை,

இக்கவிதையையே புத்தகத்தின் தலைப்பாக அமைத்துள்ளார் ஆசிரியர், சில கவிதைகள் சிறியதாகவும். சில கவிதைகள் பெரியதாகவும் இந்நூலில் இடம் பிடித்துள்ளன,

சிறப்புக்கூறு :-

இக்கவிதை தொகுப்பு முப்பதாவது பதிப்பாகும், ஒரு புத்தகம் முப்பது முறை அச்சேறி பதிப்பு பெற்று வெளிவந்திருக்கிறது என்றால் அதைவிட சிறப்புக்கூறு வேறு என்ன வேண்டும்! அந்த அளவிற்கு இந்நூல் சிறப்பாக உள்ளது, பல்வேறு அழகான கருத்துகள் எளிய நடையில் அமைந்துள்ள நூல் இதுவாகும்,

நூல் ஆசிரியர் :

  • கண்ணீர்ப் பூக்கள் கவிதை நூலின் ஆசிரியர் மு,மேத்தா ஆவார்,

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support