Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label Women's Rs 1000 Ration Card. Show all posts
Showing posts with label Women's Rs 1000 Ration Card. Show all posts

மகளிர் உரிமை தொகைக்கு உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

மகளிர் உரிமை தொகைக்கு உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட சில பள்ளிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விண்ணப்பப் பதிவுகளில் கொடுக்கப்பட்டுள்ள பயனாளியின் தொலைபேசி எண்ணுக்கு, பதிவு செய்யப்பட்டவுடன் குறுஞ்செய்தி அனுப்படும்.இதனை தொடர்ந்து, உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இருக்கும் பயனாளிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்ற குறுஞ்செய்தி வரும்.


இதில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான காரணமும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒருவேளை விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், இ சேவை மையங்கள் மூலமாக மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் இத்தகைய மேல்முறையீடுகளை மறு விசாரணை செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது?



யா.ருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது?
ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இது கிடைக்காது. அதேபோல், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் இருந்து, வருமான வரியைத் தாக்கல் செய்வோருக்கு, வருமான வரி செலுத்துவோர் வரை இது பொருந்தாது.
மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாது. சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போரும் இந்த உரிமை தொகைக்காக விண்ணப்பிக்க முடியாது. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இதில் விண்ணப்பிக்க முடியாது.

Application form PDF Download here


மேலும், ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா நல வாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர், அரசிடம் இருந்து பென்சன் பெறும் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் பலன்கள் கிடைக்காது. இருப்பினும் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெறுவோரின் குடும்பத்துக்கு இந்த உரிமைத்தொகை கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. மொத்தமாக இந்த திட்டத்தில் 1 கோடி பயனாளிகள் பயன்பெற உள்ளனர்.அதோடு, 3600 யூனிட் மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது. அதாவது இரண்டு மாதத்திற்கு 600 யூனிட்டிற்குள் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
மேலும், 5 ஏக்கருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்க வேண்டும். இந்த மேல் கூறிய தகுதியின்மைகளில் வராத பெண்கள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதேநேரம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகை பெறும் குடும்பங்கள் தத்தினவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திருமணமாகாத பெண்கள், திருநங்கைகள் குடும்பத் தலைவிகளாக இருந்தாலும் அவர்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திட்டத்தில் பயன்பெறும் குடும்ப தலைவிகள் எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்தக் கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோரில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 - விண்ணப்பம் ( Rs. 1000 Application Form )


Share:

தமிழக குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் – தயார் நிலையில் மையங்கள்!

தமிழக குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் – தயார் நிலையில் மையங்கள்!


தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதற்கான மையங்கள் கைரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் மெஷின் உடன் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 - விண்ணப்பம் ( Rs. 1000 Application Form )

உரிமைத்தொகை திட்டம்

தமிழகத்தில் அரசு சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த திட்டம் வருகிற செப் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்த திட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 - விண்ணப்பம் ( Rs. 1000 Application Form )

இந்நிலையில் சென்னையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சென்னையில் வீடு வீடாக விண்ணப்பம் கொடுக்க தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் கூறுகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் இணைந்து விண்ணப்பங்களை வழங்கி வருவருவதாகவும் குறிப்பிட்டார்.

குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 - விண்ணப்பம் ( Rs. 1000 Application Form )

மேலும் இதற்கான சிறப்பு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் 2 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் மட்டும் 1417 ரேஷன் கடைகள் இருப்பதால் 3550 மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் ஜூலை 24 ஆம் தேதிக்கு பின் இந்த மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கும் எனவும், ஒவ்வொரு மையத்திலும் கைரேகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் மெஷின் வைக்கப்படும் எனவும், மக்களுக்கு தேவையான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories