Daily TN Study Materials & Question Papers,Educational News

யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது?



யா.ருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது?
ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இது கிடைக்காது. அதேபோல், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் இருந்து, வருமான வரியைத் தாக்கல் செய்வோருக்கு, வருமான வரி செலுத்துவோர் வரை இது பொருந்தாது.
மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாது. சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போரும் இந்த உரிமை தொகைக்காக விண்ணப்பிக்க முடியாது. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இதில் விண்ணப்பிக்க முடியாது.

Application form PDF Download here


மேலும், ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா நல வாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர், அரசிடம் இருந்து பென்சன் பெறும் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் பலன்கள் கிடைக்காது. இருப்பினும் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெறுவோரின் குடும்பத்துக்கு இந்த உரிமைத்தொகை கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. மொத்தமாக இந்த திட்டத்தில் 1 கோடி பயனாளிகள் பயன்பெற உள்ளனர்.அதோடு, 3600 யூனிட் மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது. அதாவது இரண்டு மாதத்திற்கு 600 யூனிட்டிற்குள் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
மேலும், 5 ஏக்கருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்க வேண்டும். இந்த மேல் கூறிய தகுதியின்மைகளில் வராத பெண்கள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதேநேரம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகை பெறும் குடும்பங்கள் தத்தினவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திருமணமாகாத பெண்கள், திருநங்கைகள் குடும்பத் தலைவிகளாக இருந்தாலும் அவர்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திட்டத்தில் பயன்பெறும் குடும்ப தலைவிகள் எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்தக் கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோரில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 - விண்ணப்பம் ( Rs. 1000 Application Form )


Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support