தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களும் இது இலவசம்…, உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழக அரசானது பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதே உறுதி செய்வதுடன், அவர்களை ஊக்கப்படுத்தி எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், லேப் டாப் உள்ளிட்ட சாதனங்களை அரசு சிறப்பாக வழங்கி வருகிறது.

இதில் இலவச சைக்கிள், நடப்பு கல்வி ஆண்டுக்கான விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு, இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார். இதன் பிறகு பேசிய அமைச்சர் பொன்முடி, +1 மற்றும் +2 மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் நிதி நிலைக்கேற்ப அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments