+2 மாணவர்களுக்கு இது கட்டாயம்… பள்ளிகல்வித்துறை மிக முக்கிய உத்தரவ!!

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு இது கட்டாயம்… பள்ளிகல்வித்துறை போட்ட மிக முக்கிய உத்தரவு…!!


நான் முதல்வன் திட்டத்தின் கருப்பொருள் “உலகை வெல்லும் தமிழகம்” என்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிய துடிக்கும் இளைஞர்கள் தங்கள் அறிவை வளர்க்கும் விதமாக பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு எங்கு வேலை கிடைக்க போகிறது என்னும் மனத்தடையை நீக்குவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை, செயலில் திறமையானவர்களாக மாணவர்கள் இளைஞர்களாக மாற்றவே திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு Mail ID தொடங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. +2 முடித்து கல்லூரி மாணவர் சேர்க்கையின் போதும், ‘நான் முதல்வன்’ திட்டத்தை அமல்படுத்தும் போதும் Mail ID கட்டாயம் தேவைப்படுவதால், உடனே Mail ID உருவாக்க வேண்டும் என்றும் ஜூலை 30க்குள் மாணவர்கள் Mail ID தொடங்க தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உதவுமாறும், email பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...