Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label 12th Tamil. Show all posts
Showing posts with label 12th Tamil. Show all posts

இளந்தமிழே - 12th Tamil Ilamtamile

இளந்தமிழே! 

- சிற்பி பாலசுப்பிரமணியம்

 நுழையும் முன்:

தமிழ்மொழி நம் அடையாளம்; பண்பாட்டின் நீட்சி; தோன்றிய காலந்தொட்டு மக்களால் பேசப்பட்டு, எழுதப்பட்டு உயிர்ப்போ டும் இளமையோடும் இருப்பது. 

இன்றும் தமிழ்மொழியின் புகழ் எத்திசையும் இலங்குகிறது. 

அத்தகைய தமிழின் பெருமையைப் பேசாத மரபுக்கவிஞர்கள் இலர் எனலாம். தமிழ் பல புதிய உள்ளடக்கங்களால் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு பழஞ்சிறப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கவிஞர்களின் அவா.

பாடல்:

செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்

செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!

தம்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத்

தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம்

விம்மு கின்ற தோள்மீதில் முத்துமுத்தாய்

வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட

எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால்

ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே!

மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள்

முத்தமிழே! நீயுள்ளாய்; முன்னம் ஓர்நாள்

பாண்டியரின் சங்கத்தில் கொலுவி ருந்தாய்!

 பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்!

மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு

 மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!

கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக்

குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!

இலக்கணக் குறிப்பு

செந்தமிழ், செந்நிறம், செம்பரிதி -பண்புத்தொகைகள்

சிவந்து – வினையெச்சம்

வியர்வைவெள்ளம் – உருவகம்

முத்துமுத்தாய் – அடுக்குத்தொடர்

உறுப்பிலக்கணம்

சாய்ப்பான் = சாய் + ப் + ப் + ஆன்

  • சா ய் – ப குதி, ப் – சந் தி ,
  • ப் – எதிர்கால இடைநிலை, 
  • ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

விம்முகின்ற = விம்மு + கின்று + அ

  • விம்மு – ப குதி, 
  • கி ன் று – நிகழ் கால இடைநிலை ,
  • அ – பெயரெச்ச விகுதி.

வியந்து = விய + த் (ந்) + த் + உ

  • விய – பகுதி, 
  • த் – சந்தி (ந்ஆனது விகார ம்),
  • த் – இறந்த கா ல இ டை நி லை , 
  • உ – வினையெச்சசெந்தமிழே.

இருந்தாய் = இரு + த் (ந்) + த் + ஆ ய்

  • இரு – ப குதி, த் – சந் தி
  • ( ந் ஆ ன து வி கார ம்),
  • த் – இறந்தகால இடைநிலை,
  • ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதி

செம்பரிதி = செம்மை + பரிதி

விதி : ஈறு போதல் – செம் + பரிதி – செம்பரிதி.

வானமெல்லாம் = வானம் + எல்லாம்

விதி : உ டல்மேல் உயிர்வந்து ஒ ன் று வ து 

இயல்பே – வானமெல்லா ம்.

உன்னையல்லால் = உன்னை + அல்லால்

  • விதி : இஈஐ வழி யவ்வும் – உன்னை + ய் + 
  • அல்லால்
  • விதி : உ டல்மேல் உயிர்வந்து ஒ ன் று வ து 
  • இயல்பே – உன்னையல்லால்.

செந்தமிழே = செம்மை + தமிழே

  • விதி : ஈறு போத ல் – செம் + தமிழே
  • விதி : முன்னின்ற மெய் திரிதல் - செந்தமிழே

நூல்வெளி

  • இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. 
  • கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் சிற்பி பாலசுப்பிரமணியம்; 
  • பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்;
  • மொழிபெயர்ப்புக்காகவும் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். 
  • இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி,இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 
  • இவர் ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய பல கவிதை நூல்களை ஆக்கியவர்; 
  • இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்; 
  • மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்; 
  • சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

Share:

12th Tamil 2 ,4 Mark Questions Answer Important |Public Exam

12th Tamil 2 ,4 Mark Questions Answer Important |Public Exam

நான்கு  மதிப்பெண் வினக்களுக்கான விடைகள் – Click Here   Answers

1.ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக :-
2.      சடாயுவை தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக?
3.      மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக.
4.      எங்கிருந்தோவருகிறது வண்ணத்துப் பூச்சி ஒன்று
பறவைகளும் வரக்கூடும் நாளை - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக?
5.      யானை புக்க புலம் போல
தானும் கண்ணன் உலகமும் கெடுமே - உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக?
6.      குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வினைச் சுட்டிக் காட்டுக
7.      .நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக?
8.    மயிலை சீனி, வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் தருக?

வினா எண் – 35 முதல்  38 ( 2 x 4 = 8 )

1.        பேரிடர் மேலாண்மை ஆணையம் - விளக்கம் தருக
2.        பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் எழுதுக?
3.        பேரிடர் மேலாண்மை ஆணையம் - விளக்கம் தருக
4.        மணலில் எழுதியது முதல் தற்காலம் வரைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றங்களைத் தொகுத்துரைக்க;
5.        திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக?
6.        வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரை பலவற்றை எழுதுக?

Share:

12th Tamil 2 ,4 Mark Questions Answer Important |Public Exam

12th Tamil 2 ,4 Mark Questions Answer Important |Public Exam

இரண்டு மதிப்பெண் வினக்களுக்கான விடைகள் – Click Here  Answers

1.    கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

2.    நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக

3.    எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

4.    .நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது/

5.    வசனம், கவிதை வேறுபாடு தருக

6.    கலிவிழா, ஒலிவிழா - விளக்கம் தருக

7.    தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே"

8.    தொடருக்குப் பதவுரை எழுதுக

9.    .எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?

10. ஒருமுக எழினி, பொருமுக எழினி - குறிப்பு எழுதுக?

11. செவியறிவுறூஉ துறையை விளக்குக?

12.            இறைமகனின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினார்?

வினா எண் – 19முதல்  21 ( 2 x 2 = 4 )

இரண்டு மதிப்பெண் வினக்களுக்கான விடைகள் – Click Here   Answers

1.    நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக

2.    புக்கில், தன்மனை - சிறுகுறிப்பு எழுதுக

3.    அக்காலத்து கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

4.    .பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்?

சான்று?தருக

5.    பருவத்தே பயிர் செய் - நேர மேலாண்மையை பொருத்தி எழுதுக?

6.    தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக?

Share:

12th Tamil Important அணி இலக்கணம் - first Revision 2022

12th Tamil Important அணி இலக்கணம் - first Revision 2022

 1.பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் : 

                           இருவேறு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறி பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி. 

சான்று : 

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள் 

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது 

தன்னே ரிலாத தமிழ் .

(தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்)

பொருத்தம்

  ஒற்றுமை : 

                கதிரவனும் தமிழும் இருளைப் போக்குகிறது 

வேற்றுமை : 

               கதிரவன், உலகின் புற இருளைப் போக்குகிறது.

தமிழ், மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குகிறது.

எனவே, கதிரவனை விட தமிழ் உயர்ந்தது.

**********************************************

2.நிரல்நிறை அணி சான்று தந்து விளக்குக.

அணி விளக்கம் : 

                       சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள் கொள்ளச் செய்வது நிரல்நிறை அணி.

சான்று :  

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது.

பொருத்தம் :

 'அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கை

பண்புடையதாகவும் பயன் மிக்கதாகவும் அமையும் என வரிசை முறைப்படி பொருள் கொள்ளப்படுவதால், இது நிரல்நிறை அணி ஆயிற்று.

**********************************************

3.ஏகதேச உருவக அணியைச் சான்றுடன் விளக்குக:-

 அணி விளக்கம் : 

                         ஒரு பொருளை உருவகம் செய்து, அதற்கு இணையான மற்றொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி.

சான்று : 

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 

ஏமப் புணையைச் சுடும்.

பொருத்தம் : 

             சினத்தை நெருப்பாகவும் இனத்தைத் தெப்பமாகவும் உருவகம் செய்த வள்ளுவர் உலக வாழ்க்கையைக் கடலாக உருவகம் செய்யாமல் விட்டுவிட்டேன்.

  • 12th Tamil Important Questions _ First Revision - Click here
  • 12th Tamil One Mark Online Test - Get Full marks - Go To test

    12th Tamil First Revision Original Question Paper with Answer Key ,Now you Can Download 12th Tamil First Revision Exam Model Question Paper with Answer key 2022 February.

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் இந்த பயனுள்ள மாதிரி வினாத்தாள்களை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்து உதவுங்கள்.
Share:

12th Tamil unit 1 Question paper and Answer key 2021-2022

 மேல்நிலை இரண்டாம் ஆண்டு - 2021-2022 அலகுத்தேர்வு-1

12th Tamil unit 1 Question paper and Answer key 2021-2022

நேரம் மதிப்பெண்கள்  : 50 

| அனைத்து வினாக்களுக்கும் விடை தருக:

பகுதி - 1

1. இலக்கியத்தையும் மொழியையும் ஒரு சேரப் பேசுகின்ற இலக்கண நூல் 

அ} யாப்பருங்கலக்காரிகை     ஆ) தண்டியலங்காரம்     இ) தொல்காப்பியம்

ஈ )நன்னூல்

விடை:இ) தொல்காப்பியம்

2.மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ்!" . இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம் 

அ) அடிமோனை , அடி எதுகை       ஆ ) சீர்மோனை,சீர் எதுகை

இ) அடி எதுகை, சீர்மோனை            ஈ )சீர் எதுகை,அடிமோனை

விடை :இ) அடி எதுகை, சீர்மோனை

3. பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க 

அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்

ஆ) புத்தகக் காண்காட்சி நடைபெறுகிறது

 இ) வஹட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.

ஈ) மயில்கள் விறவியரைப் போல் ஆடுகின்றன.

விடை :அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்

4. பொருத்துக 

அ) தமிழ் அழகியல்   -1. பரலி சு.நெல்லையப்பர்

ஆநிலவுப்பூ                   --2. தி.சு.நடராசன்

இ) கிடை                          -3.சிற்பி பாலசுப்பரமணியம்

ஈ)உய்யும் வழி              --4. கி.ராஜ நாராயணன்

a) 4,3,2,1     பb . 1,4,2,3        c .24,1,3         d ) 2,3,4,1

விடை :d  ) 2,3,4,1

5. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்

 க) பாண்டியரின் காலத்தில் கொலுவிருந்தது

உ]பொதிகையில் தோன்றியது.

ங) வள்ளல்களைத் தந்தது

அ) க மட்டும் சரி 

ஆ)க, உ மட்டும்  சரி இ) ஙமட்டும் சரி 

ஈ} க, ஙஇரண்டும் சரி 

விடை ஈ} க, ஙஇரண்டும் சரி 

6. BIOCRAPHY என்பதன் தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடுக்கவும். 

அ) நூல் நிரல் ஆ)புனைவு இ)கையெழுத்துப் பிரதி ஈ) வாழ்க்கை வரலாறு

விடை ஈ) வாழ்க்கை வரலாறு

7. தண்டியலங்காரம் .என்பதன் வடமொழி இலக்கண நூலைத் தழுவி

எழுதப்பட்டதாகும் 

அ)நேமி நாதம்

ஆ)அவந்தி சுந்தரி 

இ) காவியதர்சம்

 ஈ)மேகசந்தேசம் 

விடை :இ) காவியதர்சம்

8. கீழ்க்கண்டவற்றுள் சிற்பியின் சாகித்திய அகாடெமி விருது பெற்ற நூல் எது ?

அ)ஒளிப்பறவை

ஆபூஜ்யங்களின் சங்கலி

இ)சூரிய நிழல் 

ஈ)ஒரு கிராமத்து நதி 

விடை; ஈ)ஒரு கிராமத்து நதி 

9. "நுந்தை தந்தைக்கு இவன் தந்தை " என்று பாடும் நூல்

அ)நற்றினை

ஆ)புறநானூறு

இ)அகநானூறு

 ஈ)கலித்தொகை

விடை : ஆ)புறநானூறு

10 . பிழையான தொடரைக் கண்டறிக

அ)காளைகனைப் பூட்டி வயலை உழுதனர்

ஆமலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தார் 

இ)காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது

விடை :இ)காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது

11. கருத்து 1: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு 

கருத்து 2: தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

அ)கருத்து 1 சரி

ஆ)கருத்து 2 சரி

இ)இரண்டு கருத்தும் சரி 

ஈ கருத்து 1 சரி, 2 தவறு

விடை இ)இரண்டு கருத்தும் சரி 

12. பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது என்று கூறியவர்

அ)பாரதிதாசன்                 ஆ)சிற்பி பாலசுப்ரமணியம்

இ)பாரதியார்                         ஈ)பரலி சு.நெல்லையப்பர்

விடை : இ)பாரதியார் 

13. பல் + துளி என்பது எவ்வாறு புனாரும் ?

அ)பஃறு ளி 

ஆ)பல்துளி

இ)பல்றுளி

ஈ)பல துளி

விடை :அ)பஃறு ளி 

14. சிறுகதை ஆசிரியர், முதல் பாதி நவீனம் ?

அ)மறைமலை அடிகள்      இ)ஜெயகாந்தன்

ஆ)புதுமைப்பித்தன்        ஈ)அசோகமித்திரன்

விடை இ)ஜெயகாந்தன்

I/எவையேனும் மூன்றனுக்கு விடை தருக                                                         3x2=6

பகுதி 2

15.நடை அழகியல் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்தைக் குறிப்பிடுக 

  • நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) 
  • என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) 
  • என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
  • கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.
  • மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.

16. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் யாவை 

  • தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்.

17. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

  • செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி

18.விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடர் அமைக்க

  • பூத்துக் குலுங்கும் பூக்களின் மணத்திலும் பறவைகளின் ஒலிகளிலும் விடியலின் வெளிச்சமாக உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும்.

 19.பாரதி நடத்திய இதழ்கள் இரண்டினைக் கூறுக

  • இந்தியா ,விஜயா 

iii . எவையேனும் ஏழனுக்கு விடை தருக                                          7x2=14

20. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய  முயற்சிகள் யாவை? 

  • (i) எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும். ந, ண, ன / ல, ள / ழ, ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
  • (ii) இவ்வெழுத்துக்கள் வரும் முறையையும் அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். எழுதும் போது தொடக்கத்தில் சில காலம் வாய்விட்டோ அல்லது மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது.
  • (iii) வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும், எனவே நிதானமாக எழுதுவது நல்லது.

21. "உள்ளங்கை நெல்லிக்களி போல" என்ற உவமைத்தொடரை சொற்றொடரில் அமைத்து எழுதுக 

விடை 

  • தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாய் விளங்கியது.

22. பொருள் வேறுபாடு அறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக- கிளி, கிலி 

விடை : 

  • இரவில்  கிளிபோல கத்திய சத்தத்தை கேட்டு கண்ணன் மனதில் கிலி(பயம் ) தங்கியது  

23. முடிந்தால் தரவாம், முடித்தால் தரவாம்- இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருள் யாவை?

முடிந்தால் தரலாம் :

  • முடிந்தால் – கொடுக்கும் எண்ணம் (இயன்றால்)
  • ஒரு பொருளைக் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம் என்ற பொருளைத் தருகின்றது.
  • உன்னிடம் உள்ள பொருளைக் கொண்டு ஏழைகளுக்கு உதவ முடிந்தால் தரலாம்.

முடித்தால் தரலாம் :

  • முடித்தால் – செயல் முடிந்த பின்
  • தரப்பட்டுள்ள வேலையை முடித்து விட்டேன் என்றால் தரலாம் என்ற பொருளைத் தருகின்றது.
  • வீட்டின் திறவுகோலை வேலைகளை முடித்தால் தரலாம்.

24. தமிழாக்கம் தருக

I) Knowledge of language is the doorway to wisdom 

II) The limits of my language are the limits of my world 

  • மொழிகளின் அறிவு ஞானத்தின் வழித்தடம்.
  • என் மொழியின் எல்லை என் உலகத்தின் எல்லை.

25. எவையேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக

(i )சாய்ப்பான் II) உயர்ந்தோர்

26. எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக

I)வானமெல்லாம்

வானமெல்லாம் = வானம் + எல்லாம்

  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ம் + எ = மெ) வானெமல்லாம் எனப் புணர்ந்தது.

II) ஆங்கவற்றுள்

ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்

  • ‘உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்’ என்ற விதிப்படி, ஆங்க் + அவற்றுள் என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (க் + அ = க ) ஆங்கவற்றுள் என்று புணர்ந்தது.

27. இலக்கணக்குறிப்பு தருக: 

I) வெங்கதிர்   - பண்புத்தொகை 

   II) வியர்வை வெள்ளம் - உருவகம் 

 28, ஈரொற்றாய் வராத வல்லின மெய்கள் யாவை?

  • ர ,ழ

IV எவை யேனும் மூன்றனுக்கு விடை தருக              3x4 = 12

29.ஓங்கலிடை. வந்து  உயர்ந்தோர் தொழவிளங்கி' என்ற பாடலில் பயின்று வரும் அணியைச் சுட்டி - விளக்குக 

அணி இலக்கணம் :

  • செய்யுளில் கவிஞர் இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறியப்பின் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும். இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

சான்று :

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்

அணிப்பொருத்தம் :

  • கதிரவனும், தமிழ்மொழியும் மலையில் தோன்றுகின்றன என ஒப்புமையைக்கூறி, அவற்றுள் தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இவ்வுலகில் இல்லை என்று வேறுபடுத்திக் காட்டியதால் இப்பாடல் பொருள் வேற்றுமையணி ஆகும்

 30. சங்கப் பாடல்களில ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்கு

  • எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தோன்றுகிறது.
  • சங்கப்பாடல்களில் ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.
  • இதனையே அந்தப் பனுவல் பாடல்களின் ஒலிப்பின்னல் என்கிறோம். இந்த ஒலிக்கோலங்கள் உணர்ச்சிகளைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

கடந்தடு தானை மூவிருங் கூடி

உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;

முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு;

முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;

  • உயிர் ஒலிகள் குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும், இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாக விளங்கியதை உணர்த்தும்.

சான்று : 

  • ‘படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை கடாஅ யானைக்’ – இவ்வரிகள் ஒலிக்கோலத்தின் பண்பை உணர்த்துகிறது.

31. செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்" தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக

  • கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை.
  • ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார்.
  • கதிரவனின் கதிரொளி பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.

32.ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக

இடம் :

  • இப்பாடலின் அடி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.

பொருள் :

  • மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே பொதிகையில் பிறந்து, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் தமிழே உனக்கு நிகர் இல்லை என்கிறார்.

 33.பின்வரும் இருபாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக

  • பழையன கழிதலும் புதியன புகுதலும்   வழுவல கால வகையினானே
- நன்னூல் 
  • மீண்டு மந்தப் பழமைநலம் புதுக்குதற்கு    மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா! 
- சிற்பி பாலசுப்பிரமணியம்
விடை 

அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக         1x4-4 

34. " ஓங்கலிடை" எனத் தொடங்கும் தண்டியலங்கார உரை மேற்கோள் பாடலை அடிபிறழாமல் எழுதுக.

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்


12th tamil Book back Answers

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-1 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-2 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers unit-3 Guide

  • இயல் 3.5 பொருள் மயக்கம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-4 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-5 Guide

  • இயல் 5.1 மதராசப்பட்டினம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-6 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-7 Guide

  • இயல் 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு
  • இயல் 7.4 புறநானூறு
  • இயல் 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
  • இயல் 7.6 தொன்மம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-8 Guide

  • இயல் 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்
  • இயல் 8.2 முகம்
  • இயல் 8.4 சிறுபாணாற்றுப்படை
  • இயல் 8.5 கோடை மழை
  • இயல் 8.6 குறியீடு

Dear visitors we understand your expectations for tamilnadu state board samacheer book 12th Tamil Full Guide solutions book back answers guide.these 12th Tamil book answers guide help for your exam preparation for online study you can get good marks in your Examination.

Share:

Samacheer kalvi Free Online test

Tamilnadu state board samacheer Kalvi Free online test 1st std to 12th std 

Tamilnadu State board Free online test help for your public exam preparation.
Dear students and TNPSC , Tntet, Trb ,tnusrb Competitive exam Writers .these free samacheer Kalvi online test help for your Exam .You can get good Marks in Examination .
In This online test based on new Tamil Nadu syllabus. So kindly use and practice for this online test it's used for your public examination Students are requested to kindly practice this test continuously get more marks for your public examination.

Notes:
  • இந்த online test Kalvikavi,Padavelai.com இணைந்து உருவாக்கியது.
  • பாடநூல் வினாக்கள், பாட உள் வினாக்கள் இரண்டுமே கலந்து ,நீங்கள் சிறந்த முறையில் பயிற்சி செய்து தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கோடு .சிறந்த ஆசிரியர்கள் துணையோடு உருவாக்கப்பட்டது.
  • மீண்டும் மீண்டும் தேர்வுகாலம் வரை,தேர்வில் 100% மதிப்பெண்கள் பெறலாம் என்ற நம்பிக்கை வரும்வரை பயிற்சி செய்யுங்கள்.
  • உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடி பயிற்சி செய்தால் நீண்டகாலம் நினைவில் நிற்கும். 
1st std to 12th std Free online test New samacheer Kalvi 

English Medium and Tamil Medium Free online test

  • 1st  std Free online test - Click Here
  • 2nd std Free Free online test - Click Here
  • 3rd std Free online test - Click Here
  • 4th std Free Free online test - Click Here
  • 5th  std Free online test - Click Here
  • 6th std Free Free online test - Click Here
  • 7th std Free online test - Click Here
  • 8th std Free Free online test - Click Here
  • 9th  std Free online test - Click Here
  • 10th std Free Free online test - Click Here
  • 11th  std Free online test - Click Here
  • 12th std Free Free online test - Click Here








Share:

12th Tamil important one mark questions with answer

12th Tamil one mark questions with answer 


ஒரு மதிப்பெண் வினாக்கள்

செய்யுள், உரைநடை வினாக்கள்

****************************************

1.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கண நூல் 

அ) யாப்பருங்கலக்காரிகை ஆ)தண்டியலங்காரம்  இ) தொல்காப்பியம்   ஈ) நன்னூல்

****************************************

2.மீண்டும் அந்த பழமை நலம் புதுக்குதற்கு" - கவிஞர் குறிப்பிடும் பழமை நலம்

 க. பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது

 உ.பொதிகையில் தோன்றியது

 ங.வள்ளல்களைத் தந்தது 

அ) க மட்டும் சரி     ஆ) க, உ இரண்டும் சரி    இ) ங மட்டும் சரி.    ஈ) க, ங இரண்டும் சரி

****************************************

3."மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று      

      ஏனையது தன்னேரிலாத தமிழ்"

 - இவ்வடிகளில் பயின்றுவந்துள்ள தொடைநயம்

அ) அடிமோனை, அடி எதுகை.  ஆ) சீர் மோனை, சீர் எதுகை

இ) அடி எதுகை, சீர் மோனை.   ஈ) சீர் எதுகை, அடிமோனை

****************************************

4.கருத்து 1 : இயல்பு வழக்கில் தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு

 கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது

அ) கருத்து 1 சரி    ஆ) கருத்து 2 சரி

 இ) இரண்டு கருத்தும் சரி     ஈ) கருத்து 1 சரி, 2 தவறு

****************************************

5.பொருத்துக

நூல். ஆசிரியர்
அ)தமிழ் அழகியல் 1.பரலி.சு.நெ்லையப்பர்
ஆ)நிலவுப்பூ 2.தி.சு.நடராஜன்
இ)கிடை 3.சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ)உய்யும்வழி 4 .கி. ராஜநாராயணன்

அ) 4 3 2 1.   ஆ) 1 4 2 3. இ) 2 4 1 3.   ஈ) 2 3 4 1

****************************************

6.பொருத்துக

1 2
அ) குரங்குகள் கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) பசுக்கள் மரங்களிலிருந்து விழுந்தன
இ) பறவைகள் குளிரால் நடுங்கின
ஈ) விலங்குகள் மேய்ச்சல் மறந்தன


அ) 1 3 4 2.   ஆ) 3 1 2 4    இ) 3 2 1 4.   ஈ) 2 1 3 4

****************************************

7.நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது" - என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது .

அ) சூரிய ஒளிக்கதிர்  ஆ) மழை மேகங்கள்

 இ மழைத்துளிகள்.   ஈ) நீர்நிலைகள்

****************************************

8.வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்.

 அ) பருவநிலை மாற்றம்  ஆ) மணல் அள்ளுதல்

இ) பாறைகள் இல்லாமை.  ஈ) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்

****************************************

9.பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக்குறிப்பு 

அ) வினைத்தொகை ஆ) உரிச்சொல் தொடர்

இ) இடைச்சொல் தொடர்  ஈ)ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

****************************************

10.உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே, புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் - இத்தொடர் உணர்த்துவது

) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது  ஆ) பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது

இ) கால நிலை மாறுபடுகிறது  ஈ) புவியின் இயக்கம் வேறுபடுகிறது 

****************************************

11.சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்க கால சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை___________.

அ) அறவோர், துறவோர்    ஆ) திருமணமும் குடும்பமும் 

இ) மன்றங்களும் அவைகளும்.    ஈ) நிதியமும் சுங்கமும்

****************************************

12.பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

1. 2
அ)உரிமைத்தாகம் 1.பாரசீக கவிஞர்
ஆ)அஞ்ஞாடி 2.பூமணி
இ) ஜலாலுத்தீன் ரூமி 3)பக்தவத்சல பாரதி 
ஈ)தமிழர் குடும்ப முறை 4 .சாகித்திய அகாதெமி
அ) 2 4 31 ஆ) 3 4 1 2 இ) 2 4 1 3 ஈ) 2 3 4 1 
****************************************
13."இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக" என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது

அ) வக்கிரம்    ஆ) அவமானம்    
இ) வஞ்சனை.       ஈ) இவை அனைத்தும்
****************************************
14.உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தார்" - யார்? யார்
அ) சடாயு, இராமன்     ஆ) இராமன், குகன் இ) இராமன்,சுக்ரீவன்.  ஈ)இராமன், சவரி 
****************************************
15.எங்கள் தந்தையர் நாடென்ற 
பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" - என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது 
அ) தனிக் குடும்ப முறை   ஆ) விரிந்த குடும்ப முறை 
இ) தாய்வழிச் சமூக முறை    ஈ) தந்தை வழிச் சமூக முறை
****************************************
16.படத்துக்கு பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க

அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
 பண்பும் பயனும் அது

ஆ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்

இ) சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும் 

ஈ) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
      பிறத்தல் அதனான் வரும்
****************************************
17.கடலின் பெரியது
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
இ) திணை அளவு செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
 ஈ) அவசரத்தில் செய்த உதவி
****************************************
18.பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக:-
நல்லார் நயவர் இருப்ப நயமிலாக் கல்லார்க் கொன்றாகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய் நினைப்ப வருவதொன் றில்
****************************************
) இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளியரா தலும் வேறு 
ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு
 இ) ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினும் தான்முந் துறும்
 ஈ) எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
****************************************
19.கீழ்க்காணும் புதுக்கவிதைகள்    பொருந்தும் திருக்குறளைத் தேர்ந்தெடுக்க
 உயர் அலுவலரின் வருகை
அலுவலகமே அல்லாடும்
அவருடைய சினம் அனைவரும் அறிந்ததே கோப்புகளை விரைந்து முடிக்க
ஒழுங்கு செய்ய
நேரத்தில் இருக்க வேண்டும்
விரைகிறது மனம்
பரபரப்பும் மனவழுத்தமுமாய்
வண்டியை எடுக்கிறேபிற
அ) செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது 
இ) அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 
வேண்டும் பிறன்கைப் பொருள் நகையும் ஈ)உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற
****************************************
20.வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - எதற்கு
அ) செய்யாமல் செய்த உதவி 
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி
இ)) தினைத்துணை நன்றி 
ஈ) செய்ந்நன்றி
****************************************
21.பொருத்துக
1. 2
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் 1.சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி 2.ஞாலத்தின் மாணப் பெரிது
இ) சினம் 3)தெய்வத்துள் வைக்கப் படும்
ஈ) காலத்தினால் செய்த நன்றி 4 .நன்மை கடலின் பெரிது

 அ) 4 3 2 1 ஆ) 3 4 1 2 இ) 1 2 3 4     ஈ) 2 3 4 1
****************************************
22.பின்வருவனவற்றுள் எண்ணும்மை எது ?
அ) அன்பும் அறமும்  ஆ) நன்கலம்   
இ) மறத்தல் ஈ) உலகு
Share:

12th tamil important அணி இலக்கணம்(Ani ilakkanam)

 இலக்கணம் மொழிப் பயிற்சி வினாக்கள்

12th tamil important அணி இலக்கணம்(Ani ilakkanam)


1.பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம்

                           இருவேறு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறி பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி. 

சான்று

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள் 

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது 

தன்னே ரிலாத தமிழ் .

(தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்)

பொருத்தம்

  ஒற்றுமை

                கதிரவனும் தமிழும் இருளைப் போக்குகிறது 

வேற்றுமை

               கதிரவன், உலகின் புற இருளைப் போக்குகிறது.

தமிழ், மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குகிறது.

எனவே, கதிரவனை விட தமிழ் உயர்ந்தது.

**********************************************

2.நிரல்நிறை அணி சான்று தந்து விளக்குக.

அணி விளக்கம் : 

                       சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள் கொள்ளச் செய்வது நிரல்நிறை அணி.

சான்று :  

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது.

பொருத்தம் :

 'அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கை

பண்புடையதாகவும் பயன் மிக்கதாகவும் அமையும் என வரிசை முறைப்படி பொருள் கொள்ளப்படுவதால், இது நிரல்நிறை அணி ஆயிற்று.

**********************************************

3.ஏகதேச உருவக அணியைச் சான்றுடன் விளக்குக:-

 அணி விளக்கம் : 

                         ஒரு பொருளை உருவகம் செய்து, அதற்கு இணையான மற்றொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி.

சான்று

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 

ஏமப் புணையைச் சுடும்.

பொருத்தம்

             சினத்தை நெருப்பாகவும் இனத்தைத் தெப்பமாகவும் உருவகம் செய்த வள்ளுவர் உலக வாழ்க்கையைக் கடலாக உருவகம் செய்யாமல் விட்டுவிட்டேன்.

**********************************************

4.தொழில் உவமை அணியைச் சான்றுடன் விளக்குக .

அணி விளக்கம் : 

                                ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.

சான்று

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

பொருத்தம்

                   இக்குறளில் தீக்காய்தல்' என்னும் செயல் (தொழில்), அரசரோடு பழகுவதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இது தொழில் உவமையணி.

**********************************************

5.உவமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் : 

                       உவமை ஒரு தொடராகவும் உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைந்து உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணி.

சான்று

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று

பொருத்தம்:

உவமை : குடங்கருள் பாம்போடு உடனுறைதல் .

உவமேயம் : உடம்பாடு இலாதவர் வாழ்க்கை.

உவம உருபு : அற்று.

**********************************************

6.எடுத்துக்காட்டு உவமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் : 

                 உவமை ஒரு தொடராகவும் உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைந்து,உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி.

சான்று

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் 

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

பொருத்தம்:

உவமை : துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்

உவமேயம் : நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

உவம உருபு : மறைந்து வந்துள்ளது

**********************************************

7.சொற்பொருள் பின்வருநிலையணியைச் சான்றுடன் விளக்குக. 

அணி விளக்கம்

                செய்யுளில், வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து, தந்த பொருளையே தருவது சொற்பொருள் பின்வருநிலையணி.

சான்று 1 : 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருத்தம்

           இக்குறளில், 'பொருள்' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து, தந்த பொருளையே தருகிறது.

சான்று 2

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

பொருத்தம்

              இக்குறளில், 'எண்ணிய' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து, 'நினைத்த எனத் தந்த பொருளையே தருகிறது.

**********************************************

12th tamil Book back Answers

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-1 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-2 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers unit-3 Guide

  • இயல் 3.5 பொருள் மயக்கம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-4 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-5 Guide

  • இயல் 5.1 மதராசப்பட்டினம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-6 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-7 Guide

  • இயல் 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு
  • இயல் 7.4 புறநானூறு
  • இயல் 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
  • இயல் 7.6 தொன்மம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-8 Guide

  • இயல் 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்
  • இயல் 8.2 முகம்
  • இயல் 8.4 சிறுபாணாற்றுப்படை
  • இயல் 8.5 கோடை மழை
  • இயல் 8.6 குறியீடு

Dear visitors we understand your expectations for tamilnadu state board samacheer book 12th Tamil Full Guide solutions book back answers guide.these 12th Tamil book answers guide help for your exam preparation for online study you can get good marks in your Examination.

12th Tamil இயல்-1 முதல் இயல்-9 வரை இலக்கண குறிப்புகள். Click here

12th Tamil important 4 mark -தமிழாக்கம்,கலைச்சொல் தருக:-Click here


Share:

12th Tamil - இயல்-1 முதல் இயல்-9 வரை - இலக்கண குறிப்பறிதல் அனைத்தும்

 இலக்கணக் குறிப்பு அறிக

12th Tamil - இயல்-1 முதல் இயல்-9 வரை - இலக்கண குறிப்பறிதல் அனைத்தும்


* பண்புத்தொகைகள்:-

  1. அருந்திறல்
  2. கருந்தடம், 
  3. கொடுங்கோல்,
  4.  செம்பரிதி, 
  5. செந்தமிழ், 
  6. செந்நிறம் 
  7. தொல்நெறி, 
  8. நன்கலம், 
  9. நன் மொழி, 
  10. நன்னாடு, 
  11. நெடுவழி, 
  12. நெடுவேல், 
  13. பெருங்கடல், 
  14. புதுப்பெயல்
  15. வெங்கதிர், 
  16. வெங்குருதி, 
  17. வெள்ளருவி, 
  18. வெண்குடை, 
  19. சிறுகுடி

வினைத்தொகைகள் :-

  1.  காய்நெல், 
  2. தாழ்கடல், 
  3. வயங்குமொழி, 
  4. வளர்தலம், 
  5. விரிகடல்

தொழிற்பெயர்கள் :-

  1. நகை, 
  2. அழுகை, 
  3. இளிவரல், 
  4. மருட்கை, 
  5. அச்சம், 
  6. பெருமிதம், 
  7. வெகுளி, 
  8. உவகை, 
  9. சொல்லுதல், 
  10. மலைதல், 
  11. மறத்தல், 
  12. அல்லல், 
  13. மறத்தல்
வினையாலணையும் பெயர்கள் :-

  1. உயர்ந்தோர், 
  2. செற்றவர், 
  3. பாதகர். 
  4. வாழ்பவன்


அடுக்குத்தொடர்கள்:-

  1. ஊன்ற ஊன்ற, 
  2. முத்து முத்தாய், 
  3. வேறு வேறு, 
  4. யார் யார் 
  5. கொஞ்சம் கொஞ்சமாக

உரிச்சொல் தொடர்கள்-:-

  1. தடக்கை, 
  2. மாதவம், 
  3. மாமயிலை


எண்ணும்மைகள்

  1. அறிவும் புகழும், 
  2. அன்பும் அறமும், 
  3. ஆடலும் பாடலும், 
  4. பண்பும் பயனும்
  5. வையகமும் வானகமும், 
  6. நகையும் உவகையும், 
  7. தேமாவும் புளிமாவும் 
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

  1. அரவக்கடல்
  2. கழற்கால்

பெயரெச்சம்  - 

  1. ஈந்த, 
  2. கொடுத்த, 
  3. சொற்ற, 
  4. திருந்திய, 
  5. புக்க, 
  6. வாய்த்த, 
  7. கண்ட, 
  8. கொல்லும் சினம்
  9. சலிக்கும் காற்று


ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - 

  1. அடையா, 
  2. அறியா, 
  3. பொய்யா, 
  4. உள்ளழிக்க லாகா
  5. மறவா - 

வினையெச்சம்

  1. சிவந்து, 
  2. சினந்து, 
  3. வெந்து, 
  4. உவப்ப(மகிழ) (இயல் 8), 
  5. போந்து (இயல் 8)
  6. தொடங்க

உவமைத்தொகை 

  1. கடல்தானை, 
  2. மலரடி

உருவகம்

  1. வியர்வை வெள்ளம்

இசைநிறை அளபெடை

  1. உழாஅது, 
  2. கவாஅன், 
  3. சிறாஅர்

இன்னிசை அளபெடை

  1. எடுப்பதூஉம் 
சொல்லிசை அளபெடை

  1. ஒரீஇ, வளைஇ, 
  2. வெரீஇய

இடைக் குறை

  1. இலாத, 
  2. உளது

மரூஉ

  1. நுந்தை

ஆகுபெயர்

  1. உலகு, 
  2. நீலம்

முன்னிலைப் பன்மை வினைமுற்று

  1. உன்னலிர் 

ஏவல் வினைமுற்று

  1. ஓர்மின், 
  2. செலுத்து
இடைக்குறைவிகாரம்

  • பொருள் எலாம்

  • நிகர் அலன்

. பண்புத்தொகை

  1. 1. செங்கயல்

  2. 2. வெண்சங்கு

  3. 3. அரும்பிணி

  4. 4. செஞ்ஞாயிறு

  5. பெருங்கலம்

  6. பெருவழி -

  7. வெண்சுவை

  8. தீம்பால் -

  9. 9. பெரும்புகழ்

  10. 10. தெண்டிரை 11. நெடுங்குன்று

  11. 12. பேரன்பு

  12. 13. நன்னாடு

  13. கருங்கடல் ின்

  14. 15. பெருந்துயர்

  15. 16. வெங்கணை

  16. 17. செங்கை

  17. 18. வெவ்வினை

  18. 19. இளமுகம்

  19. நல்லூண்

  20. 21. சிறுபுல்

  21. பேரழகு -

  22. 23. முந்நீர்

  23. 24. நன்மண்

  24. அருஞ்சமம்

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories