1. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக
விடை:
தாயே! தமிழே! வணக்கம்
தாய் மகன் உறவு அம்மா, உனக்கும் எனக்கும் செய்யுள் ஒன்றனை இயற்றும் போது தெய்வத்தையோ, இயற்கையை, உயந்தாரையோ நாட்டையோ, மொழியை வாழ்த்திப் தொடங்குவது கவிஞர்களின் இயல்பு. இங்கு இரு கவிஞர்களின் வாழ்த்துப் பாடல்கள் பற்றி ஆய்ந்து ஒப்பிடுவோம்.
நாடு மொழி:
பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ் மொழி மொழியாகவும் செந்தமிழ் ஆகவும், நற்கனி ஆகவும், பேரரசாகவும், பாண்டியனின் மகனாகவும், திருக்குறள் பெருமைக்குரியவளாகவும் ஒப்புமைப்படுத்திக் காட்டியுள்ளார்.
மனோன்மணீயம் சுந்தரனார் தமிழ் நிலத்தைப் பெண்ணாக உருவகம் செய்துள்ளார்
அந்நிலப்பெண் கடலை ஆடையாக அணிந்துள்ளாள். அவள் நெற்றியிலிட்ட பொட்டு மணம் வீசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மணம் எல்லாத் திசைகளிலும் புகழ் மணக்கும்படி இருக்கும் தமிழ் பெண்ணே என்ற பெண் தெய்வத்திற்கு ஒப்பிட்டுள்ளார் பெருமை
திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, நிலைத்த சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களின் மூலம் பொங்கி எழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகிறோம் என்று பாவலரேறு வாழ்த்துகிறோம்.
பெருமையை பரப்புதல்:
பழம்பெருமையும், தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டதாகவும் தமிழ் உள்ளது. நீண்ட நிலைத்த தன்மையும் கொண்ட தமிழ் மொழி, உள்ளத்தில் கனல் மூள, வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.
தமிழ்ப் பெண்ணே இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உனது புகழைப் போற்றுவோம் நிறைவாக.
சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
என்று கவிஞர் க. சச்சிதானந்தன் கூறுவதற்குக் காரணம் கூட தமிழின் மேற்கண்ட சிறப்புகளே என்று கூறலாம்.
#10th #important_neduvina
1 Comments
10th guide
ReplyDelete1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.