TN 7th Tamil Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment

TN 7th Tamil Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment 

Students can Download 7th  Assignment Answers and Question paper unit 1.Tamil medium and English Medium

TNSCERT 7th Tamil Assignment PDF Download with answer Tamil Medium , English Medium 

TN 7th Tamil Assignment  Question paper ,answer key

7th Tamil TN SCERT Unit 1 Answers

ஒப்படைப்பு

  • வகுப்பு - 7
  • பாடம்: தமிழ்
  • இயல்: 1

பகுதி அ

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுது

1. ஒரு மதிப்பெண் வினாக்கள்.

1. தமிழ்மொழியின் குறிக்கோளாக வெ.இராமலிங்கனார் கூறுவது யாது?
அ) பொய்யாமை 
ஆ) கொல்லாமை
இ) எள்ளாமை
ஈ) தள்ளாமை
  • விடை : ஆ ) கொல்லாமை
2. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
அ) வெ.இராமலிங்கனார் 
ஆ) ஈ.வெ.இராமசாமி
இ) பாரதியார்
ஈ) இராமலிங்க அடிகளார்
  • விடை : அ ) வெ.இராமலிங்கனார்
3. பெருஞ்செல்வம் - இச்சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது எது?
அ) பெரு+செல்வம்
ஆ) பெருஞ்+செல்வம்
இ) பெரிய+செல்வம்
ஈ) பெருமை+செல்வம்
  • விடை :  ஈ ) பெருமை +  செல்வம்
4. முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரிவான் முகிலினும் புகழ் படைத்த உபகாரி- 
இவ்வடிகளில் 'வள்ளல்' என்னும் பொருள் தரும் சொல் யாது?
அ) கொடுத்தான்
ஆ) உபகாரி
இ) முகில்
ஈ) வேல்பாரி
  • விடை :  ஆ ) உபகாரி 
5. மொழியின் இரண்டாம் நிலை யாது?
அ) பேசுதல், எழுதுதல்
ஆ) கேட்டல், பேசுதல்
இ) படித்தல், எழுதுதல்
ஈ) உணர்தல், பேசுதல்
  • விடை : இ ) படித்தல் , எழுதுதல்
6. எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உளவாகும் - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் யாது?
(அ) நன்னூல் 
ஆ) தொல்காப்பியம் 
இ) ஒன்றல்ல இரண்டல்ல 
ஈ) எங்கள் தமிழ்
  • விடை :  அ ) நன்னூல்
7. குறில் எழுத்துகளைக் குறிப்பதற்குப் பயன்படும் அசைச்சொல் யாது?
அ) காரம்
ஆ) கரம்
இ) கான்
ஈ) கேனம்
  • விடை  :  ஆ ) கரம்
8. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க.
அ) பட்டு
ஆ) கன்று 
இ) பந்து
ஈ) சங்கு
  • விடை :  ஆ ) பட்டு
9. தற்போது உரைநடை வழக்கில் இல்லாத இலக்கணம் எது?
அ) குற்றியலுகரம்
ஆ) குற்றியலிகரம்
இ) முற்றியலுகரம் 
ஈ) ஐகாரக்குறுக்கம்
  • விடை : ஆ ) குற்றியலிகரம்
10. குற்றியலுகரம் குற்றியலிகரமாக மாறும்போது பெறும் மாத்திரை அளவு யாது?
அ) ஒன்று
ஆ) இரண்டு 
இ) கால்
ஈ )  அரை
  • விடை : ஈ ) அரை

                                 பகுதி - ஆ

II. குறுவினா

1. வெ.இராமலிங்கனார், ஏன் காந்தியக்கவிஞர் என அழைக்கப்படுகிறார்?

  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.

2. நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்கள் சிலவற்றைக் எழுதுக.

  • மலைக்கள்ளன்
  • நாமக்கவிஞர் பாடல்கள்
  • என் கதை 
  • சங்கொலி 

3. ஒன்றல்ல இரண்டல்ல-பாடலில் இடம்பெற்றுள்ள நூல்களின் பெயர்களைக் கூறுக.

  • பரணி 
  • பரிபாடல் 
  • கலம்பக நூல்கள் 
  • எட்டுத்தொகை 
  • திருக்குறள்

4. மொழியின் முதல்நிலை யாது?

  • வாயினால்  பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும். இவ்வாறு பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலை ஆகும்.

5. தமிழை இரட்டைவழக்கு மொழி என அழைக்கக் காரணம் யாது?

  • தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு. இதுவே  , தமிழை இரட்டை வழக்கு மொழி என அழைக்கக் காரணம் ஆகும்.

6. எழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  •  எழுத்துகள் இரண்டு வகைப்படும்.
அவை ,  1 . முதலெழுத்து 
                  2 . சார்பெழுத்து 

7. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் ஏதேனும் ஒன்றனைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

  • அதிர அதிர அடிச்சா உதிர விளையும் அது மாதிரி முயற்சி செய்தால் எல்லாம் சிறப்பாக முடியும்.

                               பகுதி - இ

III. பெருவினா

1. உடுமலை நாராயணகவி குறித்துக் குறிப்பு வரைக.

  • பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்
  • தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியராகவும் , நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.
  • தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பியவர்.
  • நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

2 ) சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ? 

  • சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.அவை :
1 ) உயிர்மெய் 
2 ) ஆய்தம் 
3 ) உயிரளபெடை
4 ) ஒற்றளபெடை 
5 ) குற்றியலுகரம் 
6 ) குற்றியலிகரம்
7 ) ஐகாரக்குறுக்கம்
8 ) ஔகாரக்குறுக்கம்
9 ) மகரக்குறுக்கம்
10 ) ஆய்தக் குறுக்கம்.

                  பகுதி - ஈ 

IV . செயல்பாடு 

பின்வரும் பாடலைப்படித்து , வினாக்களுக்கு விடையளிக்க.

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே !
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே !
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே ! 
உணர்வினுக் குணர்வ தாய் ஒளிர்தமிழ் மொழியே !
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே !
மாந்தருக் கிருகண்ணா வயங்குநன் மொழியே !
தானனி சிறப்புறும் தனித்தமிழ் மொழியே !
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே !

வினக்கள்.

1 ) தமிழுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிகள்:

  நற்செந்தமிழ் மொழியே ! 

  •  தென்மொழியே !
  • ஒண்டமிழ் மொழியே ! 
  • ஒளிர்தமிழ் மொழியே !
  • நன்மொழியே !
  • தனித்தமிழ் மொழியே !
  • தண்டமிழ் மொழியே !
2 ) எதுகை நயம் .
  • தேனினும்   - னி -  எதுகை
  • ஊனினும்
  • வானினும் 
3 ) வண்டமிழ் - பிரித்து எழுதுக.
  • வண்மை + தமிழ் 
4 ) நம் செந்தமிழ் மொழி ------- விட இனிமையானது.
  • விடை : தேனை விட 
5 ) மக்களுக்கு மொழி இன்றியமையாதது என்பதை உணர்த்தும் வரி.
  • மாந்தருக் கிருகண்ணா வயங்குநன் மொழியே !
 


மேலே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுக்கான வினாக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...