10th Tamil Guide Unit 4 - செயற்கை நுண்ணறிவு

10th Tamil Guide Unit 4 - செயற்கை நுண்ணறிவு

4.1. செயற்கை நுண்ணறிவு

 I. பலவுள் தெரிக

1.தலைப்பு : செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

  1. தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
  2. குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
  3. தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
  4. குறிப்புகளுக்குத் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

விடை : தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

2. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

  1. துலா
  2. சீலா
  3. குலா
  4. இலா

விடை : இலா

II. குறுவினா

1. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா.

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்

1. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதன் (Robo – ரோபோ)

2. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் திறன்பேசி (Smart Phone)

III. சிறுவினா

1. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்தவில்லை.

அது மனிதனுக்குரியத் தேவைகளை மட்டுமே மேம்படுத்தி இருக்கிறது.

அறிவியலால் இன்று மனிதன் மனிதனாக வாழவில்லை.

இயந்திரம் மனிதனாகிவிட்டது. மனிதன் இயந்திரம் ஆகிவிட்டான்.

மனித நேயத்தையும் அன்பையும் இரக்கத்தையும் இன்றைய மனிதனிடம் பார்க்க முடியவில்லை.

பணிகளால் அவன் எந்திரத்தைப் போல ஓடிக்கொண்டே உள்ளான்.

2. மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில் நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனிதகுலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு ‘எதிர்காலத் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் எழுதுக.

எதிர்காலத் தொழில் நுட்பம்

உயரினங்களில் மனிதரை உயர்த்திக் காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! அந்தச் சிந்தனைக்குத் தொழில்நுட்பமும் துணை செய்கிறது. திறன்பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி உதவி செய்கிறது.

நாம் சொல்கிறவர்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கும். நாம் திறக்க கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும். நாம் கேட்பதை உலாவியல் தேடும், நாம் விரும்பும் அழகா கவிதைகளை இணையத்தில் தேடித்தரும். எந்தக்கடையில் எது விற்கும் என்று சொல்லும். படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும். நாம் எடுத்த ஒளிப்படங்களை பற்றிப் பட்டியிலிடும்.

எதிர்காலத்தில் நம் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் உதவு மென்பொருள் நம்மை நன்கு அறிந்திருக்கும்.

IV. நெடுவினா

1.ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் ‘செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்’ பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

 

குறிப்புச் சட்டம்

முன்னுரை

ஊர்திகளை இயக்குதல்

மனிதர்களிடம் போட்டி

கல்வித்துறை

பிற செயல்பாடுகள்

வேலை வாய்ப்புகளில்மாற்றம்

இயந்திர மனிதனிடம் குழந்தை

தோழனாய் இயந்திர மனிதன்

உயிராபத்தை விளைவித்தல்

வணிக வாய்ப்புகள்

முடிவுரை

முன்னுரை:-

ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளும் வெறும் வணிகத்துடன் அது நின்றுவிடாது. செயற்கை நுண்ணறிவின் வெளிப்பாடுகள் இனி மிகுதியாக இருக்கும்.

ஊர்திகளை இயக்குதல்:-

எதிர்காலத்தில் நாம் இயக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும்.

இத்தகைய ஊா்திகள் ஏற்படுத்தும் விபத்து குறையும்.

போக்குவரத்து நெரிசல் இருக்காது.

பயண நேரம் குறையும்.

எரிபொருள் மிச்சப்படும்.

மனிதர்களிடம் போட்டி:-

மென்பொருள்கள், கவிதைகள், கதைகள் விதவிதமான எழுந்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு மனிதர்களிடம் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை

கல்வித்துறை:-

கல்வித்துறையில் இத்தொழில் நுட்பத்தைப் பல விதங்களில் பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன.

பிற செயல்பாடுகள்:-

விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதன் அளிக்கும் சேவையை இயந்திர மனிதன் செய்யும்.

நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்குப் பொம்மை கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவது எனப் பலவற்றையும் செய்யும் நிலை வரும்

வேலை வாய்ப்புகளில் மாற்றம்:-

வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றத்தை எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும்.

இயந்திர மனிதனிடம் குழந்தை:-

எதிர் காலத்தில் இயந்திர மனிதனிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அலுவலகம் செல்லும் பெற்றோரைப் பார்க்க முடியும்.

தோழனாய் இயந்திர மனிதன்:-

வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும், அவர்களுக்கு உற்ற தோழனாய் பேச்சுக் கொடுத்தும் பேணும் இயந்திர மனிதர்களை நாம் பார்க்க முடியும்.

உயிராபத்தை விளைவித்தல்:-

செயற்கை நுண்ணறிவுள்ள இயந்திர மனிதர்களால், மனிதர் செய்ய இயலாத அலுப்புத் தட்டக்கூடிய கடினமான செயல்களையும் செய்ய முடியும்.

மனித முயற்சியல் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களையும் செய்ய முடியும்.

வணிக வாய்ப்புகள்:-

பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திக் கொடுக்கும்.

முடிவுரை:-

செயற்கை நுண்ணறிவு சாதனங்களால் மனிதனின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு – கூடுதல் வினாக்கள்  

I. குறு வினா

1. மின்னணுப் புரட்சிக்கான காரணங்களைக் கூறுக

1980-ல் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் வளர்ச்சி

இணையப் பயன்பாட்டின் பிறப்பு

இவையே இன்றைய மின்னணுப் புரட்சிக்கான காரணங்களாகும்.

2. வேர்டுஸ்மித் குறிப்பு வரைக

இதழியலில் மொழி நடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் வேர்டுஸ்மித்

இதற்கு “எழுத்தாளி” என்று பெயர்

இதில் தகவல்களை கொடுத்தால் மட்டும் போதும் சில நொடிகளிலேய கட்டுரையை உருவாக்குகின்றன

3. வாட்சன் குறிப்பு வரைக

2016-ல் ஐபிஎம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினி வாட்சன்.

சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

4. செயற்கை நுண்ணறிவு நமக்கு எப்படி அறிமுகமாகிறது?

சமூக ஊடகங்கள்

மின்னணு சந்தைகள் மூலம் செயற்கை நுண்ணறிவு நமக்கு அறிமுகமாகிறது

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக 

1.பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ) மின்ன ணுப் புரட்சி – 1. Browser

ஆ)செயல்திட்ட வரைவு – 2. Data

இ) உலாவி – 3. Computer Program

ஈ) தரவு – 4. Digital Revolution

அ) 1, 4, 3, 2

ஆ) 4, 1, 2, 3

இ) 4, 3, 2, 1

ஈ) 2, 4, 1, 3

Answer:

இ) 4, 3, 2, 1

 

2.பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) பெப்பர் ஜப்பான் சாப்ட் வங்கி

ஆ) வாட்சன்

ஐ.பி.எம். நிறுவனம்

இ) இலா – பாரத ஸ்டேட் வங்கி

ஈ) பெப்பர்

புற்றுநோயைக் கண்டுபிடித்தது

Answer:

ஈ) பெப்பர் – புற்றுநோயைக் கண்டுபிடித்தது

 

3.சீன நாட்டில் சூவன்சௌ துறைமுக நகரில் கட்டப்பட்ட கோயில்…………………………

அ) சிவன் கோயில்

ஆ) பெருமாள் கோயில்

இ) முருகன் கோயில்

ஈ) பிள்ளையார் கோயில்

Answer:

அ) சிவன் கோயில்

 

4.உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின்…………………………

அ) சிந்தனை ஆற்றல்

ஆ) செல்வம்

இ) வாழ்நாள்

ஈ) ஆற்றல்

Answer:

அ) சிந்தனை ஆற்றல்

 

5.…………………………களில் ஒவ்வொருவருக்குமான தனி நபர் கணினிகளின் வளர்ச்சியும், இணையப் பயன்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் காரணமாயின.

அ) 1970

ஆ) 1960

இ) 1980

ஈ) 1950

Answer:

இ) 1980

 

6.இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில் நுட்பம்…………………………

அ) செயற்கை நுண்ணறிவு

ஆ) மென்பொருள்

இ) மீத்திறன் நுண்ண றிவு

ஈ) முகநூல், புலனம் போன்றவை

Answer:

அ) செயற்கை நுண்ணறிவு

 

7.இயல்பான மொழிநடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளின் பெயர்…………………………

அ) வேர்டுஸ்மித்

ஆ) வேர்டுபீட்டர்

இ) வேட்ஸ்வொர்த்

ஈ) வேர்ல்டுஸ்மித்

Answer:

அ) வேர்டுஸ்மித்

 

8.வேர்டுஸ்மித் என்பதைத் தமிழில் ………………………… என்று அழைப்பர்.

அ) எழுத்தாளி

ஆ) எழுத்தாணி

இ) எழுத்தோவியம்

ஈ) குரலாளி

Answer:

அ) எழுத்தாளி

 

9.இதழியலில் செயற்கை நுண்ணறிவு செய்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றங்களில் ஒன்று…………………………

அ) இயல்பான மொழிநடை

ஆ) கடினமான மொழிநடை

இ) தாய்மொழிநடை

ஈ) உலக மொழிகள் இணைப்பு

Answer:

அ) இயல்பான மொழிநடை

 

10.2016 இல் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்த ஐ.பி.எம். நிறுவனத்தின் கணினியின் பெயர்…………………………

அ) வாட்சன்

ஆ) வேர்டுஸ்மித்

இ) ஸ்டீவ்ஸ்மித்

ஈ) பெப்பர்

Answer:

அ) வாட்சன்

 

11.செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன் சில நிமிடங்களில் ………………………… தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

அ) இருபதாயிரம்

ஆ) இரண்டு இலட்சம்

இ) இரண்டு கோடி

ஈ) இருபது கோடி

Answer:

இ) இரண்டு கோடி

 

12.…………………………உதவியாளர்களை ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்று பாரதியார் மெச்சுவதுபோல் மெச்சிக்கொள்ளலாம்.

அ) மெய்நிகர்

ஆ) பொய் நிகர்

இ) செயற்கை

ஈ) முதன்மை

Answer:

அ) மெய்நிகர்

 

13.இவ்வுலகை இதுவரை…………………………ஆண்டு கொண்டிருக்கிறது; இனிமேல் ………………………… தான் ஆளப்போகிறது.

அ) மென்பொருள், செயற்கை நுண்ணறிவு

ஆ) செயற்கை நுண்ணறிவு, மென்பொருள்

இ) நுண்ண றிவு, முகநூல்

ஈ) முகநூல், புலனம்

Answer:

அ) மென்பொருள், செயற்கை நுண்ணறிவு

 

14.செயற்கை நுண்ணறிவின் மிகுதியான வளர்ச்சியால் ………………………… தேவை கூடியுள்ளது.

அ) மெய்நிகர் உதவியாளர்களின்

ஆ) தரவு அறிவியலாளர்களின்

இ) உதவியாளர்களின்

ஈ) அறிவியலாளர்களின்

Answer:

ஆ) தரவு அறிவியலாளர்களின்

 

15.ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்…………………………

அ) வாட்சன்

ஆ) பெப்பர்

இ) சோபியா

ஈ) வேர்டுஸ்மித்

Answer:

ஆ) பெப்பர்

 

16.உலக அளவில் அதிகம் விற்பனையாகும் ரோபோ…………………………

அ) வாட்சன்

ஆ) பெப்பர்

இ) இலா

ஈ) சோபியா

Answer:

ஆ) பெப்பர்

 

17.பெப்பர் ரோபோக்களின் மூன்று வகையினுள் பொருந்தாததைக் கண்டறிக.

அ) வீட்டுக்குப் பயன்படுவது

ஆ) வணிகத்துக்குப் பயன்படுவது

இ) படிப்புக்குப் பயன்படுவது

ஈ) நாட்டுக்குப் பயன்படுவது

Answer:

ஈ) நாட்டுக்குப் பயன்படுவது

 

18.இந்தியாவின் பெரிய வங்கி…………………………

அ) இந்தியன் வங்கி

ஆ) பாரத ஸ்டேட் வங்கி

இ) கனரா வங்கி

ஈ) பரோடா வங்கி

Answer:

ஆ) பாரத ஸ்டேட் வங்கி

 

19.‘இலா’ என்ற உரையாடு மென்பொருளை உருவாக்கியது…………………………

அ) ஐ.பி.எம். நிறுவனம்

ஆ) பாரத ஸ்டேட் வங்கி

இ) ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்

ஈ) சாப்ட் வங்கி

Answer:

ஆ) பாரத ஸ்டேட் வங்கி

 

20.இதழியலில் இயல்பான மொழிநடையை உருவாக்கும் மென்பொருள்…………………………

அ) வாட்சன்

ஆ) வழிகாட்டி வரைபடம்

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

ஈ) பெப்பர்

Answer:

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி

 

21.தகவல்களைக் கொடுத்தால், அழகான சில கட்டுரைகளை உருவாக்கும் மென்பொருள்…………………………

அ) வாட்சன்

ஆ) வழிகாட்டி வரைபடம்

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

ஈ) பெப்பர்

Answer:

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

 

22.2016 இல் ஐ.பி.எம். நிறுவனத்தின் நுண்ண றிவுக் கணினி…………………………

அ) வாட்சன்

ஆ) வழிகாட்டி வரைபடம்

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

ஈ) பெப்பர்

Answer:

அ) வாட்சன்

 

23.50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களைப் பணியமர்த்தியுள்ள நாடு…………………………

அ) இந்தியா

ஆ) சீனா

இ) அமெரிக்கா

ஈ) ஜப்பான்

Answer:

ஆ) சீனா

 

24.செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு…………………………

அ) வன்பொருள்

ஆ) மென்பொருள்

இ) இயந்திர மனிதன்

ஈ) கணினி

Answer:

ஆ) மென்பொருள்

 

25.“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்று பாடியவர்…………………………

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கவிமணி

ஈ) வைரமுத்து

Answer:

அ) பாரதியார்

 

26.‘இலா’ மென்பொருள் ஒரு விநாடிக்கு உரையாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை…………………………

அ) பத்தாயிரம்

ஆ) ஆயிரம்

இ) ஐயாயிரம்

ஈ) பத்து

Answer:

அ) பத்தாயிரம்

 

27.சாப்ட் வங்கி உருவாக்கிய நாடு…………………………

அ) இந்தியா

ஆ) சீனா

இ) அமெரிக்கா

ஈ) ஜப்பான்

Answer:

ஈ) ஜப்பான்

 

28.பெப்பர் என்பது ஒரு…………………………

அ) வன்பொருள்

ஆ) மென்பொருள்

இ) இயந்திர மனிதன்

ஈ) கணினி

Answer:

இ) இயந்திர மனிதன்

 

29.ஜப்பானில் வரவேற்பாளராகவும் பணியாளராகவும் உள்ள இயந்திர மனிதன்

அ) வாட்சன்…………………………

ஆ) இலா

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

ஈ) பெப்பர்

Answer:

ஈ) பெப்பர்

 

30.ஜப்பானில் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவுவிடுதிகளிலும் பயன்பாட்டில் உள்ள இயந்திர மனிதன்…………………………

அ) வாட்சன்

ஆ) இலா

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

ஈ) பெப்பர்

Answer:

ஈ) பெப்பர்

 

31.காண்டன் நகர் அமைந்துள்ள நாடு…………………………

அ) இந்தியா

ஆ) சீனா

இ) அமெரிக்கா

ஈ) ஜப்பான்

Answer:

ஆ) சீனா

 

32.தமிழ்க் கல்வெட்டு காணப்படும் பிற நாடு…………………………

அ) ஆஸ்திரேலியா

ஆ) சீனா

இ) அமெரிக்கா

ஈ) ஜப்பான்

Answer:

ஆ) சீனா

 

33.பண்டையத் தமிழர் அடிக்கடி வணிகத்திற்காகச் சென்று வந்த சீன நகர்…………………………

அ) காண்டன்

ஆ) சூவன்சௌ

இ) குப்லாய்கான்

ஈ) பெய்ஜிங்

Answer:

ஆ) சூவன்சௌ

 

34.சீனப்பேரரசர்………………………… 

அ) காண்டன்

ஆ) சூவன்சௌ

இ) குப்லாய்கான்

ஈ) பெய்ஜிங்

Answer:

இ) குப்லாய்கான்

 

35.சீனாவில் சிவன் கோவில் கட்டிய சீனப்பேரரசர்…………………………

அ) காண்டன்

ஆ) சூவன்சௌ

இ) குப்லாய்கான்

ஈ) பெய்ஜிங்

Answer:

இ) குப்லாய்கான்

 

36.பொருத்துக.

1. பெப்பர் – அ) கட்டுரை உருவாக்கும் மென்பொருள்

2. எழுத்தாளி – ஆ) இயந்திர மனிதன்

3. இலா – இ) நுண்ணறிவுக் கணினி

4. வாட்சன் – ஈ) வாடிக்கையாளர்களுடன் உரையாடும் மென்பொருள்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

 

37.ஸ்மார்ட்போன் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்…………………………

அ) திறன் பேசி

ஆ) தொலைபேசி

இ) அலைபேசி

ஈ) செல்பேசி

Answer:

அ) திறன் பேசி

 

38.…………………… தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவும் நம்மை வளப்படுத்த உதவும்.

அ) மூன்றாவது

ஆ) நான்காவது

இ) ஐந்தாவது

ஈ) இரண்டாவது

Answer:

ஆ) நான்காவது

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...