10th Tamil Guide Unit 5.5 - வினா, விடை வகைகள், பொருள்கோள்

10th Tamil Guide Unit 5.5 - வினா, விடை வகைகள், பொருள்கோள்

I. பலவுள் தெரிக.

1.”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது ………… வினா.

“அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது ………. விடை.

ஐயவினா, வினா எதிர் வினாதல்

அறிவினா, மறை விடை

அறியா வினா, சுட்டு விடை

கொளல் வினா, இனமொழி விடை

விடை : அறியா வினா, சுட்டு விடை

II. குறு வினா

1.இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?

இதோ… இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே!மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

விடை

அ) மின்விளக்கின் சொடுக்கி எந்தபக்கம் இருக்கிறது? – அறியா வினா

ஆ) இதோ… இருக்கிறதே! – சுட்டு விடை

இ) சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறா, இல்லையா? – ஐய வினா

III. சிறு வினா

1.முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

இப்பாடலில் அமைந்துள்ள பொருள்கோள் ஆற்றுநீர்ப் பொருள்கோள்

பொருள்கோள் இலக்கணம்

பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்று நீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைதல் ஆற்றுநீர்ப பொருள்கோள்

பொருள்கோள் விளக்கம்

இப்பாடலில் முயற்சி செல்வத்தை தரும். முயற்சி செய்யாமை வறுமையைத் தரும் என்று பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகப் பொருள் கொள்ளும் முறையில் அமைந்திருப்பதால் அது ஆற்று நீரப்பொருள்கோள் ஆயிற்று.

வினா, விடை வகைகள், பொருள்கோள் – கூடுதல் வினாக்கள்

1. வினா எத்தனை வகைப்படும் அவை யாவை?

வினா ஆறு வகைப்படும்.

அவை

  1. அறி வினா
  2. அறியா வினா
  3. ஐய வினா
  4. கொளல் வினா
  5. கொடை வினா
  6. ஏவல் வினா

2. அறி வினா என்றால் என்ன? எ.கா தருக

தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது.

எ.கா:-

மாணவரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல்.

3. அறியா வினா என்றால் என்ன? எ.கா தருக

தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது.

எ.கா:-

ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று மாணவர் கேட்டல்.

4. கொளல் வினா என்றால் என்ன? எ.கா தருக

தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது

எ.கா:-

‘ ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா ?’ என்று நூலகரிடம் வினவுதல்.

5. ஐயா வினா என்றால் என்ன? எ.கா தருக

ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது.

எ.கா:-

‘இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?’ என வினவுதல்.

6. கொடை வினா என்றால் என்ன? எ.கா தருக

பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது

எ.கா:-

‘என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?’ என்று கொடுப்பதற்காக வினவுதல்.

7. ஏவல் வினா என்றால் என்ன? எ.கா தருக

ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது.

எ.கா:-

“வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்.

8. விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை எட்டு வகைப்படும்.

அவை

  1. சுட்டு விடை
  2. மறை விடை
  3. நேர் விடை
  4. ஏவல் விடை
  5. வினா எதிர் வினாதல் விடை
  6. உற்றது உரைத்தல் விடை
  7. உறுவது கூறல் விடை
  8. இனமொழி விடை

9. சுட்டு விடை என்றால் என்ன? எ.கா. தருக

சுட்டிக் கூறும் விடை

எ.கா:-

‘கடைத்தெரு எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு, ‘வலப்பக்கத்தில் உள்ளது’ எனக் கூறல்.

10. மறை விடை என்றால் என்ன? எ.கா. தருக

மறுத்துக் கூறும் விடை ‘

எ.கா:-

கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப் ‘போகமாட்டேன்’ என மறுத்துக் கூறல்.

11. நேர் விடை என்றால் என்ன? எ.கா. தருக

உடன்பட்டுக் கூறும் விடை

எ.கா:-

‘கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப் ‘பாேவேன்’ என்று உடன்பட்டுக் கூறல்.

12. ஏவல் விடை என்றால் என்ன? எ.கா. தருக

மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை.

எ.கா:-

இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்”என்று ஏவிக் கூறுவது.

13. வினா எதிர் வினாதல் விடை என்றால் என்ன? எ.கா. தருக

வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது.

எ.கா:-

‘என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினாவிற்கு ‘வராமல் இருப்பேனா?’ என்று கூறுவது.

14. உற்றது உரைத்தல் விடை என்றால் என்ன? எ.கா. தருக

வினாவிற்கு விடையாக ஏற்கெனவே நேர்ந்ததைக் கூறல்.

எ.கா:-

‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று உற்றதை உரைப்பது.

15. உறுவது கூறல் விடை என்றால் என்ன? எ.கா. தருக

வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்.

எ.கா:-

‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று உறுவதை உரைப்பது.

16. இனமொழி விடை என்றால் என்ன? எ.கா. தருக

வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்.

எ.கா:-

“உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது.

17. பொருள்கோள் ஏன்றால் என்ன? அதன் வகைகளை கூறுக

செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் ‘பொருள்கோள்’ என்று பெயர்.

பொருள்கோள் எட்டு வகைப்படும்.

  1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
  2. மொழிமாற்றுப் பொருள்கோள்
  3. நிரல்நிறைப் பொருள்கோள்
  4. விற்பூட்டுப் பொருள்கோள்
  5. தாப்பிசைப் பொருள்கோள்
  6. அளைமறிபாப்புப் பொருள்கோள்
  7. கொண்டு கூட்டுப் பொருள்கோள்
  8. அடிமறிமாற்றுப் பொருள்கோள்

18. கொண்டு கூட்டுப் பொருள்கோள் என்றால் என்ன?

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாகும்.

 மொழியை ஆள்வோம்

I. ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுக.

யாழிசை

அறைக்குள் யாழிசை

ஏதென்று சென்று

எட்டிப் பார்த்தேன்;

பேத்தி,

நெட்டுருப் பண்ணினாள்

நீதிநூல் திரட்டையே.

பாரதிதாசன்

It’s like new lute music

Wondering at the lute music

Coming from the chamber

Entered I to look up to in still

My grand-daughter

Learning by rote the verses

Of a didactic compilation.

Translated by Kavignar Desini

விடை:-

  1.  lute music – யாழிசை
  2. chamber –  ஏதென்று
  3. to look up –  எட்டிப் பார்த்தேன்
  4. grand-daughter –  பேத்தி
  5. rote –  நெட்டுரு
  6. didactic compilation  –  நீதிநூல் திரட்டு



III. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க .

1 . கடம்ப வனத்தை விட்டு இறைவன் நீங்கினான் .

அழகிய குளிர்ந்த கடம்ப வனத்தை விட்டு இறைவன் நீங்கினான் .

2 .மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் .

பழம் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் .

3 . வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது .

சொந்தங்களோடு வாழும் வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது .

4 . கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும் .

ஒழுக்கத்துடன் கற்கும் கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும் .

5 . குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும் .

விடைத்தாள்களை குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.

மொழியோடு விளையாடு

I. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் புதையல் யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் புதைத்தல் நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும். (புதையல்; புதைத்தல்)

2. காட்டு விலங்குகளைச் சுடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் சுட்டல் திருந்த உதவுகிறது. (சுட்டல், சுடுதல்)

3. காற்றின் மெல்லிய தொடுதல் பூக்களைத் தலையாட்டவைக்கிறது. கைகளின் நேர்த்தியான தொடுத்தல் பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல், தொடுதல்)

4. பசுமையான காட்சிஐக் காணுதல் கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)

5. பொதுவாழ்வில் நடித்தல் கூடாது. நடிப்புஇல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)

II. அகராதியில் காண்க.

1. மன்றல்

  • திருமணம்

2. அடிச்சுவடு

  • காலடிக்குறி

3. அகராதி

  • அகர வரிசை சொற்பொருள் நூல்

4. தூவல்

  • மழை/நீர்த்துளி

5. மருள்

  • மயக்கம்

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்

  1. Emblem – சின்னம்
  2. Intellectual – அறிவாளர்
  3. Thesis – ஆய்வேடு
  4. Symbolism – குறியீட்டியல்
  5. Exhibition – காட்சி, பொருட்காட்சி
  6. East Indian Railways – இருப்புப் பாதை
  7. Revolution – புரட்சி
  8. Strike – தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது ……………………………..

அ) அறிவினா

ஆ) அறியாவினா

இ) ஐயவினா

ஈ) ஏவல் வினா

Answer:

ஆ) அறியாவினா

2.பிறருக்குப் பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது ……………………………..

அ) ஏவல் வினா

ஆ) கொளல் வினா

இ) ஐய வினா

ஈ) கொடை வினா

Answer:

ஈ) கொடை வினா

3.மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ……………………………..

அ) மறைவிடை

ஆ) இனமொழிவிடை

இ) நேர்விடை

ஈ) ஏவல்விடை

Answer:

ஈ) ஏவல்விடை

4.வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறுவது ……………………………..

அ) உறுவது கூறல் விடை

ஆ) உற்றது உறைத்தல் விடை

இ) இனமொழி விடை

ஈ) வினா எதிர் வினாதல் விடை

Answer:

அ) உறுவது கூறல் விடை

5.உடன்பட்டுக் கூறும் விடை ……………………………..

அ) சுட்டுவிடை

ஆ) மறைவிடை

இ) நேர்விடை

ஈ) ஏவல்விடை

Answer:

இ) நேர்விடை

6.வினாவிற்கு வினாவை திரும்பக் கேட்பது ……………………………..

அ) ஏவல் விடை

ஆ) வினா எதிர்வினாதல் விடை

இ) மறைவிடை

ஈ) நேர்வினா

Answer:

ஆ) வினா எதிர்வினாதல் விடை

7.மறுத்துக் கூறும் விடை ……………………………..

அ) சுட்டு விடை

ஆ) மறைவிடை

இ) ஏவல்விடை

ஈ) நேர் விடை

Answer:

ஆ) மறைவிடை

8.ஆடத்தெரியுமா என்ற வினாவிற்குப் பாடத்தெரியும் என்று கூறுவது……………………………..

அ) வினாஎதிர் வினாதல்

ஆ) உற்றது உரைத்தல்

இ) உறுவது கூறல்

ஈ) இனமொழி விடை

Answer:

ஈ) இனமொழி விடை

9.ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு வராமல் இருப்பேனா? என்று கூறுவது என்ன விடை?

அ) வினாஎதிர் வினாதல் விடை

ஆ) உற்றது உரைத்தல் விடை

இ) உறுவது கூறல் விடை

ஈ) இனமொழி விடை

Answer:

அ) வினாஎதிர் வினாதல் விடை

10.ஆசிரியர் மாணவனிடம் இப்பாடலின் பொருள் யாது?

அ) அறிவினா

ஆ) ஐயவினா

இ) அறியாவினா

ஈ) கொளல்வினா

Answer:

அ) அறிவினா

11.மாணவன் ஆசிரியரிடம் இப்பாடலின் பொருள் யாது என வினவுவது ……………………………..

அ) அறிவினா

ஆ) அறியாவினா

இ) ஐயவினா

ஈ) ஏவல்வினா

Answer:

ஆ) அறியாவினா

12.இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?

அ) அறிவினா

ஆ) அறியாவினா

இ) ஐயவினா

ஈ) ஏவல்வினா

Answer:

இ) ஐயவினா

13.ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது ……………………………..

அ) அறிவினா

ஆ) அறியாவினா

இ) ஐயவினா

ஈ) ஏவல்வினா

Answer:

இ) ஐயவினா

14.வினா ……………………………..வகைப்படும்.

அ) நான்கு

ஆ) ஐந்து

இ) ஆறு

ஈ) ஏழு

Answer:

இ) ஆறு

15.‘என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா? என்று கொடுப்பதற்காக வினவுவது ……………………………..

அ) கொளல் வினா

ஆ) ஐய வினா

இ) கொடை வினா

ஈ) ஏவல் வினா

Answer:

இ) கொடை வினா

16.“வீட்டில் தக்காளி இல்லை, நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச்

சொல்வது

அ) ஐயவினா

ஆ) அறியாவினா

இ) கொளல் வினா

ஈ) ஏவல் வினா

Answer:

ஈ) ஏவல் வினா

17.விடை …………………………….. வகைப்படும்.

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) ஒன்பது

Answer:

இ) எட்டு

18.வெளிப்படை விடைகளில் பொருந்தாததைக் கண்டறிக.

அ) சுட்டு விடை

ஆ) மறை விடை

இ) நேர் விடை

ஈ) ஏவல் விடை

Answer:

ஈ) ஏவல் விடை

19.நேரடி விடைகளாக இருக்கும் வெளிப்படை விடைகள் எத்தனை?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer:

அ) மூன்று

20.குறிப்பு விடைகளாக இருக்கும் குறிப்பு விடைகள் எத்தனை?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer:

இ) ஐந்து

21.குறிப்பு விடைகளில் பொருந்தாததைக் கண்டறிக.

அ) நேர் விடை

ஆ) ஏவல் விடை

இ) உறுவது கூறல்

ஈ) இனமொழி

Answer:

அ) நேர் விடை

22.செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு ……………………………..என்று பெயர்.

அ) பொருள்கோள்

ஆ) வழாநிலை

இ) அணி

ஈ) வழுவமைதி

Answer:

அ) பொருள்கோள்

23.பொருள்கோள்…………………………….. வகைப்படும்.

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

Answer:

இ) 8

24.பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது …………………………….. ஆகும்.

அ) ஆற்று நீர்ப் பொருள்கோள்

ஆ) நிரல் நிறைப் பொருள்கோள்

இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்

Answer:

அ) ஆற்று நீர்ப் பொருள்கோள்

25.ஒரு செய்யுளில் சொற்கள் முறையே பிறழாமல் நிரல் நிறையாக அமைந்து வருவது……………………………..

அ) நிரல் நிறைப் பொருள்கோள்

ஆ) விற்பூட்டுப் பொருள்கோள்

இ) ஆற்று நீர்ப் பொருள்கோள்

ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்

Answer:

அ) நிரல் நிறைப் பொருள்கோள்

26.நிரல் நிறைப் பொருள்கோள் ……………………………..வகைப்படும்.

அ) இரு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஆறு

Answer:

அ) இரு

27.செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் ……………………………..ஆகும்.

அ) விற்பூட்டுப் பொருள்கோள்

ஆ) முறை நிரல் நிறைப் பொருள்கோள்

இ) எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்

ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்

Answer:

ஆ) முறை நிரல் நிறைப் பொருள்கோள்

28.செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் ……………………………..ஆகும்.

அ) விற்பூட்டுப் பொருள்கோள்

ஆ) முறை நிரல் நிறைப் பொருள்கோள்

இ) எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்

ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்

Answer:

இ) எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்

29.ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று

கூட்டிப் பொருள் கொள்வது ……………………………..ஆகும்.

அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

ஆ) ஆற்று நீர்ப் பொருள்கோள்

இ) மொழிமாற்றுப் பொருள்கோள்

ஈ) நிரல் நிறைப் பொருள்கோள்

Answer:

அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...