10th Tamil Unit 6.1 - நிகழ்கலை

10th Tamil Unit 6.1 - நிகழ்கலை

I. பலவுள் தெரிக.

1. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?

ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.

ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.

ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.

ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.

  • விடை : ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

2. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?

கரகாட்டம் என்றால் என்ன?

கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?

கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?

கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

  • விடை : கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

II. குறு வினா

1.”நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

  • நேற்று நான் பார்த்த அர்ச்சுனர் தபசு என்ற அழகிய ஒப்பனையும், சிறந்த நடிப்பையும், இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாக சேகர் என்னிடம் கூறினார்.

III. சிறு வினா

4. படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.

அ) காலில் சலங்கை அணிந்து ஆடும் நிகழ்கலை ஏதேனும் இரண்டு கூறுக

ஒயிலாட்டம்

தேவராட்டம்

ஆ) கரகாட்டம் என்றால் என்ன?

கரகம் என்பது பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுதல் ஆகும்.

IV. நெடு வினா

1. நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.

பாராட்டுரை

இன்றைய நம் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்து பொம்மலாட்ட நிகழ்வை நடத்தித் தந்த குழுவினருக்குப் பள்ளயின் சார்பாக வணக்கம்.

நெகிழியானது பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், நம் மண்ணின் வளத்தைக் குன்றச் செய்து நிலத்தடி நீர் குறைவதை, மிக அழகாக பொம்மலாட்டம் மூலம் எடுத்துரைத்ததற்குப் பாராட்டுகள்.

மழைநீர் பூமிக்குள் நுழைய விடாமல் தடுக்கும் நெகிழியைப் பற்றியும், மரங்களில் நெகிழிப்பைகள் சிக்குவதால் பாரதிக்கும் ஒளிச்சேர்க்கையைப் பற்றியும் பாடல் வாயிலாக எடுத்துரைத்தீர்கள். மிகவும் அருமையாக இருந்தது. பாராட்டுகள்.

மட்காத நெகிழிகளை மழைநீர் அடித்துச் செல்வதால் நீர் மாசு அடைவதையும், நெகிழிப் பைகளில் தேநீர், குளிர்பானம் போன்ற உணவுப் பொருள்கள் வாங்குவதால் மனிதனுக்குப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதையும் பொம்மலாட்டம் மூலம்  நிகழ்த்தினீர்கள். பாராட்டுகள்.

நெகிழிப் பைகளை எரிக்கும் போது ஏற்படும் நச்சு வாயு காற்றையும் மாசுபடுத்துவதைத் தங்களது இனிய குரலால் பாடி, எங்களைப் பரவசமடையச் செய்தீர்கள். பாராட்டுகள்.

நெகிழியைத் தவிர்த்தல்

மேற்கண்ட தீமைகள் ஒழிந்திட நெகிழிையத் தவிர்ப்போம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் ஏற்போம்.

தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று பொம்மலாட்டம். இது பொழுதுபோக்குக் காட்சிக்கலை ஆகும். இது பொழுதுபோக்கு காட்சியாக மட்டுமல்லாமல் கல்வியறிவு, மக்களிடையே காணப்படும் அறியாமையைப் பாடல் வழியாக போக்குவதற்கு நல்ல கலையாக விளங்குகிறது. குறைந்த நேரத்தில் அதிக செலவில்லாமல் இக்கலை வடிவம் வாயிலாக நம் பள்ளியின் ஆண்டு விழாவில் பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்திய கலைக்குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

நெகிழிப் பைகளால் ஏற்படும் தீமையைப் பொம்மலாட்டம் வாயிலாக நிகழ்த்தி எங்கள் நெஞ்சத்தை நெகிழச் செய்த அனைவருக்கும் வணக்கம்.

2. நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் -இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்யவேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.

 குறிப்புச் சட்டம்

முன்னுரை

நிகழ்கலையின் வடிவங்கள்

ஒப்பனைகள்

சிறப்பும் பழைமையும்

குறைந்து வருவதற்கான காரணங்கள்

வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன

முடிவுரை

முன்னுரை:-

ஆயக்கலைகள் 64 என்பர் சான்றோர். ஆனால் அவை இன்று நம்மிடையே பல்வேறு சூழலால் குறைந்து வருகின்றன.

நிகழ்கலையின் வடிவங்கள்:-

பொதுவாக நிகழ்கலை, அவை நிகழும் இடங்கள் ஊரில் பொதுமக்கள் கூடும் இடம், கோயில் போன்ற இடங்களில் நடைபெறும், இவ்வகை கலைகள் பல்வேறு வழிகளில் ஆடல் பாடல்களோடு நடைபெறும். சான்றாக கரகாட்டம், காவடியாட்டம், தெருகூத்து போன்றன.1

ஒப்பனைகள்:-

கரகாட்டம் – ஆண், பெண் வேடமிட்டு ஆடுதல்

மயிலாட்டம் – மயில் வடிவ கூண்டுக்குள் உடலை மறைத்தல்

ஒயிலாட்டம் – ஒரே நிறத்துணியை முண்டாசு போலக்கட்டுதல், காலில் சலங்கை, கையில் சிறுதுணி

தேவராட்டம் – வேட்டி, தலையிலும் இடுப்பிலும் சிறு துணி, எளிய ஒப்பனை

சிறப்பும் பழைமையும்:-

வாழ்வியல் நிகழ்வில் பிரிக்க முடியாது, மகிழ்ச்சி தருகின்ற, கவலையைப் போக்குகின்ற, போன்ற சிறப்புகளை நிகழ்கலை மூலம் அறிய முடிகிறது.

பொம்மலாட்டம், கையுறைப் பாவைக்கூத்து, தெருக்கூத்து போன்ற இக்கலைகள் எல்லாம் நம் முன்னோர் காலத்திலில் இருந்த பழமை வாய்ந்த கலையாகும்.

குறைந்து வருவதற்கான காரணங்கள்:-

நாகரிகத்தின் காரணமாகவும், கலைஞர்களுக்குப் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும் திரைத்துறை வளர்ச்சினாலும் இக்கலைகள் குறைந்து வருகின்றன.

வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன:-

நம் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் நல்ல வாழ்வியில் தொடர்பான நிகழ்கலைகளை நடத்தி, கலைகளையும், கலைஞரையும் பாராட்டுவோம். இப்பெரிய செயலில் ஊடகம் மற்றும் செய்தித்தாள் ஆகியவை முழுமையாக இணைத்து கொண்டால் நம் கலைகள் நிலைபெற்று நிற்கும்.

முடிவுரை:-

நாமும் நிகழ்கலைகளைக் கற்று, கலைகளை அழியாமல் காப்போம்.

நிகழ்கலை – கூடுதல் வினாக்கள் 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கரகாட்டத்தின் துணையாட்டமாகவும் __________ ஆடப்படுகிறது.

விடை : மயிலாட்டம்

2. தமிழ் மக்களின் வீரத்தைச் சாெல்லும் கலையாகத் திகழ்வது __________ ஆகும்.

விடை : புலி ஆட்டம்

3. தப்பாட்டத்தினை __________ என்று அழைப்பர்.

விடை : பறை

4. ந.முத்துசாமிக்கு தமிழக அரசு __________ விருது வழங்கியது.

விடை : கலைமாமணி

5. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலை __________

விடை : தெருக்கூத்து

II. குறு வினா

1. நிகழ்கலை என்றால் என்ன?

சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள்.

2. தப்பாட்டம் என்றால் என்ன?

‘தப்பு’ என்ற தோற் கருவியை இசைத்துக்கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும்.

3. காவடியாடடம் என்றால் என்ன?

“கா” என்பதன் பொருள் பாரந்தாங்கும் கோல்

இரு முனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுந்து ஆடுவது காவடியாட்டம்.

4. தப்பாட்டம் எங்கெல்லாம் ஆடப்படுகின்றது?

கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம், விளம்பர நிகழ்ச்சி ஆகியவற்றில் தப்பாட்டம் ஆடப்படுகின்றது.

III. சிறு வினா

1. மயிலாட்டம் என்றால் என்ன?

மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும்.

நையாண்டி மேளம் இசைக்க, காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டுவர்.

2. மயிலாட்டத்தில் பின்பற்றப்படும் அசைவுகள் யாவை?

ஊர்ந்து ஆடுதல்

மிதந்து ஆடுதல்

சுற்றி ஆடுதல்

இறகை விரித்தாடுதல்

தலையைச் சாய்த்தாடுதல்

தாவியாடுதல்

இருபுறமும் சுற்றியாடுதல்

அகவுதல்

தண்ணீர் குடித்துக்கொண்டே ஆடுதல்

3. காவடியின் அமைப்புக்கேற்ப அவை எந்தெந்தப் பெயர்களில் அழைக்கப்படுகின்றன?

மசக்காவடி

சர்ப்பக்காவடி

பூக்காவடி

தேர்க்காவடி

பறவைகாவடி

4. புலி ஆட்டம் பற்றி குறிப்பு எழுதுக

தமிழ் மக்களின் வீரத்தைச் சாெல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும். பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று. விழாக்களில் புலி வேடமிடுவோர் உடம்பெங்கும் புலியைப் பாேன்று கறுப்பும் மஞ்சளுமான வண்ணக் காேடுகளை இட்டுத் துணியாலான வாலை இடுப்பில் கட்டிக் காெள்வர். தப்பு மேளத்திற்கேற்ப ஒருவரோ, இருவரோ ஆடுவர். புலியைப் போன்று நடந்தும் பதுங்கியும் பாய்ந்தும் எம்பிக் குதித்தும் நாக்கால் வருடியும் பற்கள் தெரிய வாயைப் பிளந்தும் உறுமியும் பல்வேறு அடவுகளை வெளிப்படுத்துகின்றனர்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.

i) கரகாட்டம் – 1. உறுமி எனப்படும் தேவதுந்துபி

ii) மயிலாட்டம் – 2. தோலால் கட்டப்பட்ட குடம், தவில் சிங்கி, டோலாக், தப்பு

iii) ஒயிலாட்டம் – 3. நையாண்டி மேளம்

iv) தேவராட்டம் – 4. நையாண்டி மேள இசை, நாகசுரம், தவில், பம்பை

அ) 4, 3, 2, 1

ஆ) 1, 2, 3, 4

இ) 3, 4, 1, 2

ஈ) 2, 1, 4, 3

Answer:

அ) 4, 3, 2, 1

2.பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

i) மயிலாட்டம் – 1. கரகாட்டத்தின் துணை ஆட்டம்

ii) ஒயிலாட்டம் – 2. கம்பீரத்துடன் ஆடுதல்

iii) புலியாட்டம் – 3. வேளாண்மை செய்வோரின் கலை

iv) தெருக்கூத்து – 4. தமிழரின் வீரத்தைச் சொல்லும் கலை

அ) 4, 1, 3, 2

ஆ) 3, 4, 2, 1

இ) 1, 2, 4, 3

ஈ) 4, 3, 1, 2

Answer:

இ) 1, 2, 4, 3


3.தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது மரபு?

Answer:

அ) மூன்று முதல் பதின்மூன்று

ஆ) எட்டு முதல் பத்து

இ) பத்து முதல் பதின்மூன்று

ஈ) எட்டு முதல் பதின்மூன்று

Answer:

ஈ) எட்டு முதல் பதின்மூன்று


4.சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை யாவை?

அ) நிகழ்கலைகள்

ஆ) பெருங்கலைகள்

இ) அருங்கலைகள்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:

அ) நிகழ்கலைகள்


5.கரகாட்டத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்?

அ) குட ஆட்டம்

ஆ) கும்பாட்டம்

இ) கொம்பாட்டம்

ஈ) செம்பாட்டம்

Answer:

ஆ) கும்பாட்டம்


6.கரகாட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவிகள் …………………..

i) நையாண்டி மேள இசை

ii) நாகசுரம்

iii) தவில்

iv) பம்பை

அ) i, ii – சரி

ஆ) i, ii, iii – சரி

இ) நான்கும் சரி

ஈ) iii – சரி

Answer:

இ) நான்கும் சரி


7.கரகாட்டம் நிகழ்த்துதலில் எத்தனை பேர் நிகழ்த்த வேண்டும்?

அ) 12

ஆ) 2

இ) 24

ஈ) வரையறை இல்லை

Answer:

ஈ) வரையறை இல்லை


8.“நீரற வறியாக் கரகத்து” என்ற பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறும் நூல் ……………………

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) கலித்தொகை

ஈ) நற்றிணை

Answer:

ஆ) புறநானூறு

9.சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய…………………. வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.

அ) பத்து

ஆ) பதினொரு

இ) ஏழு

ஈ) எண்

Answer:

ஆ) பதினொரு

10.குடக்கூத்து என்பது, …………………………

அ) மயிலாட்டம்

ஆ) கரகாட்டம்

இ) பொம்மலாட்டம்

ஈ) ஒயிலாட்டம்

Answer:

ஆ) கரகாட்டம்

11.கரகாட்டத்தின் துணையாட்டம் …………………….

அ) மயிலாட்டம்

ஆ) ஒயிலாட்டம்

இ) காவடியாட்டம்

ஈ) தேவராட்டம்

Answer:

அ) மயிலாட்டம்

12.காவடியாட்டம் – இச்சொல்லில் ‘கா’ என்பதன் பொருள் …………………

அ) சோலை

ஆ) பாரந்தாங்கும் கோல்

இ) கால்

ஈ) காவல்

Answer:

ஆ) பாரந்தாங்கும் கோல்

13.இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது…………….

அ) கரகாட்டம்

ஆ) மயிலாட்டம்

இ) காவடியாட்டம்

ஈ) ஒயிலாட்டம்

Answer:

இ) காவடியாட்டம்


14.மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி என்று எதன் அடிப்படையில் அழைக்கின்றனர்?

அ) அமைப்பு

ஆ) நிறம்

இ) அழகு

ஈ) வடிவம்

Answer:

அ) அமைப்பு

15.இலங்கை, மலேசியா உள்ளிட்ட புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் ஆடப்படுவது…………….

அ) கரகாட்டம்

ஆ) மயிலாட்டம்

இ) ஒயிலாட்டம்

ஈ) காவடியாட்டம்

Answer:

ஈ) காவடியாட்டம்

16.ஒயிலாட்டம் ஆடுவோரின் வரிசை எண்ணிக்கை …………………

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) ஆறு

ஈ) எட்டு

Answer:

அ) இரண்டு

17.தேவராட்டம் என்பது யார் மட்டுமே ஆடும் ஆட்டம்?

அ) ஆண்கள்

ஆ) பெண்கள்

இ) சிறுவர்கள்

ஈ) முதியவர்கள்

Answer:

அ) ஆண்கள்

18.தேவராட்டம், ………. ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

அ) வானத்துத் தேவர்கள்

ஆ) விறலியர்

இ) பாணர்கள்

ஈ) அரசர்கள்

Answer:

அ) வானத்துத் தேவர்கள்

19.உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படுவது…………….

அ) தேவதுந்துபி

ஆ) சிங்கி

இ) டோலக்

ஈ) தப்பு

Answer:

அ) தேவதுந்துபி

20.தேவதுந்துபி என்னும் இசைக்கருவி பயன்படுத்தும் ஆட்ட வகை ………………………

அ) கரகாட்டம்

ஆ) மயிலாட்டம்

இ) தேவராட்டம்

ஈ) சேவையாட்டம்

Answer:

இ) தேவராட்டம்

21.தேவராட்டம் எவ்வகை நிகழ்வாக ஆடப்படுகின்றது?

அ) அழகியல்

ஆ) நடப்பியல்

இ) சடங்கியல்

ஈ) வாழ்வியல்

Answer:

இ) சடங்கியல்

22.தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை…………………………..

அ) மயிலாட்டம்

ஆ) காவடியாட்டம்

இ) சேவையாட்டம்

ஈ) ஒயிலாட்டம்

Answer:

இ) சேவையாட்டம்

23.சேவையாட்டக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டே ஆடும் இசைக்கருவிகளைக் கண்டறிக.

i) சேவைப்பலகை

ii) சேமக்கலம்

iii) ஜால்ரா

அ) i, ii – சரி

ஆ) ii, iii – சரி

இ) i, iii – சரி

ஈ) மூன்றும் சரி

Answer:

ஈ) மூன்றும் சரி


24.எந்தப் பண்புகளைக் கொண்டு நிகழ்த்திக்காட்டும் கலை பொய்க்கால் குதிரையாட்டம் ஆகும்?

அ) போலச் செய்தல்

ஆ) இருப்பதைச் செய்தல்

இ) மெய்யியல்

ஈ) நடப்பியல்

Answer:

அ) போலச் செய்தல்


25.புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்?

அ) மயிலாட்டம்

ஆ) ஒயிலாட்டம்

இ) பொய்க்கால் குதிரையாட்டம்

ஈ) காவடியாட்டம்

Answer:

இ) பொய்க்கால் குதிரையாட்டம்


26.பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது?

அ) சோழர்

ஆ) நாயக்கர்

இ) மராட்டியர்

ஈ) ஆங்கிலேயர்

Answer:

இ) மராட்டியர்


27.இராஜஸ்தானில் கச்சிகொடி என்றும் கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுவது?

அ) காவடியாட்டம்

ஆ) மயிலாட்டம்

இ) ஒயிலாட்டம்

ஈ) பொய்க்கால் குதிரையாட்டம்

Answer:

ஈ) பொய்க்கால் குதிரையாட்டம்


28.பாடல்கள் பயன்படுத்தாத ஆட்ட வகை……………….

அ) கரகம்

ஆ) பொய்க்கால் குதிரை

இ) காவடி

ஈ) மயில்

Answer:

ஆ) பொய்க்கால் குதிரை


29.பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவிகளைக் கண்டறிக.

i) நையாண்டி மேளம்

ii) நாகசுரம்

iii) தவில்

iv) டோலக்

அ) i, ii – சரி

ஆ) iii, iv – சரி

இ) iii – மட்டும் தவறு

ஈ) நான்கும் சரி

Answer:

அ) i, ii – சரி


30.தப்பு என்பது……………….

அ) தோற்கருவி

ஆ) துளைக்கருவி

இ) நரம்புக்கருவி

ஈ) தொழிற்கருவி

Answer:

அ) தோற்கருவி


31.“தகக தகதகக தந்தத்த தந்தக்க

என்று தாளம்

பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக”

– என்ற தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்யும் நூலாசிரியர், நூல்?

அ) அண்ணாமலையார், காவடிச்சிந்து

ஆ) அருணகிரிநாதர், திருப்புகழ்

இ) திருநாவுக்கரசர், தேவாரம்

ஈ) இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்

Answer:

ஆ) அருணகிரிநாதர், திருப்புகழ்


32.பறை என்று அழைக்கப்படும் ஆட்டம்……………….

அ) தப்பாட்டம்

ஆ) மயிலாட்டம்

இ) ஒயிலாட்டம்

ஈ) கரகாட்டம்

Answer:

அ) தப்பாட்டம்


33.……………….குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம் பெறுகிறது.

அ) அகத்தியம்

ஆ) தொல்காப்பியம்

இ) நன்னூல்

ஈ) யாப்பருங்கலம்

Answer:

ஆ) தொல்காப்பியம்


34.சொல்லுவது போன்றே இசைக்கவல்ல தாளக் கருவி……………….

அ) பறை

ஆ) தவில்

இ) டோலக்

ஈ) உறுமி

Answer:

அ) பறை


35.தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது………………..

அ) கரகாட்டம்

ஆ) காவடியாட்டம்

இ) புலி ஆட்டம்

ஈ) ஒயிலாட்டம்

Answer:

இ) புலி ஆட்டம்


36.……………….தெருக்கூத்து அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.

அ) காளி

ஆ) மாரி

இ) சர்க்கை

ஈ) திரௌபதி

Answer:

ஈ) திரௌபதி


37.நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்ட கலை……………….

அ) புலி ஆட்டம்

ஆ) காவடியாட்டம்

இ) தெருக்கூத்து

ஈ) குடக்கூத்து

Answer:

இ) தெருக்கூத்து


38.களத்துமேடுகளில் நிகழ்த்தப்பட்டது எது?

அ) புலி ஆட்டம்

ஆ) காவடியாட்டம்

இ) குடக்கூத்து

ஈ) தெருக்கூத்து

Answer:

ஈ) தெருக்கூத்து


39.தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்……………….

அ) ந. முத்துசாமி

ஆ) பேரா. லூர்து

இ) வானமாமலை

ஈ) அ.கி. பரந்தாமனார்

Answer:

அ) ந. முத்துசாமி


40.நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் என்றவர்……………….

அ) ந. முத்துசாமி

ஆ) சங்கரதாசு சுவாமிகள்

இ) பரிதிமாற்கலைஞர்

ஈ) தி.வை. நடராசன்

Answer:

அ) ந. முத்துசாமி


41.கலைஞாயிறு என்று அழைக்கப்பட்டவர்……………….

அ) தேவநேயப் பாவாணர்

ஆ) ந. முத்துசாமி

இ) தியாகராஜ பாகவதர்

ஈ) எம்.எஸ். சுப்புலட்சுமி

Answer:

ஆ) ந. முத்துசாமி


42.கூத்துப்பட்டறை ந. முத்துசாமிக்கு இந்திய அரசு வழங்கிய விருது……………….

அ) பத்ம ஸ்ரீ

ஆ) அர்ஜூனா

இ) பத்மபூஷண்

ஈ) பாரத ரத்னா

Answer:

அ) பத்ம ஸ்ரீ


43.தமிழ்நாடு அரசு ந. முத்துசாமிக்கு வழங்கிய விருது……………….

அ) கலைமாமணி

ஆ) நாடகமாமணி

இ) வ.உ.சி. விருது

ஈ) கம்பன் விருது

Answer:

அ) கலைமாமணி


44.வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்து வருவது……………….

அ) காவடியாட்டம்

ஆ) புலி ஆட்டம்

இ) தேவராட்டம்

ஈ) தெருக்கூத்து

Answer:

ஈ) தெருக்கூத்து


45.அர்ச்சுனன் தபசு எனப்படுவது……………….

அ) பொருள் வேண்டி நிகழ்த்தப்படுவது

ஆ) மழை வேண்டி நிகழ்த்தப்படுவது

இ) அருள் வேண்டி நிகழ்த்தப்படுவது

ஈ) அமைதி வேண்டி நிகழ்த்தப்படுவது

Answer:

ஆ) மழை வேண்டி நிகழ்த்தப்படுவது

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...