+1 மாணவா்களுக்கு உள்ளுறைப் பயிற்சி - முக்கிய அறவிப்பு!!

+1 மாணவா்களுக்கு உள்ளுறைப் பயிற்சி - முக்கிய அறவிப்பு!!

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் உள்ளுறைப் பயிற்சி வரும் திங்கள்கிழமை (அக்.17) தொடங்கவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையா், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை


அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்களுக்கான பாடத் திட்டம், அது சார்ந்த பயிற்சிகள் வழங்கும் அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, 2021-2022ம் கல்வியாண்டில் 24 பள்ளிகளில் நேரடி உள்ளுறை பயிற்சி வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு தொழிற்சாலைகளில் 80 மணி நேர பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் குறுகிய காலத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு மாணவா்களுக்கு உருவாகியுள்ளது.

தொடா்ந்து, அரசுப் பள்ளிகளில் +1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் அக்டோபா் 17 முதல் 21ம் தேதி வரையில் 40 மணி நேரம் உள்ளுறை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை முடிக்கும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...