8th Tamil Refresher Course Topic 4 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

8th Tamil Refresher Course Topic 4 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

  • எட்டாம் வகுப்பு - தமிழ் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
  • செயல்பாடு - 4
  • செய்யுளின் நயங்களை அறிதல்

திறன்/ கற்றல் விளைவு

6.11 ஒலியியைபு. சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத் தொடர்கள் போன்ற மொழியின் மரபு, நடை, நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள், கட்டுரைகளின் நயம் பாராட்டல்

கற்பித்தல் செயல்பாடு

அறிமுகம்

  • செய்யுளில் இடம்பெறும் எதுகை, மோனை, இயைபு போன்ற தொடை நயங்களை அறிதல்.

மோனை

  • செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வருமாறு அமைவது மோனை எனப்படும்.

(எ.கா.) சொல்லுக சொல்லிற் பயனுடய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல். (குறள் -200)

எதுகை

  •    இரண்டாம் எழுத்து ஒன்றி வருமாறு அமைவது எதுகை எனப்படும்.

(எ.கா.) இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

ன்னயம் செய்து விடல். (குறள் - 314)

இயைபு

  • செய்யுளின் இறுதி எழுத்தோ அசையோ ஒன்றி வருவது இயைபு எனப்படும்.

(எ.கா.) புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது

கவிஞர் தாராபாரதி

எடுத்துக்காட்டு

சாந்தம் உடையோர் பேறு பெற்றோர் எனத்

தத்துவமும் சொன்னார்- இந்தத்

தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது

தலைவர்கள் அவர் என்றார்!

மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது

சாந்தம் தான் என்றார்- அது

மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும்

மகத்துவம் பார் என்றார்.

                                     கவிஞர் கண்ணதாசன்

வினாக்கள்

1. மேற்குறிப்பிட்ட பாடலில் உள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • மாந்தர், சாந்தம், மண்ணையும் விண்ணையும்

2. மேற்கண்ட பாடலில் இடம்பெறும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • தத்துவம், தாரணி, மண்ணையும், மகத்துவம்

3. மேற்கண்ட பாடலில் உள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக

  • பெற்றோர், சொன்னார். என்றார்,


மதிப்பீட்டுச் செயல்பாடு

நடிப்புச் சுதேசிகள்

நெஞ்சி லுரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனைசொல்வாரடீ -கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடீ

கூட்டத்தில் கூடிநின்று

கூவிப் பிதற்ற லின்றி

நாட்டத்தில் கொள்ளாரம - கிளியே

நாளில் மறப்பாரடீ.


                                     - கவிஞர் பாரதியார்


1 . மேற்கண்ட பாடலில் இடம்பெறும் மோனைச்சொற்களை எடுத்து எழுதுக,

நெஞ்சில் , நேர்மை

வஞ்சனை , வாய்ச்சொல்

கூட்டத்தில் , கூவிப்

நாட்டத்தில் , நாளில் 

2 . மேற்கண்ட பாடலில் இடம்பெறும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

நெஞ்சில் , வஞ்சனை 

கூட்டம் , நாட்டம் 

3 . மேற்கண்ட பாடலில் உள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

  • சொல்வாரடீ , வீரரடி , கொள்ளாரடீ , மறப்பாரடீ 

4 . மேற்கண்ட பாடலின் தலைப்பு மற்றும் ஆசிரியரின் பெயரை எழுதுக.

  • பாடலின் தலைப்பு - நடிப்புச் சுதேசிகள்

ஆசிரியர் - கவிஞர்.பாரதியார்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...