மல்லிகாவை அழைத்து வந்து காதம்பரிக்கு பெரிய ஆப்பாக அடித்த சக்தி.! வேற மாறி ப்ரோமோ.!

மல்லிகாவை அழைத்து வந்து காதம்பரிக்கு பெரிய ஆப்பாக அடித்த சக்தி.! வேற மாறி ப்ரோமோ.!


மௌன ராகம் சீரியலில் மல்லிகாவை கண்டுபிடித்து அழைத்து வந்து கார்த்திக் பிறந்த நாள் விழாவில் பாட வைத்து விட்டார் சக்தி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மௌன ராகம் சீரியல் பலருக்கும் பிடித்த சீரியலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் திருப்பங்கள் உடனடியாக உடைத்து விடுவது பலருக்கும் பிடித்திருக்கிறது. ட்விஸ்ட் வைக்கிறேன் என்கிற பெயரில் வளவளவென்று இழுக்காமல் உடனடியாக ட்விஸ்டை உடைத்து விடுவது பலருக்கும் இந்த சீரியல் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மௌன ராகம் சீசன் ஒன் கொடுத்த வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது

இதில் முக்கிய கதாபாத்திரங்களாக வருண், தருண், சக்தி ஸ்ருதி ஆகியோர் இருக்கின்றனர். தற்போது மல்லிகாவை கடத்தி வைத்திருக்கும் இடத்தை சொர்ணம் கண்டுபிடித்து விடுகிறார். ஸ்ருதியின் டிஎன்ஏ டெஸ்ட்டை கார்த்திக்கின் அறையில் இருந்து எடுத்து அதை வைத்து காதம்பரியின் தந்தை விஸ்வநாதனை பயமுறுத்தி வருகிறார் சொர்ணம். தற்போது கதைப்படி கார்த்திக் பிறந்தநாள் கச்சேரிக்கு மல்லிகாவும் கார்த்திக்கும் ஒன்றாக பாட இருப்பதாக கிடைத்த தகவலால் மல்லிகாவை கடத்தி வைத்திருக்கிறார் காதம்பரியின் அப்பா விஸ்வநாதன். இதை தெரிந்து கொண்ட சொர்ணம் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு நீங்கள் மல்லிகா இருக்கும் இடத்தை சொல்லாவிட்டால் இதை நான் ஒரு முழுக்க பரப்பி விடுவேன் என்று கூறுகிறார்.



இதை மாடியில் இருந்து சக்தியின் கணவரின் அத்தை ஷீலா பார்த்து விடுகிறார். இந்த உண்மையை சொன்னால் நான் மல்லிகா இருக்கும் இடத்தை காட்டுகிறேன் என்று கூறி சொர்ணத்தை மல்லிகா இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறார் ஷீலா. அங்கு மல்லிகாவை கண்டுபிடித்து அழைத்து வந்து கார்த்திக் பிறந்த நாள் விழாவில் பாட வைத்து விட்டார் சக்தி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...