TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!


அண்ணா பல்கலைக்கழகம் ஆனது TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை தற்போது நீட்டித்துள்ளது.

TANCET, CEETA நுழைவு தேர்வு:

2024-25 ஆம் ஆண்டுக்கான TANCET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர்வதற்கு தகுதியானவர்கள் tps://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளம் மூலம் பிப்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதே போல், எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் சேர்வதற்கான சீட்டா தேர்வுக்கும் பிப்.12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANCET தேர்வு மார்ச் 9 ஆம் தேதியும், CEETA – PG தேர்வு மார்ச் 10, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெற உள்ளது. முதலில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 7 ஆம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...