ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஆசிரியர்களும் கட்டாயமாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவினை வெளியிட்டுள்ளது.

தகுதி தேர்வு:

தமிழக உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்தில் அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பீகார் மாநிலத்தில் பள்ளி கல்வித்துறை ஆசிரியர் நியமனத்தில் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, மாநிலத்தில் ஒப்பந்த ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் அதிகபட்சமாக மூன்று பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இல்லையெனில், அவர்கள் பணியிழக்க நேரிடும் என அதிர்ச்சியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 26ஆம் தேதி பீகார் மாநிலத்தில் 3.5 லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு பிப்ரவரி 26 முதல் மார்ச் 13ஆம் தேதி வரையிலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...