பிப். 8 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு புதிய உத்தரவு!!
மாநிலத்தில் ஷப்-இ-மெராஜ் பிப்ரவரி எட்டாம் தேதி கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களும் புனிதமான இரவாக ஒவ்வொரு ஆண்டும் ஷப்-இ-மெராஜ் என்கிற திருவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதாவது, நபிகள் நாயகம் அவர்கள் மக்காவில் இருந்து இரவு பயணம் மேற்கொண்டதை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு டெல்லியில் பிப்ரவரி 7ஆம் தேதி ஷப்-இ-மெராஜ் கொண்டாடப்படும் எனவும், இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், தற்போது ஷப்-இ-மெராஜ் பிப்ரவரி 8ஆம் தேதி கடைபிடிக்கப்படும் என டெல்லி அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதன்படி, வரும் பிப்.8 வியாழக்கிழமை மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஷப்-இ-மெராஜ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.