ரேஷன் அட்டை இல்லாதோருக்கு ரூ.6000 நிவாரணம் எப்போது? அரசு அறிவிப்பு!!

ரேஷன் அட்டை இல்லாதோருக்கு ரூ.6000 நிவாரணம் எப்போது? அரசு அறிவிப்பு!!


ரேஷன் அட்டை இல்லாதோருக்கு ரூ.6,000 நிவாரண தொகை எப்போது வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

ரூ.6000 நிவாரணம்:

ரேஷன் குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் அரசு ஊழியர்களாக உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இவர்கள் தனித்தனியாக ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பித்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவித்த பின்னர் அவர்களுக்கான நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் சுமார் 5.5 லட்சம் பேர் நிவாரண உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தோரின் வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியானவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கணக்கெடுப்பு பணி முடிவடைந்த நிலையில் உள்ளதால் விரைவில் நிவாரண உதவித்தொகை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...