தமிழகத்தில் மார்ச்.3 ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் மார்ச் மூன்றாம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாமிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போலியோ சொட்டு மருந்து:
நாட்டில் இருந்து முற்றிலுமாக இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கு மார்ச் மூன்றாம் தேதியான வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் வழக்கமாக சொட்டு மருந்து வழங்கப்படும்.
இதை தவிர அன்றைய தினம் பயணத்தை மேற்கொண்டு இருக்கும் பெற்றோர்களை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனை சாவடிகளில் சொட்டு மருந்து முகாம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.