Daily TN Study Materials & Question Papers,Educational News

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்தால் ரூ.50,000/- பரிசு – கொண்டாட்டத்தில் மாணவர்கள்!

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்தால் ரூ.50,000/- பரிசு – கொண்டாட்டத்தில் மாணவர்கள்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.50,000 பரிசு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசு தொகை:

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொது தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் வகிக்கும் மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2023-24-ஆம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வில் தமிழ்ப்பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவா்களுக்கு மொத்தம் ரூ.50,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.10,000, இரண்டாம் இடம் பிடிக்கும் இருவருக்கு தலா ரூ.5000/- மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் மூன்று மாணவர்களுக்கு தலா ரூ.3000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு தலா ரூ.1,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகையானது மே மாதத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படும் எனவும் இத்தொகை அவர்கள் உயர்கல்விக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

Unordered List

Support