பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய ஏற்பாடு – தமிழக அரசின் சூப்பர் பிளான்!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய ஏற்பாடு – தமிழக அரசின் சூப்பர் பிளான்!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நெருங்கியுள்ள நிலையில் மாநில அரசு மாணவர்களின் நலன் கருதி முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளது.

அரசின் ஏற்பாடு:

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் பல்வேறு சிக்கல்களையும் தீர்க்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித் துறை ஆனது 14417 என்ற இலவச உதவி ஆலோசனை எண்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக 24 மணி நேரமும் மாணவர்கள் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை கேட்டுக் கொள்ளலாம். உதவி மைய ஆலோசனை நபர்களின் எண்ணிக்கை முன்னதாக 20 ல் ஆக இருந்து தற்போது 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் நலன் கருதியும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் கல்வி தொடர்பான சிக்கல்கள், மன ரீதியான சிக்கல்கள், பாலியல் தொந்தரவு, பிற பிரச்சனைகள் போன்றவற்றை பகிர்ந்து தீர்வு காணலாம்.

ஒவ்வொரு பிரச்சனைக்கும் குறிப்பிட்ட கால அளவிற்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. மாணவர்கள் மட்டும் இன்றி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் பல்வேறு குறைகளுக்காக உதவி எண்களை அழைத்து வருகின்றனர். பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதால் அழைப்புகளுக்கு எந்த நேரமும் பதிலளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் 2022 பேர் பல்வேறு காரணங்கள் காரணமாகவும் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். இவர்கள் அனைவரும் தொடர்பு கொள்ளப்பட்டு பலமுறை பேசி மீண்டும் கல்வியை தொடர்வதற்கு உதவி மைய ஆலோசகர்கள் மிகவும் உறுதுணையாக செயல்பட்டுள்ளனர்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...