TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – மிக முக்கியம் தமிழ்..

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – மிக முக்கியம் தமிழ்..

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – மிக முக்கியம் தமிழ்.

TNPSC தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. அத்துடன் இதில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது குரூப் 4 தேர்வு பற்றிய விவரங்களை விரிவாக பார்ப்போம்.

குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் அரசு பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் துறைகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து TNPSC இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது.

மேலும் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த குரூப் 4 தேர்வு பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் அறிவித்தார். அத்துடன் குரூப் 4 தேர்வில் தமிழ் தாளில் எடுக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் பற்றியும் இவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த TNPSCயின் தலைவர் கூறியதாவது, குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெறும் என்றும் இதில் 7,382 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதில் 81 பணியிடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்ப உள்ளதாகவும், 274 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு நிரப்ப உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். அத்துடன் தமிழில் 150 மதிப்பெண்ணில் குறைந்தபட்சமாக 60 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் அடுத்த தாள் மதிப்பிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...