வாழ்த்து மடல் எழுதுக.
திருநெல்வேலி மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
திருநெல்வேலி,
12-3-19.
அன்புள்ள நண்பா,
நான் நலம், உன் நலம் மற்றும் உன் வீட்டார் அனைவரின் நலம் அறிய ஆசை, மாநில அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற செய்தியை நாளிதழில் உன் புகைப்படத்துடன் கண்டு பெருமகிழ்வு கொண்டேன்.
மரங்களின் பயன்களையும், மரங்களை அழிப்பதனால் ஏற்படும் தீமைகளையும் பற்றி பல நல்ல கருத்துகளைக் கூறியிருக்கிறார். மரங்களை அழித்துக் கொண்டே போனால் நாம் உயிர் வளியைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும் என்ற செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். இதை நினைக்கும் போது மனம் வருத்தம் அடைகிறது.
உயிர் வளியைக் காசு கொடுத்து வாங்கும் நிலை வராதபடி நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி "வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம் ; மரங்களை அழிக்காதீர்!" என்று அச்செயல்களில் ஈடுபடுவோம். தூய காற்றை சுவாசிப்போம், நீ மேலும் பல கட்டுரைகளை எழுதி பரிசுகள் பெற்று மகிழ்வுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
உன் தோழன்,
அ. சங்கர்.
உறை மேல் முகவரி,
க.கண்ண ன்,
வடமலை தெரு திருநகர்,
மதுரை - 11
1 Comments
nantraga copy panni ulirgal
ReplyDelete1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.