தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை? பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை? பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை விடப்படும் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. கோடை வெயில் காரணமாக இந்த ஆண்டு வகுப்புகள் பள்ளிகளில் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும் பள்ளி தொடங்கிய பின் எல்லா வாரமும் சனிக்கிழமை பள்ளிகள் வைத்து இந்த நாட்கள் இழப்பு சரி செய்யப்பட்டது.
பள்ளிகளில் காலாண்டு பாடத்திட்டம் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது காலாண்டு தேர்வுகள் தொடங்க உள்ளன. பல பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் வெவ்வேறு வகுப்புகளுக்கு அடுத்த மாதம் நடக்க உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை விடப்படும் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் கேஜி வகுப்புகளுக்கு இப்போதே காலாண்டு தேர்வுகள் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் 1-5, 5-10, 11, 12 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடக்கவில்லை. இந்த தேர்வுகள் செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வுகள் 27ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ந்தேதி தேர்வுகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 11, 12 ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ந்தேதி என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...