Daily TN Study Materials & Question Papers,Educational News

தமிழக அரசு பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு – மாணவர்களே தயார்!

தமிழக அரசு பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு – மாணவர்களே தயார்!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களும் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்கிற நோக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பொதுத்தேர்வு:

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுத் தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்வியை தொடர வேண்டும் என்கிற நோக்கத்துடன் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பல்வேறு இலவச பயிற்சியையும் அரசு வழங்கி வருகிறது. பொதுவாகவே, அரசு பள்ளி மாணவர்களை காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று உயர்கல்வியை தொடர்கின்றனர்.

அதாவது, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பாடவாரியாக தேர்வு வைக்கப்படுவதால் மாணவர்களின் மதிப்பெண் அதிகரிக்க உதவியாக இருக்கிறது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் பின்பற்றும் அதே வழிமுறையை அரசு பள்ளிகளிலும் பின்பற்ற இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. அதாவது, பருவத்தேர்வு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை போல ஒவ்வொரு மாதமும் இனி பாடவாரியாக தேர்வுகள் நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மாதந்தோறும் நடைபெறும் தேர்வினை சந்திக்கும் வகையில் மாணவர்களை தயார் படுத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பின் மூலமாக இந்த ஆண்டு கட்டாயமாக அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

Unordered List

Support