1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - தமிழக அரசு

1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - தமிழக அரசு

மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை


அனைத்து பள்ளிகளிலும் 1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை


அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு

மேலும் பல கட்டுபாடுகள் அறிவிப்பு :

TN Press News 31.12.2021 - Download here

Share:

PGTRB - Exam Date TRB Announcement 2022

PGTRB - Exam Date TRB Announcement 


PGTRB 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 2020 21 காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் .01 / 2021 , நாள் 09.09.2021 மற்றும் திருத்திய அறிவிக்கைகள் எண் . 01 A / 2021 , நாள் 17.09.2021 மற்றும் 01 B / 2021 , நாள் 21.10.2021 ஆகிய தினங்களில் வெளியிடப்பட்டன.

 இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 18.09.2021 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 14.11.2021 மாலை 05.00 மணி வரை கால அவகாசம் வழங்ப்பட்டது. அதில் கணினி வழி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.


தற்பொழுது , 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை , தேர்வு மையங்களின் தயார் நிலை ( Availability of Examination Centre ) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகின்றது.

 விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

12th First and Second Revision Exam Syllabus 2022 - (January 2022-March 2022)

12th First and Second Revision Exam Syllabus 2022 - (January 2022-March 2022)

12th standard Revision Exam Syllabus 2022 January and March Test Reduced syllabus based.+2 first and second Revision Exam Syllabus PDF Download 2022,You can download 12th Revision Exam syllabus January 2022 First Revision syllabus,12th second Revision Exam syllabus March 2022 PDF Download available here.

12th First Revision Exam Syllabus 2022 January - Tamil Medium 

  • History First Revision Exam Syllabus January 2022
  • Geography First Revision Exam Syllabus January 2022

12th First Revision Exam Syllabus 2022 January - English Medium 

  • Botany First Revision Exam Syllabus January 2022
  • Bio Zoology First Revision Exam Syllabus January 2022
  • Computer Science First Revision Exam Syllabus January 2022
  • History First Revision Exam Syllabus January 2022
  • Geography First Revision Exam Syllabus January 2022
  • Business Maths & Statistics First Revision Exam Syllabus January 2022

12th Second Revision Exam Syllabus 2022 March - Tamil Medium

  • History First Revision Exam Syllabus January 2022
  • Geography First Revision Exam Syllabus January 2022

12th Second Revision Exam Syllabus 2022 January - English Medium 

  • Botany First Revision Exam Syllabus January 2022
  • Bio Zoology First Revision Exam Syllabus January 2022
  • Computer Science First Revision Exam Syllabus January 2022
  • History First Revision Exam Syllabus January 2022
  • Geography First Revision Exam Syllabus January 2022
  • Business Maths & Statistics First Revision Exam Syllabus January 2022

Share:

12th First & second Revision Exam Time table 2021-2022 - January

12th First Revision Exam Time table 2021-2022 - January



DateDaySubjects
19.01.2022WednesdayLanguage
20.01.2022ThursdayEnglish
21.01.2022FridayComputer Science , Computer Application , Bio-Chemistry , Advanced Tamil , Commutative English, Statistics
24.01.2022MondayPhysics , Economics , Computer Technology
25.01.2022TuesdayMathematics , Zoology9- , Commerce
27.01.2022ThursdayBiology, Botany, History , Business Maths & Statistics
28.01.2022FridayChemistry , Accountancy , Geography

12th Second Revision Exam Time table 2021-2022 - March

DateDaySubjects
21.03.2022MondayLanguage
22.03.2022TuesdayEnglish
23.03.2022WednesdayComputer Science , Computer Application , Bio-Chemistry , Advanced Tamil , Commutative English, Statistics
24.03.2022ThursdayPhysics , Economics , Computer Technology
25.03.2022FridayMathematics , Zoology , Commerce
28.03.2022SaturdayBiology, Botany, History , Business Maths & Statistics
29.03.2022MondayChemistry , Accountancy , Geography
Share:

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தடை, வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை – CEO உத்தரவு!

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தடை, வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை – CEO உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறிந்துள்ளதை தொடர்ந்து பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நடப்பாண்டு முடிவதற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளதால் விடுமுறை நாட்களிலும் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறக்க தடை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தப்படியே மொபைல் அல்லது கணினி பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வந்தனர். கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து நவம்பர் மாதத்தில் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. நடப்பாண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.


இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட விடுமுறைகள் அளிக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் அமைப்பு முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்கள். அதனால் தமிழ்கத்தில் அரையாண்டு விடுமுறையாக டிசம்பர் 25 முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவிப்பை தெரிவித்தார். ஆனால் சில பள்ளிகள் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டும் என்று விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இவ்வாறு திறக்கப்பட்டால் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அரசு மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் இது குறித்து கூறியதாவது, தமிழக முழுவதும் 1 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையாக டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது. இத்தினங்களில் ஆன்லைன் வகுப்பு மூலமாகவோ அல்லது நேரடி வகுப்பு மூலமாகவோ நடத்தப்பட்டால் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசு மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share:

TNPSC - குரூப் 2, 2ஏ தகுதித்தாள் தேர்வில் மீண்டும் திருக்குறள் சேர்ப்பு

TNPSC - குரூப் 2, 2ஏ தகுதித்தாள் தேர்வில் மீண்டும் திருக்குறள் சேர்ப்பு.



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், திருக்குறள் சேர்க்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து குரூப் 2, 2ஏ தகுதித்தாள் தேர்வில் மீண்டும் திருக்குறள் தொடர்பான பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தேர்வுத் திட்டம், பாடத்திட்டம் ஆகியவை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 


1. கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்(விரிந்துரைக்கும் வகை)

2. கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை)

3. கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை)


இவற்றில் விரிந்துரைக்கும் வகை தமிழ் மொழித் தகுதித் தேர்வில் (குரூப் 2, 2ஏ மற்றும் IIஏ உள்பட) திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் எனும் பகுதி சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பாடத்திட்டம் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Share:

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், கட் ஆஃப் மதிப்பெண்கள் 2022 – முழு விபரம் இதோ?

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், கட் ஆஃப் மதிப்பெண்கள் 2022 – முழு விபரம் இதோ?

தமிழகத்தில் TNPSC நடத்தும் குரூப்-4, குரூப்-2, குரூப்-2A தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து இத்தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் பாடத்திட்டம், கட் ஆஃப் போன்றவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.


TNPSC குரூப்-4 தேர்வு

தமிழகத்தில் அரசு பணிகளில் பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் குரூப்-4, குரூப்-2, குரூப்-2A உள்ளிட்ட 32 வகையான போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் அரசு துறைகளில் 4 ஆம் நிலை பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு மூலமாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் இந்த குரூப் 4 தேர்வுக்கு தான் அதிக போட்டியாளர்கள் உள்ளனர். ஏனெனில் இத்தேர்வுக்கு 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதி போதுமானது. அத்துடன் இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட எழுத்து தேர்வு ஆகும்.


இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தற்போது வெளியிட்டது. அதில் குரூப் 4 தேர்வு அறிவிப்புகள் வருகிற மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் இதற்கான காலிப்பணியிடங்கள் 5255 -ஆக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதனால் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். மேலும் இத்தேர்வில் கலந்து கொள்ள 18 வயது முதல் 30 வரை உள்ளவராக இருக்க வேண்டும். பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உள்ளது. இந்த வயது வரம்பு இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு பொருந்தும்.


அத்துடன் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு பொது பிரிவினர்கள் 21 முதல் 30 வயது உள்ளவராக இருக்க வேண்டும். இதில் பிற வகுப்பினர்கள் 40 வயது வரை உள்ளவராகவும் இருக்கலாம் என்ற சலுகை உண்டு. ஆனால் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. குரூப் 4 தேர்வு 7 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வு மூலமாக தேர்ச்சி பெறுபவர்கள் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற பணிகளில் பணிபுரிய முடியும்.

தற்போது இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் கட் ஆப் மதிப்பெண்கள் பற்றிய விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

TNPSC Group 4 பாடத்திட்டம்

இத்தேர்வில் தமிழ்மொழிப் பாடப்பிரிவில் 100 வினாக்கள் மற்றும் பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்வர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதையடுத்து 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படுகிறது . இதில் 75- வினாக்கள் பொது அறிவு மற்றும் 25-வினாக்கள் திறனறி தேர்வு கேட்கப்படுகிறது,

பொது அறிவு பகுதியில் கீழ் உள்ள தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது.

அறிவியல்: இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்

நடப்பு நிகழ்வுகள்: வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல்.

புவியியல்: புவி மற்றும் பிரபஞ்சம், சூரிய குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள்.

வரலாறு: சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள்

தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு.

இந்திய அரசியல்: அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ்.

பொருளாதாரம்: ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி.

இந்திய தேசிய இயக்கம்: தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்களின் பங்கு.

திறனறி வினாக்கள்: தர்க்க அறிவு மற்றும் கணிதத்தைக் கொண்டது. இதில் சுருக்குதல், எண்ணியல், கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர், சராசரி, சதவீதம், விகிதம் மற்றும் விகித சமம், மீ.பெ.வ, மீ.சி.ம , தனிவட்டி, கூட்டுவட்டி , அளவியல் பாடங்களில் பரப்பளவு மற்றும் கன அளவு , வேலை மற்றும் நேரம் , வேலை மற்றும் தூரம், வயது கணக்குகள் , இலாபம் மற்றும் நட்டம், வடிவியல், இயற்கணிதம் போன்ற தலைப்புகளில் இருந்து கேட்கப்படுகிறது.

கட் ஆஃப் மதிப்பெண்கள்


குரூப் 4 தேர்வை மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். ஆனால் வேலை கிடைக்க வேண்டுமென்றால் காலியிடங்களின் எண்ணிக்கைக்குள் வரும் அளவுக்கு அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதன்படி கடந்த ஆண்டுகளில் பொதுப் பிரிவில் 164 வினாக்கள் சரியாக எழுதியவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அதனால் 165 வினாக்களுக்கு மேல் சரியாக இருந்தால் வேலை கிடைப்பது உறுதி செய்யப்படும். மேலும் இன ரீதியான பிரிவு வாரியாக இந்த கட் ஆஃப் மதிப்பெண் ஏற்ற இறக்கங்கள் கொண்டு இருக்கும். இதனால் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே குரூப்-4 தேர்வில் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மஞ்சள் பையில் 20 பொருட்களுடன் பொங்கல் பரிசு – அரசு அறிவிப்பு!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மஞ்சள் பையில் 20 பொருட்களுடன் பொங்கல் பரிசு – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்களை தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க உள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டு உள்ளது.

பொங்கல் பரிசு

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்களை ஆண்டுதோறும் தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கி வருகிறது. அதையடுத்து தமிழகத்தில் வருகிற ஜனவரி 14 முதல் 17 வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்க உள்ளது.

இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் 20 வகையான பரிசு பொருட்கள் கொண்டது என்று கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த தொகுப்பில் அரிசி, வெல்லம், முந்திரி, பாசிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, புளி, பருப்பு, ரவை, கோதுமை போன்ற 20 வகையான பொருட்கள் உள்ளது. இந்த பரிசுப்பொருளுடன் ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலமாக 2,15,48,060 குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். இதற்காக அரசு 1,088 கோடி செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதனை வருகிற ஜனவரி 3 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை தமிழர்கள் மற்றும் அரசி அட்டை வைத்திருப்பவர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது ரூ.2.15 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகளில் 20 பரிசு பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்காமல் ‘மஞ்சள் பை’-யில் வழங்கப்படும். மாநில நுகர்வோர் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் இதனை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

Share:

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2022 பொங்கல் பரிசு – பாக்கெட் செய்யும் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2022 பொங்கல் பரிசு – பாக்கெட் செய்யும் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளன. அதற்கான பொருட்களை பாக்கெட் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு:

தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான தை முதல் நாளில் தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். மேலும் ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால் தற்போதைய அறிவிப்பில் பணம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, ஆவின் நெய் போன்ற பொங்கல் வைக்க தேவையான பொருட்களும், அது போக மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை கோதுமை மாவு உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் உட்பட 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. சுமார் 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மஞ்சள் பையில் 20 பொருட்களுடன் பொங்கல் பரிசு – அரசு அறிவிப்பு..

மேலும் ஜனவரி 3ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வழங்கப்படவுள்ள பொருட்களை பாக்கெட் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்களை ரேஷன் கடைகளுக்கு கொண்டு சேர்க்க வாணிப கழகத்தினர் மற்றும் கூட்டுறவு சங்கத்தினர் கூடுதலாக சுமை தூக்கும் ஊழியர்களை நியமித்துள்ளனர்.

Share:

டிச.28 CEOக்கள் கூட்டம் - ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், பதவி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, முக்கிய ஆலோசனை..

பள்ளிகளை ஜனவரி 3ல் முழுமையாக திறப்பது குறித்து, 28ம் தேதி முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்களுடன், சென்னையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின், செப்., 1 முதல், பள்ளி, கல்லுாரிகளில் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சுழற்சி முறையில், காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. 

இந்நிலையில், ஜன., 3ம் தேதியில் இருந்து, 6ம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும், முழு நாளும் பள்ளிகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதன்படி, நேரடி வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடைமுறை குறித்து ஆய்வு செய்ய, 28ம் தேதி முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடக்கிறது.

பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் பங்கேற்று, ஆலோசனைகள் வழங்க உள்ளார்.இந்த கூட்டத்தில், பள்ளி கட்டட விபத்துகள், அதற்கு பின் நடந்த கட்டட ஆய்வுகள், மாணவியருக்கான பாலியல் பிரச்னைகள், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், பதவி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share:

6,7,8 std Assessment Test - Common Examination Time Table & Syllabus - Download

6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 முதல் நடைபெற உள்ள மதிப்பீட்டுத் தேர்வுக்கான அட்டவணை மற்றும் தேர்வு பாடத்திட்டம். ( சென்னை மாவட்டம் )



6,7,8 std Assessment Test - Common Examination Time Table & Syllabus - Download here...

Share:

அரையாண்டு விடுமுறை அவசியமற்றது: தனியாா் பள்ளிகள் கருத்து!

நிகழ் கல்வியாண்டில் அரையாண்டுத் தோ்வே நடைபெறாத நிலையில் அதற்கான விடுமுறை அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல என தனியாா் பள்ளிகளின் நிா்வாகிகள், பெற்றோா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.


தமிழகத்தில் கரோனா பரவலால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நோய்த் தொற்று குறைந்ததால் இரண்டு கட்டங்களாகத் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நிகழ் கல்வியாண்டு தாமதமாகத் தொடங்கியதால் இந்தாண்டு காலாண்டு, அரையாண்டு தோ்வுகள் நடைபெறாது. அதற்கு பதிலாக திருப்புதல் தோ்வுகள் நடத்தப்படும் என்றுபள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து மாவட்டவாரியாக பள்ளிகளில் தற்போது முதல் திருப்புதல் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.



இந்த நிலையில் பள்ளிகளுக்கு வழக்கம்போல் நிகழாண்டும் அரையாண்டுத் தோ்வு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. அவா்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகளுக்கு டிசம்பா் 25 முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை அரையாண்டு தோ்வு விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா்.


இந்த அறிவிப்புக்கு தனியாா் பள்ளிகளின் நிா்வாகிகள், பெற்றோா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இது குறித்து அவா்கள் கூறுகையில், மாணவா்களுக்கு தற்போது வழங்கியுள்ள அரையாண்டு விடுமுறை அவசியமற்றது. கரோனா பரவலால் 20 மாதங்களுக்குபின் பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் நவம்பா் மாதம் பலத்த மழை காரணமாக 10 நாள்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றன. இந்தச் சூழலில் மீண்டும் ஒரு வாரத்துக்கும் மேல் தொடா் விடுமுறை விடுவது ஏற்புடையதல்ல; அரசின் இந்த முடிவால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.


இது குறித்து தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் கே.ஆா்.நந்தகுமாா் கூறுகையில், ஒமைக்ரான் பரவலால் மீண்டும் பள்ளிகள் மூடப்படும் அச்சம் உள்ளது. இந்தநிலையில் அரையாண்டு விடுமுறையால் கற்பித்தலில் மீண்டும் ஒரு இடைவெளி ஏற்படும். அரையாண்டு தோ்வே நடத்தப்படாத சூழலில் விடுப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை. ஓரிரு மாதங்களில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படவுள்ளது. இதை கருத்தில் கொண்டு அரையாண்டு விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.

Share:

நடப்பாண்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு - பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவிப்பு

நடப்பாண்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு - பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவிப்பு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு (25.12.2021 சனி முதல் 2.1.22 ஞாயிறு வரை 9 நாட்கள்) - பள்ளிக் கல்வி அமைச்சர் நெல்லை ஆய்வுக் கூட்டத்தில் உறுதி 

அரையாண்டு தேர்வு விடுமுறை 

தமிழகத்தில் நாளை முதல் ஜன. 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க பேருந்துகளில் கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 9 days Half yearly holiday for Schools - from Saturday 25.12.2021 to 02.01.2022 Sunday - confirmed by the Minister of School Education in Nellai review meeting.



Share:

தமிழகத்தில் பொங்கல் பரிசாக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அரசின் திட்டம்.

தமிழகத்தில் பொங்கல் பரிசாக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அரசின் திட்டம்.



தமிழக அரசு நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை ஒன்றை அறிவித்திருந்தது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கூடிய விரைவில் நிறைவேற்ற உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு அனைவரும் சிறப்பாக கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. அத்துடன் தற்பொழுது பொங்கல் தினத்தை மேலும் சிறப்பாக கொண்டாட கூடுதல் அறிவிப்பை அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து விவசாயிகளுக்கு உதவிபுரியும் வகையில் நகைக்கடன் தள்ளுபடியை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு அரசாணை ஒன்றை அறிவித்திருந்தது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களுடன் விவசாயம் செய்ய நகைக்கடன் பெற்றிந்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலும் விவசாயம் சாராத கடன்களுக்கு தள்ளுபடி செல்லாது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. அதில் குறிப்பாக போலி நகைகளை கொண்டு கடன் வாங்குவது மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்று வருகின்றனர். இந்த முறைகேடுக்கு வங்கி அதிகாரிகளும் உதவி செய்கின்றனர்.

இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் கூட்டுறவு சங்க நகைக்கடன்களை ஆய்வு செய்யும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இப்பணிகளை வருகிற நவம்பர் 30 ஆம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகைக்கடன் தள்ளுபடியை அமல்படுத்த உள்ளதாக அரசு முடிவெடுத்துள்ளது. அத்துடன் கடன் தள்ளுபடி குறித்த ரசீதும், நகைகளும் பயனாளிகளுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Share:

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு & பதவிகள் – முழு விபரம் உங்களுக்காக!

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு & பதவிகள் – முழு விபரம் உங்களுக்காக!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட சில முக்கியமான விவரங்களை இப்பதிவில் காணலாம்.

குரூப் தேர்வு

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் ஒவ்வொரு பணியிடங்களும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 1 முதல் குரூப் 4 வரையுள்ள அனைத்து பணிகளுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இப்போது கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சரிவர நடத்த முடியாதபடி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள TNPSC போட்டித்தேர்வுகள் வரவிருக்கும் புதிய ஆண்டில் நடத்தப்பட இருக்கிறது.

இதற்கான TNPSC வருடாந்திர தேர்வு கால அட்டவணையும் கடந்த வாரங்களில் வெளியிடப்பட்டது. இதில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் 2022 மார்ச் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தேர்வு மூலம் சுமார் 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதனால் TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய சில முக்கியமான விவரங்களை இப்பதிவில் காணலாம்.

அந்த வகையில் முதலாவதாக, குருப் 4 தேர்வு மூலம் 

  1. இளநிலை உதவியாளர், 
  2. தட்டச்சர், 
  3. சுருக்கெழுத்து தட்டச்சர், 
  4. VAO
  5. வரி தண்டலர், 
  6. நில அளவர், 
  7. வரையாளர் 

ஆகிய 7 பதவிகள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் TNPSC குரூப் 4 தேர்வில் கலந்து கொள்பவர்கள் 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இருப்பினும் பட்டப்படிப்புக்கு ஏற்றபடி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.

Share:

Illam thedi kalvi - Primary & Upper Primary Volunteers Training Guide

Illam thedi kalvi - Primary & Upper Primary Volunteers Training Guide

Illam thedi kalvi - Primary & Upper Primary Volunteers Training Guide

இல்லம் தேடிக் கல்வி கல்வி திட்ட தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான முதல் கட்ட 2 நாள் பயிற்கான பயிற்சிக் கட்டகத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Std 1-5 

Itk- Primary Volunteers Training Guide Download 

Std 6-8 

Itk- Upper Primary Volunteers Training Guide Download 

Share:

வகுப்பறை சுத்த பணிகளில் மாணவர் ஈடுபடக்கூடாது

வகுப்பறை சுத்த பணிகளில் மாணவர் ஈடுபடக்கூடாது


பள்ளி வகுப்பறைகளையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்' என பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலம் அடுத்த கீழஉரப்பனூரைச் சேர்ந்தவர் ஆதிசிவன். இவரது மகன் சிவநிதி.திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.2015ல் ஜூன் மாதம் வகுப்பறையை சுத்தம் செய்யும்படி வகுப்பாசிரியர் சிவநிதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி சுத்தம் செய்த போது டெஸ்க் விழுந்து சிவநிதியின் இடதுகால் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.வகுப்பறையை சுத்தம் செய்யக் கூறியதால் தான் தன் மகன் காயமடைந்ததாகவும் இது மனித உரிமை மீறல் எனக் கூறியும் ஆதிசிவன் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

விசாரித்த ஆணையம் சுத்தம் செய்ய போதுமான ஊழியர்களை நியமிக்காததற்கு பள்ளி நிர்வகம் தான் காரணம் எனக்கூறி பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களுக்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் பள்ளிகளில் வகுப்பறைகள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிக்க பள்ளி கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share:

TET தேர்வு எழுத காத்திருப்போர் கவனத்திற்கு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு

TET தேர்வு எழுத காத்திருப்போர் கவனத்திற்கு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு



தமிழகத்தில் கடந்த சுமார் 19 மாதங்களாக பரவி வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. இது குறித்து தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் விரைவில் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார்.

TET தேர்வு விரைவில்:

தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) மூலம் தகுதியான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது மத்திய அரசு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விதமாக TET தேர்வை அறிமுகம் செய்தது. அந்த வகையில் TET மற்றும் CTET தேர்வு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகத்தில் TET தேர்வானது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TNTRB) நடத்தப்பட்டு வருகிறது. மத்திய ஆசிரியர் தகுதி தேர்வானது (CTET) மத்திய அரசு சார்பில் CBSE நடத்தி வருகிறது.

TET தேர்வில் மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும், அதில் பொதுப்பிரிவினருக்கு 90 மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 82 மதிப்பெண்களும் எடுத்தால் தேர்ச்சி என்று அளிக்கப்படுகிறது. இந்த தேர்ச்சியானது வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது. மேலும் இந்த தேர்வுகள் NCTE விதிமுறைப்படி ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் TET தேர்வு 2013ம் ஆண்டு தொடங்கி 2014, 2017, 2019 என 4 தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டுகால அட்டவணைப்படி கடந்த 2020 ஜூலை மாதம் TET தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக TET தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் TET தேர்வு எப்போது வரும் என்று இடைநிலை ஆசிரியர் படித்துள்ள மற்றும் பட்டதாரி ஆசிரியர் படித்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் TET தேர்வு குறித்து தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் TET தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியானதும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றோருக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்

Share:

மாணவியருக்கான உதவி எண்களை பாட புத்தகத்தில் அச்சிட உத்தரவு

மாணவியருக்கான உதவி எண்களை பாட புத்தகத்தில் அச்சிட உத்தரவு

பாலியல் பிரச்னைகளை தடுக்கும் வகையில், மூன்றாம் பருவ பாட புத்தகங்களில், உதவி எண்களை அச்சிட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பாலியல் பிரச்னைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மாணவியருக்கு, சில ஆசிரியர்களும், மாணவர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதாக, பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும், பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல், மாணவியர் தற்கொலை செய்து, உயிரை மாய்த்து கொள்ளும் மோசமான நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதை தடுக்கவும், மாணவியருக்கு மன உறுதியை அளிக்கும் வகையிலும், பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வி துறை மேற்கொண்டுள்ளது.இதன்படி, ஒவ்வொரு பள்ளிக்கும் உளவியல் நிபுணர்களை அனுப்பி, மாணவியர் மற்றும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. அதேபோல, மாணவியரின் பெற்றோர் பள்ளிக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 

பாலியல் பிரச்னை ஏற்படாமல் தடுக்க, பள்ளி நிர்வாகத்தினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த வரிசையில், மூன்றாம் பருவ பாட புத்தகங்களில், மாணவியருக்கான விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் உதவி எண்களை அச்சடித்து வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

இதன்படி, 14417, 1098 ஆகிய எண்களை, பாட புத்தகத்தின் முன்பக்கத்தில் அச்சிட்டு வழங்க வேண்டும் என, பள்ளி நிர்வாகத்தினருக்கு ஆலோசனை அளித்துள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share:

அரையாண்டுத் தேர்வு விடுமுறையை மதிப்புமிகு. ஆணையர் அறிவிக்கக்கோரி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

அரையாண்டுத் தேர்வு விடுமுறையை மதிப்புமிகு. ஆணையர் அறிவிக்கக்கோரி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மிகுந்த எதிர்பார்ப்பான அரையாண்டுத் தேர்வு விடுமுறையை மதிப்புமிகு. ஆணையர் அறிவிக்கக்கோரி தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் Dr. அ.மாயவன் Ex.MLC அவர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் வேண்டுதல்.




Share:

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – 72.20 லட்சம் பேர் காத்திருப்பு! ஷாக் ரிப்போர்ட்!

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – 72.20 லட்சம் பேர் காத்திருப்பு! ஷாக் ரிப்போர்ட்!



தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை குறித்த விவரங்களை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழகத்தில் அரசு வேலை பெற அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியம். மேலும் அவ்வவ்போது கல்வித் தகுதிகளையும் அப்டேட் செய்ய வேண்டும். இந்த வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து வர வேண்டும். இதற்காக இணையதளம் வாயிலாகவும் அல்லது நேரடியாகவும் புதுப்பிப்பு செய்யலாம். தமிழகத்தில் 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அரசு தற்போது 3 மாத கால அவகாசம் அளித்துள்ளது. இதை பயன்படுத்தி ஏராளமானோர் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து வருகின்றனர்.


மேலும் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதந்தோறும் 300 ரூபாயும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் 600 ரூபாயும் 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை உண்டு.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெற வருமான உச்ச வரம்பு கிடையாது. தற்போது தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 72 ,20 ,454 ஆக உள்ளது. அதில் 33,81,966 போ் ஆண்கள் மற்றும் 38,38,264 போ் பெண்கள் மேலும் 224 போ் மூன்றாம் பாலினத்தவா்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Share:

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை கிடையாது – வெளியான தகவல்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை கிடையாது – வெளியான தகவல்!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கு 10 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு விடுமுறை கிடையாது என்று தமிழக அரசால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



அரையாண்டு விடுமுறை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. எனினும் நீண்ட காலம் கொரோனாவால் கடந்த நிலையில் வருடத்தின் கடைசியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – 72.20 லட்சம் பேர் காத்திருப்பு! ஷாக் ரிப்போர்ட்!

அவ்வாறு திறக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி 3ம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி தினசரி வகுப்புகள் நடக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதாவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை அரையாண்டு தேர்வுக்கு வழங்கப்படும் 10 நாள் விடுமுறையில் கொண்டாடுவது வழக்கம்.

அரையாண்டுத் தேர்வு விடுமுறையை மதிப்புமிகு. ஆணையர் அறிவிக்கக்கோரி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

ஆனால் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு நடைபெறாததால் விடுமுறை மட்டும் வழங்கப்படும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது மாணவர்களுக்கு டிச.10 முதல் 20ம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் வருவதால் அன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து வாரத்தில் 6 நாட்கள் வேலை பார்த்து வந்த ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Share:

முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு.! தமிழக அரசு உத்தரவு.

முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமான வரம்பை ரூ.72,000ல் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்டமருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குதல்.


அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமான வரம்பு 1.20 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடபட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Share:

12th Maths Guide - Tamil Medium

12th Maths Guide - Tamil Medium

12th Maths Reduced Syllabus full Guide MLM Material PDF Download.Viluppuram District 12th maths Reduced Syllabus study material book back Question and answer guide 2021-2022

12th Maths Guide - Tamil Medium ( Reduced Syllabus) - Click here Download
Share:

TN 12th Revision Exam Model Question Paper 2021-22

TN 12th Revision Exam Model Question Paper 2021-22

12th Tamil Revision Exam Question paper 2021,12th English Revision Exam Question paper 2021,
12th Maths Revision Exam Question paper 2021,12th Physics Revision Exam Question paper 2021,12th Chemistry Revision Exam Question paper 2021,12th Botany Revision Exam Question paper 2021,12th Zoology Revision Exam Question paper 2021,12th Biology Revision Exam Question paper 2021,12th Commerce Revision Exam Question paper 2021,12th Computer science Revision Exam Question paper 2021,12th computer Application Revision Exam Question paper 2021,12th Computer Technology Revision Exam Question paper 2021,12th Economics Revision Exam Question paper 2021,12th History Revision Exam Question paper 2021,12th Geography Revision Exam Question paper 2021,12th Accountancy Revision Exam Question paper 2021,12th Bio Botany Revision Exam Question paper 2021,12th Bio Zoology Revision Exam Question paper 2021,
TN 12th Revision Exam Model Question Paper 2021-22

12th Revision Test Model Question Paper 2021-22

  • 12th Tamil Revision test Model Question Paper - Click Here
  • 12th English Revision test Model Question Paper - Click Here
  • 12th Maths Revision test Model Question Paper -Click Here
  • 12th Physics Revision test Model Question Paper - Click Here
  • 12th Chemistry Revision test Model Question Paper - Click Here
  • 12th Biology Revision test Model Question Paper - Click Here
  • 12th Computer Science Model Revision test Question Paper - Click Here
  • 12th Commerce Revision test Model Question Paper - Click Here
  • 12th Accountancy Revision test Model Question Paper -Click Here
  • 12th Economics Revision test Model Question Paper - Click Here
  • 12th History Science Revision Model test Question Paper - Click Here
  • 12th Geography Revision test Model Question Paper - Click Here

12th Tamil Revision Exam Question paper 2021,12th English Revision Exam Question paper 2021,
12th Maths Revision Exam Question paper 2021,12th Physics Revision Exam Question paper 2021,12th Chemistry Revision Exam Question paper 2021,12th Botany Revision Exam Question paper 2021,12th Zoology Revision Exam Question paper 2021,12th Biology Revision Exam Question paper 2021,12th Commerce Revision Exam Question paper 2021,12th Computer science Revision Exam Question paper 2021,12th computer Application Revision Exam Question paper 2021,12th Computer Technology Revision Exam Question paper 2021,12th Economics Revision Exam Question paper 2021,12th History Revision Exam Question paper 2021,12th Geography Revision Exam Question paper 2021,12th Accountancy Revision Exam Question paper 2021,12th Bio Botany Revision Exam Question paper 2021,12th Bio Zoology Revision Exam Question paper 2021,

Share:

9th Science Unit Test original Question paper 2021-2022 - Madurai district

9th Science Unit Test original Question paper 2021-2022 - Madurai district

9th std science unit test Revision exam Question papers Both Tamil & English Medium PDF Download 2021-2022 November and December

Share:

10th Standard Unit Test Question Paper 2021 - Answer key ( November - December )

10th All Subject Unit Test Question Paper both Tamil Medium and English Medium download pdf. 10th Tamil Unit Test Question Paper, 10th English Unit Test Question Paper, 10th Maths Unit Test Question Paper, 10th Science Unit Test Question Paper, 10th Social Science Unit Test Question Paper, TM & EM. 10th Tamil All District Question Papers. Krishnagiri, Erode, Salem, Madurai. 10th Tamil Unit Test Latest Question Papers Download PDF.

10th Unit Test Question Paper 2021

10th Unit Test Question Paper 2021 - Answer key ( November - December )

10th Unit Test Question Paper 2021

10th Tamil

10th English

10th Maths

10th Science

10th Social Science


Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support