தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தடை, வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை – CEO உத்தரவு!

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தடை, வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை – CEO உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறிந்துள்ளதை தொடர்ந்து பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நடப்பாண்டு முடிவதற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளதால் விடுமுறை நாட்களிலும் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறக்க தடை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தப்படியே மொபைல் அல்லது கணினி பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வந்தனர். கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து நவம்பர் மாதத்தில் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. நடப்பாண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.


இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட விடுமுறைகள் அளிக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் அமைப்பு முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்கள். அதனால் தமிழ்கத்தில் அரையாண்டு விடுமுறையாக டிசம்பர் 25 முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவிப்பை தெரிவித்தார். ஆனால் சில பள்ளிகள் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டும் என்று விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இவ்வாறு திறக்கப்பட்டால் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அரசு மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் இது குறித்து கூறியதாவது, தமிழக முழுவதும் 1 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையாக டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது. இத்தினங்களில் ஆன்லைன் வகுப்பு மூலமாகவோ அல்லது நேரடி வகுப்பு மூலமாகவோ நடத்தப்பட்டால் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசு மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...