இந்திய அரசு பள்ளிகளின் தரம் மேம்பாடு – மத்திய அரசு ஒப்புதல்!
இந்திய அரசு பள்ளிகளின் தரம் மேம்பாடு – மத்திய அரசு ஒப்புதல்! |
தேசிய கல்வி கொள்கை 2020ஐ முழுமையாக செயல்படுத்த ஒப்புக்கொள்ளும் மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களை என்று மத்திய அமைச்சரவை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் முக்கிய அறிவிப்பான இதை பல மாநிலங்களும் வரவேற்றுள்ளது.
தேசிய கல்வி கொள்கை:
கடந்த மாதம், மத்திய அரசு மக்களவையில் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கையை தொடங்கியுள்ளன, அதே நேரத்தில் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை தேசிய கல்வி கொள்கைக்கான ஒப்புதலை இன்னும் அளிக்கவில்லை. தேசிய கல்வி கொள்கை 2020ஐ முழுமையாக செயல்படுத்த ஒப்புக்கொள்ளும் மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களில் PM SHRI (PM Schools for Rising India) திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் கலந்தாலோசித்து 14,500 பள்ளிகள் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.27,360 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. PM SHRI ஒரு புதிய மத்திய நிதியுதவி திட்டமாக இருக்கும், இதில் 60 சதவீதத்தை அரசாங்கம் ஏற்கும் என்றும் மீதமுள்ள 40 சதவீதத்திற்கு மாநில அரசு பொறுப்பாகும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். PM SHRI பள்ளிகள் என குறிப்பிட்ட தர உத்தரவாதத்தை அடைவதற்காக இந்த பள்ளிகளுக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிமொழிகளை மத்திய அரசு முழுமையாக செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறது என்று கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதிரி பள்ளிகள்
தேசியக் கல்வி கொள்கையை ஏற்று கொண்ட மாநிலங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது இரண்டு மாதிரி பள்ளிகள் அமைக்கப்படும். மாநில அரசுகளின் விண்ணப்பங்களைத் தொடர்ந்து கடுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு பள்ளிகள் தேர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா போன்று மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளுக்கும், மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். 18 லட்சம் மாணவர்கள் இதனால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தின் கீழ், “நேரடியாக பள்ளி அதிகாரிகளுக்கு” பணம் மாற்றப்படும் என்று கல்வி அமைச்சர் கூறினார்.