தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை – சிறப்பு குழு அமைப்பு!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை – சிறப்பு குழு அமைப்பு!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை – சிறப்பு குழு அமைப்பு!
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை – சிறப்பு குழு அமைப்பு!

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீட் தோ்வு எழுதிய தமிழக மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு குழு:

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 12ம் மதிப்பெண்கள் வெளியான பிறகு நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவு தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

சுமார் 18 லட்சம் பேர்

இந்த நிலையில் தமிழ் நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. கோரிக்கைகள் மனுக்கள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனாலும் மத்திய அரசு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் 2022ம் ஆண்டுகான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி வு நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இதில் தமிழகத்தில் இருந்து 1,45,988 பேர் பங்கேற்றனர்.

நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானது இதனையடுத்து தமிழகத்தில் நீட் தேர்வு மனநல ஆலோசனைகள் வழங்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தோல்வியுற்று மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டனர். இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அரசு சார்பாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தோ்வு எழுதிய மாணவா்களை தொடா்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments