தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – விரைவில் அறிவிப்பு..

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – விரைவில் அறிவிப்பு..



தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ளதால் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

பள்ளி விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டன. ஆனால் நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகமான நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கியது. அதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதனால் தமிழகத்தில் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியதை உணர முடிந்தது.

Related Post :

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஏப்ரலில் பொதுத்தேர்வு? - விரைவில் அட்டவணை வெளியீடு..

அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது. இதில் குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் கல்வி நலன் கருதி மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது.

Related Post :

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஷாக் – திருப்புதல் தேர்வு கேள்வித்தாள் லீக்? தீவிர விசாரணை..

அதன்படி தற்போது வழக்கம் போல் பள்ளிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் அரசு பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் நடைபெறும். இந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் பள்ளிகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதில் 19ம் தேதி அன்று தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டத்திற்கும் பொது விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது. அத்துடன் 23ம் தேதிக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...