10ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்களுக்கு India Post office யில் வேலைவாய்ப்பு - உடனே முந்துங்கள்!

10ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்களுக்கு India Post office யில் வேலைவாய்ப்பு  - உடனே முந்துங்கள்! 

இந்திய அஞ்சல் துறையில் 40,800+ GDS காலிப்பிபணியிடங்கள்

India Post Recruitment 2023 - Apply here for GDS Posts - 40,889 Vacancies - Last Date - 16.02.2023

India Post.லிருந்து காலியாக உள்ள GDS பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16.02.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

India Post

பணியின் பெயர்: 

GDS

மொத்த பணியிடங்கள்: 

40,889

தகுதி: 

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்: 

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • BPM – ரூ.12,000/- முதல் ரூ.29,380/-
  • ABPM – ரூ.10,000/- முதல் ரூ.24,470/-

வயது வரம்பு: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


தேர்வு செயல்முறை: 

தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Merit list) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.02.2023 பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

16.02.2023

vacancy List Pdf Download here

Share:

11th tamil Important 6 marks - Public Exam 2023 ( விரிவானம்)

11th tamil Important 6 marks - Public Exam 2023 ( விரிவானம்)

6. பிம்பம்   
7. சிம்பொனி தமிழர் , ஆஸ்கர் நாயகன்  
8. நர்தகி  நடராஜன் ( செவ்வி ) 
9. வாடிவாசல் .

Share:

கண்ணம்மா போட்ட கண்டிஷன்.. மீண்டும் பாரதிக்கு கல்யாணம்.. சீரியலின் எதிர்பாராத கடைசி முடிவு!

 கண்ணம்மா போட்ட கண்டிஷன்.. மீண்டும் பாரதிக்கு கல்யாணம்.. சீரியலின் எதிர்பாராத கடைசி முடிவு!

பாரதிகண்ணம்மா சீரியலில் மீண்டும் கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்து இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா பாரதியை மன்னித்து ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

ஊர்க்காரர்கள் அனைவரும் பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமணத்தை சிறப்பாக செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர்.


கண்ணம்மா தன்னுடைய கல்யாண விஷயத்தில் கண்டிஷன் ஒன்றை போட்டு இருக்கிறார்.

கண்ணம்மாவின் ஆசையை நிறைவேற்ற பாரதி குடும்பத்தோடு சேர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்.

கல்யாண விஷயத்தில் எழில் எடுத்த முடிவு.. கதறி அழும் ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி சீரியல் எதிர்பாராத முடிவுகல்யாண விஷயத்தில் எழில் எடுத்த முடிவு.. கதறி அழும் ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி சீரியல் எதிர்பாராத முடிவு

ஊர்க்காரர்களின் அன்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் எல்லோரும் கண்ணம்மா வீட்டுக்கு திரும்பி வந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஊர் தலைவர் இப்போதுதான் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஊருக்கு கண்ணம்மா தன்னந்தனியா வரும்போது எங்களுக்கு ரொம்பவே டாக்டர் மேல கோபத்தில் இருந்தோம். ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று வருத்தத்தில் இருந்தோம் .ஆனால் இங்கே வந்து டாக்டர் எங்களுக்கு எவ்வளவு பெரிய உதவியும் செய்து இப்போது கண்ணம்மா மனதையும் மாற்றிவிட்டார் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். பின்பு தாமரை இந்த ஊரை விட்டு டாக்டர் போனாலும் மீண்டும் எந்த ஊருக்கு வைத்தியம் பார்க்க வர வேண்டும் .இங்கே ஒரு ஹாஸ்பிடல் நீங்க தனியா கட்டி வர வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார் .அதற்கு கண்ணம்மா தான் உதவ வேண்டும் என்று கூறுகிறார். பிறகு ஊர்க்காரர்கள் எப்போ சென்னைக்கு கிளம்ப போறீங்க என கேட்க, சீக்கிரம் போகணும் போய் கல்யாண வேலைகளை பார்க்கணும் என சௌந்தர்யா சொன்னதும் கணபதி ஏன் இந்த ஊரிலேயே கல்யாணத்தை வைக்கக் கூடாது என கேட்கிறார்.

கண்ணம்மாவின் கண்டிஷன்

கணபதியின் கேள்விக்கு பாரதியும் சம்மதம் சொல்ல, கண்ணம்மாவும் எனக்கும் எந்த மறுப்பும் இல்லை என்று கூறுகிறார். அடுத்து சௌந்தர்யா எனக்கு பரிபூரண சம்மதம் என்று கூறுகிறார் .ஆனால் கண்ணம்மா எனக்கு கல்யாணம் லட்சம் லட்சமா செலவு பண்ணி பிரமாண்டமா இருக்கணும்னு நான் ஆசைப்படலை. ஆனா மறக்க முடியாத விஷயமாக இருக்கணும். இத்தனை வருஷம் நான் பட்ட துன்பத்திற்கு ஆறுதலாக இருக்கணும் என கண்டிஷன் போடுகிறார்.


ஒரு ஐடியா சொல்லுங்க பாஸ்

கண்ணம்மாவின் கண்டிஷனை கேட்ட அனைவரும் கல்யாணத்தை எப்படி வித்தியாசமாக பண்ணுகிறது என யோசித்துக் கொண்டிருக்கின்றனர். பாரதியிடம் சௌந்தர்யா நீயே யோசித்து முடிவு எடு என்று சொல்ல, பாரதி கணபதியிடம் ஐடியா கேட்கிறார். பிறகு அகிலன், அஞ்சலி வர அவர்களிடமும் பாரதி ஐடியா கேட்கிறார் .அனைவரும் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே வரும் கண்ணம்மா இங்க வந்து என்ன யோசனை செஞ்சுட்டு இருக்கீங்க என கேட்கிறார். கல்யாணம் வித்யாசமா இருக்கணும்னு சொன்னா அதனால் தான் என்ன பண்ணனும்னு யோசிச்சிட்டு இருக்கோம் என பாரதி சொல்ல, நான் வேணும்னா க்ளூ கொடுக்கிறேன் என்று கண்ணம்மா கூறுகிறார்.

மாட்டிக்கொண்ட பாரதி

இந்த கல்யாணம் எப்படி நடக்கணும்னு என்கிட்ட தெளிவா ஐடியா இருக்கு என கண்ணம்மா சொல்ல, என்ன ஐடியா? என்று அனைவரும் ஆவலோடு கேட்க, அதை சொல்ல மாட்டேன் என கடைசியில் கண்ணம்மா ஷாக் கொடுக்கிறார். பிறகு இரவு நேரத்தில் கண்ணம்மா தூங்கியதும் பாரதி ரூமுக்குள் சென்று கண்ணம்மாவின் டைரியில் கண்டிப்பாக ஏதாவது எழுதி வைத்திருப்பார் என அதைத் தேட முயற்சி செய்கிறார், ஆனால் அப்போது கண்ணம்மாவிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Share:

மெயின் வில்லன் சிம்பு? தளபதி 67 ப்ரோமோவில் சிம்பு.. அப்போ அவரு தான் மெயின் வில்லனா?:

 தளபதி 67 ப்ரோமோவில் சிம்பு.. அப்போ அவரு தான் மெயின் வில்லனா?: எகிறும் எதிர்பார்ப்பு... உண்மை என்ன?

சென்னை: விஜய் நடிப்பில் பொங்கல் ரேஸில் களமிறங்கிய வாரிசு, உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டது.

வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.

விக்ரம் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு லோகேஷ் சினிமாட்டிக் கான்செப்ட்டில் உருவாகும் தளபதி 67 மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்

வாரிசு திரைப்படம் மூலம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த விஜய் அடுத்து தளபதி 67 ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். எப்போதும் ஒரு படம் வெளியானதும் வெளிநாடு டூர் சென்று வந்த பிறகே அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பது விஜய்யின் வழக்கம். ஆனால், தளபதி 67 படத்திற்காக மொத்தமாக கால்ஷீட் கொடுத்ததோடு, படப்பிடிப்பிலும் உடனடியாக கலந்துகொண்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். ஆனாலும் தற்போது வரை தளபதி 67 படம் பற்றிய அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

பிப்ரவரி முதல் வாரத்தில் அப்டேட்

லோகேஷ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது. இதனால் இனிமேல் என் படங்களில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் இருக்கும் என லோகேஷ் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் தளபதி 67 படமும் LCU கான்செப்ட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் இன்னும் தாறுமாறான எதிர்பார்ப்பில் உள்ளது தளபதி 67. இந்நிலையில் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் பிப்ரவரி 1 முதல் 3ம் தேதிக்குள் வெளியாகும் என லோகேஷ் தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் மோதும் பலமான கூட்டணி

இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் ஆகியோர் கமிட் ஆகியுள்ளார்களாம். சில தினங்களுக்கு முன்னர் தளபதி 67 ஷூட்டிங்கில் கலந்துகொண்டதை உறுதி செய்திருந்தார் மிஷ்கின். அதேபோல் இரு தினங்களுக்கு முன் தளபதி 67ல் நடிக்கும் அர்ஜுனின் கெட்டப்பும் வெளியாகி வைரலானது. இதனிடையே தளபதி 67 அப்டேட்டை விக்ரம் படத்துக்காக எடுக்கப்பட்ட டைட்டில் ப்ரோமோ மாதிரி வெளியிட லோகேஷ் முடிவு செய்துள்ளாராம்.

மெயின் வில்லன் சிம்பு?

சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் கெளதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் தவிர இன்னொரு மெயின் வில்லன் படத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கேரக்டரில் நடிக்க முதலில் விஷாலுடன் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்திய செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி சிம்பு தான் மெயின் வில்லனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. பத்து தல சூட்டிங் முடித்துவிட்ட சிம்பு, அவரது அடுத்தப் படம் குறித்து அறிவிக்காமல் சைலண்டாக இருக்கிறார். இதனால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தளபதி 67 ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இது ஆதாரமற்ற தகவல் என்றும், சிம்பு தளபதி 67ல் நடிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் வாரிசு படத்தில் 'தீ தளபதி' என்ற பாடலை சிம்பு பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிர்ஷ்ட மழை..3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் ஜாக்பாட்

 பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிர்ஷ்ட மழை..3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் ஜாக்பாட்

நவ கிரகங்களின் பார்வை பயணங்களால் மூன்று ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது.

 பிப்ரவரி மாதத்தில் மூன்று ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. 2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தரும், சில ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தும். சனியின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பாதி நாட்களும் கும்ப ராசியில் 15 நாட்களும் பயணம் செய்வார். சுக்கிரன் கும்ப ராசியிலும் 15ஆம் தேதிக்கு மேல் மீன ராசியில் உச்சம் பெற்றும் பயணம் செய்வார். புதன் மகர ராசியிலும் மாத இறுதியில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் மாதம் முழுவதும் ரிஷப ராசியில் பயணம் செய்வார். இந்த கிரகங்களின் பயணத்தால் துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.




துலாம்

துலாம் ராசியில் வீட்டில் கேது, மூன்றாம் வீட்டில் புதன் நான்காம் வீட்டில் சூரியன், ஐந்தாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் ராகு எட்டாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதம் வேலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. வேலைப்பளு அதிகரிக்கும். அறிவும் திறமையும் அதிகரிக்கும். வேலையில் புரமோசன், பதவி உயர்வு தேடி வரும். குடும்பத்துடன் சிறு பயணங்கள் செல்வீர்கள்.

குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம். நிறைய சந்தோஷங்கள் அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேருவீர்கள். உறவினர் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டில் உள்ள சூரியன் இடப்பெயர்ச்சியாகி ஐந்தாம் வீட்டில் உள்ள சனி உடன் மாத பிற்பகுதியில் இணைகிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். எதிர்காலத்தைப் பற்றி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சளி தொந்தரவுகள் வரலாம். ஆறாம் விட்டில் குரு பகவானுடன் மாத பிற்பகுதியில் சுக்கிரன் இணையப்போகிறார். பணத்தை பத்திரப்படுத்துங்கள். யாரை நம்பியும் கையில் உள்ள பொருட்களை கொடுத்து விட்டு ஏமாந்து போக வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் அற்புதங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. காரணம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசியில் 12ஆம் வீட்டிர் கேது, ஏழாம் வீட்டில் செவ்வாய்,நான்காம் வீட்டில் சுக்கிரன் சனி, மூன்றாம் வீட்டில் சூரியன், 5ஆம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. குழப்பமான மனநிலையில் யோசித்துக்கொண்டு இருப்பீர்கள். திருமண சுப காரியம் நடைபெறுவதில் தயக்கம் ஏற்படும். பொருள் வரவு அதிகரிக்கும். திருமணம் சுப காரியத்தடைகள் நீங்கும். ஐந்தில் குரு பலமான பார்வையைத் தருகிறது. சுப காரியங்களில் ஈடுபடலாம். குரு பார்வையால் உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் நான்காம் வீட்டில் பயணம் செய்வார். சுகமான மாதமாக அமைந்துள்ளது. பொருள் வரவு அதிகரிக்கும். திருமண குடும்ப வாழ்க்கையிலும் காதலும் அதிகரிக்கும். ஏழாம் வீட்டில் உள்ள செவ்வாய் பகவானால் குடும்பத்தில் கார சார விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செவ்வாய் பார்வை உங்கள் ராசிக்கு நேரடியாக கிடைப்பதால் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. கோபப்பட்டு பேசி சண்டை சச்சரவை ஏற்படுத்த வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நான்காம் வீட்டில் சூரியன் சனி உடன் இணையும் போது அதிர்ஷ்டகாலம் ஆரம்பமாகிறது. சுப ஸ்தானத்தில் சூரியன் இணைவதால் உங்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். அதிர்ஷ்டமான காலம் ஆரம்பமாகிறது. வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். இந்த மாதத்தில் திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். களத்திர காரகன் சுக்கிரன் 4ஆம் வீட்டில் இருப்பதால் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறப்போகிறது. மாத பிற்பகுதியில் சுக்கிரன் உச்சமடைவதால் புத்திர பாக்கியம் கை கூடி வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர் வீட்டு சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். பிப்ரவரி மாதம் மன நிறைவு தரும் அதிர்ஷ்டகரமான மாதமாக அமைந்துள்ளது.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, பிப்ரவரி மாதம் உங்கள் ராசிக்குள் சுக்கிரன் செவ்வாய் பயணம் செய்கின்றனர். இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தில் பயணம் சூரியன், சனி, புதன் சஞ்சரிக்கின்றனர். மூன்றாம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானமான 12வது வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதத்தில் உங்களுக்கு முகப்பொலிவு கூடும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். குரு சந்திர யோகம் கை கூடி வரப்போகிறது. நவ கிரகங்களின் பயணம் சாதகமாகவே உள்ளது. ராகு கேதுக்குள் கிரகங்கள் அடங்கியுள்ளன. சர்ப்ப தோஷம் கூடியுள்ளது. வேலையில் புரமோசன் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கை கூடி வரும். இலக்கை நோக்கி பயணம் செய்யப்போகிறீர்கள். ராசி நாதன் குரு நான்காம் வீட்டில் இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உயர்கல்வி யோகம் கிடைக்கும். சூரியன் மாத பிற்பகுதியில் சனி உடன் மூன்றாம் வீட்டில் இணைவதால் அதிர்ஷ்டம் கை வரப்போகிறது. வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பல விசயங்களை வெளிப்படுத்த வேண்டாம். தர்ம கர்மாதிபதி யோகம் வரப்போகிறது. பெண்களுக்கு மனம் போல மாங்கல்யம் கை கூடி வரும். பெண்களின் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நோய்கள் விலகும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் உடல் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். பிப்ரவரி மாதத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும் திடீர் ஜாக்பாட் மூலம் பண வரவு அதிகரிக்கப்போகிறது.


Share:

டிடியின் மறுமணம்! முதல்முறையாக ரகசியங்களை உடைத்த எதிர் நீச்சல் ரேணுகா..

 டிடியின் மறுமணம்! முதல்முறையாக ரகசியங்களை உடைத்த எதிர் நீச்சல் ரேணுகா.. 

இதுதான் நிஜ காரணமாம்!? டிடிக்கு தொழிலதிபரோடு திருமணம் என்ற தகவல்கள் வெளியாகி வருவதை தொடர்ந்து அவருடைய சகோதரியான பிரியதர்ஷினி முதல் முறையாக அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

: விஜய் டிவியின் செல்ல பிள்ளையாகவும் தொகுப்பாளராகவும் வலம் வரும் டிடி என்ற திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. டிடி தொழில் அதிபரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அதை குறித்து எந்த விளக்கத்தையும் கொடுக்காமல் இருந்து வருகிறார்.இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் டிடி யின் அக்கா முதல் முறையாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதுவரைக்கும் டிடி மறுமணத்தை பற்றி எந்த யோசனையும் இல்லாமல் தான் இருந்து வருகிறார் என்று கூறி இருக்கிறார். ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்பு டிடி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி சின்னத்திரை 






ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்தான். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. ஆரம்பத்தில் ஒரு நிகழ்ச்சியில் தனது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த டிடி தனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தந்து உதவும்படியும் அதில் தான் எப்படி கொண்டு செல்கிறேன் என்பதை பார்த்து பிறகு நீங்கள் யோசித்துக் கொள்ளுங்கள் என்று விஜய் டிவியிடம் பேசியிருக்கிறார். முதல் நாள் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியதை பார்த்து வியந்து போன விஜய் டிவி தொடர்ந்து அவருக்கே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறது. தற்போது அதிகமாக முக்கியமான நிகழ்ச்சி என்றாலே அதில் டிடி தான் தொகுத்து வழங்கி வருகிறார். உடல் நல பிரச்சனை டிடிக்கு சமீபத்தில் உடல்நல பிரச்சனை ஏற்பட்டு இருப்பது சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் தெரிந்தது. அதுவும் குறிப்பாக தன்னுடைய உடல் நலத்தை பற்றி பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கும் போதும் விரிவாக கூறியிருந்தார். தான் அதிகமாக நின்று கொண்டு தன்னால் பேச முடியாது என்பதை அவர் விளக்கி இருந்தார் ஆனாலும் விடாமுயற்சியோடு தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் தன்னுடைய திறமையை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வரும் டிடி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை கொண்டு சென்றது அனைவரையும் பாராட்ட வைத்தது. திருமணம் குறித்த வதந்தி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் டிடியின் வாழ்க்கையில் திருமணத்தில் எதிர்பார்க்காத சோகம் நடைபெற்றது. அவர் சிறுவயது நண்பராக இருந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு அப்படியே மாறிவிட்டது. ஒரு சில மாதங்களுக்குள் இவருடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் தற்போது அந்த திருமணத்திலிருந்து இவர் வெளியேறியும் விட்டார். ஆனாலும் தன்னுடைய வழக்கமான பணிகளில் கவனத்தை செலுத்தி வரும் டிடியை பற்றி சமூக வலைத்தளத்தில் அதிகமான வதந்திகள் பரம்பிக் கொண்டிருக்கிறது. விரைவில் டிடிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாகவும், அவருடைய வருங்கால கணவர் ஒரு தொழில் அதிபர் என்பது பற்றியும் சமூக வலைதளத்தில் அதிகமான கருத்துக்களும் புகைப்படங்களும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. 



வதந்திகளுக்கு விளக்கம் இந்த நிலையில் டிடியில் சகோதரி

,எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் பிரியதர்ஷினி முதல்முறையாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசி இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். அதில் டிடியை பற்றி பரவி வரும் செய்தியை பார்த்து நாங்களும் டிடியிடம் யார் அந்த தொழிலதிபர் என்று கேட்டோம். அதற்கு டிடி எனக்கே தெரியவில்லை என்று கூறிவிட்டாள், பொதுவாக இந்த மாதிரி வதந்திகள் வருவது அடிக்கடி நடப்பது தான். அதை நாங்கள் கண்டு கொள்வதே இல்லை. டிடி எப்போதும் அவளுடைய வாழ்க்கையில் வேலையில் தான் கவனமாக இருக்கிறார் .இப்போ வரைக்கும் டிடி இரண்டாவது திருமணத்தை பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை .நாங்கள் எதுவும் கேட்டாலும் அவள் சிரிப்பை மட்டும் தான் எப்போதும் போல எங்களுக்கு பதில் அளிப்பார். ஆனால் நாங்கள் அந்த வதந்திகளை கண்டு கொள்வதில்லை என்று கூறி இருக்கிறார். முற்றுப்புள்ளி  ஏற்கனவே டிடி, நடிகர் ஆர்கே சுரேஷ் மனைவியின் இரண்டாவது குழந்தையின் வளைகாப்பு ஃபங்ஷனுக்கு சென்றிருந்தார். அப்போது தனது சகோதரி ஆன பிரியதர்ஷினி யின் மகனோடு சென்றிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் கூட அந்த புகைப்படங்களையும் பலர் வெளியீட்டு இதுதான் டிடி திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரா? என்று வதந்திகளை பரப்பி வந்தனர். அதைக் குறித்தும் இப்படித்தான் தேவையில்லாத வதந்திகள் எல்லாம் பரவிக்கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் செவி சாய்த்தால் நம்முடைய நிம்மதி சந்தோஷம் எல்லாமே கெட்டுப் போய்விடும். அதனால் அடுத்தது என்ன நடக்க இருக்கிறதோ அது அப்படியே நடந்து போகட்டும் என்று கடந்து விட வேண்டியது தான் என்று பிரியதர்ஷினி அவருக்கே உரிய வழக்கமான சிரிப்போடு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

Share:

4th Std Kalvi TV video Link Collection

4th Std Kalvi TV video Link Collection

அனைவருக்கும் வணக்கம் நம்முடைய  வலைத்தளத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி தகவல்கள் நமது  வலைத்தளத்தில் தினமும் செய்திகளாக பதிவிடப்பட்டு வருகிறது. பல பயனுள்ள  தகவல்களை தெரிந்து கொள்ள www.padavelai.com என்ற வலைத்தளத்தை பார்க்கவும்.இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும்.நன்றி

CLICK HERE TO WATCH 4  STD KALVI TV - VIDEOS  -TAMIL

 CLICK HERE TO WATCH 4  STD KALVI TV - VIDEOS  -ENGLISH

 CLICK HERE TO WATCH 4  STD KALVI TV - VIDEOS  -MATHS 

 CLICK HERE TO WATCH 4 STD KALVI TV - VIDEOS  -SCIENCE

 CLICK HERE TO WATCH 4 STD KALVI TV - VIDEOS  - SOCIAL SCIENCE

Share:

3rd Std Kalvi TV video Link Collection

3rd Std Kalvi TV video Link Collection

அனைவருக்கும் வணக்கம் நம்முடைய  வலைத்தளத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி தகவல்கள் நமது  வலைத்தளத்தில் தினமும் செய்திகளாக பதிவிடப்பட்டு வருகிறது. பல பயனுள்ள  தகவல்களை தெரிந்து கொள்ள www.padavelai.com என்ற வலைத்தளத்தை பார்க்கவும்.இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும்.நன்றி


CLICK HERE TO WATCH 3RD STD KALVI TV - VIDEOS  -TAMIL

 CLICK HERE TO WATCH 3RD STD KALVI TV - VIDEOS  -ENGLISH

 CLICK HERE TO WATCH 3RD STD KALVI TV - VIDEOS  -MATHS 

 CLICK HERE TO WATCH 3RD STD KALVI TV - VIDEOS  -EVS

Share:

2nd Std Kalvi TV Video Link Collection


அனைவருக்கும் வணக்கம் நம்முடைய  வலைத்தளத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி தகவல்கள் நமது  வலைத்தளத்தில் தினமும் செய்திகளாக பதிவிடப்பட்டு வருகிறது. பல பயனுள்ள  தகவல்களை தெரிந்து கொள்ள ww.padavelai.com என்ற வலைத்தளத்தை பார்க்கவும்.இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும்.நன்றி

 CLICK HERE TO WATCH 2ND STD KALVI TV - VIDEOS  -TAMIL

 CLICK HERE TO WATCH 2ND STD KALVI TV - VIDEOS  -ENGLISH

 CLICK HERE TO WATCH 2ND STD KALVI TV - VIDEOS  -MATHS 

 CLICK HERE TO WATCH 2ND STD KALVI TV - VIDEOS  -EVS


Share:

11th tamil Important 6 marks - Public Exam 2023 ( செய்யுள் )

11th Tamil Important 6 marks - Public Exam 2023 ( செய்யுள் )

1. நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க.

பாயிரம் :

நூலை உருவாக்கும் ஆசிரியரின் திறம் வாயும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும். பாயிரம் 

(1) பொதுப்பாயிரம், 

(2)சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.

(i) பொதுப்பாயிரம் :

எல்லா நூல்களின் முன்பிலும் பொதுவாக உரைக்கப்படுவது, பொதுப்பாயிரம் எனப்படும்.

நூலின் இயல்பு, ஆசிரியரின் இயல்பு, கற்பிக்கும் முறை

மாணவரின் இயலபு கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது, பொதுப்பாயிரம் ஆகும்.

(ii) சிறப்புப்பாயிரம் :

தனிப்பட்ட பல நூல்களுக்கு மட்டும் சிறப்பாகக் குறிப்பிடப்படுவது, சிறப்புப்பாயிரம் எனப்படும்.

நூல் சிரியரின் பெயர்

நூல் பின்பற்றிய வழி

நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு;

நூலின் பெயர்; தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு;

நூலில் குறிப்பிடப்படும் கருத்து; 5நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்;

இவற்றுடன் நூல் இயற்றப்பட்ட காலம்; அரங்கேற்றப்பட்ட அவைக்களம்;

இயற்றப்பட்ட காரணம் ஆகியவற்றைச் சேர்த்துக் கூறுவதும் ஆகிய எல்லாச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது, சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் ஆகும்

2. திருமலை முருகன் பள்ளு’ கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள்வழி இயற்கை வளங்களை விவரிக்க.

3. பாரதிதாசன் ஒரு ‘புரட்சிக்கவி’ என்பதை, உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க.

4. நடராசன் தனிமொழிகளிலிருந்து நீங்கள் அறியும் கருத்துகளை எழுதுக.

5. மதீனா நகரம் ஒரு வளமான நகரம்” என உமறுப்புலவர் வருணிக்கும் செய்திகளைத் தொகுத்து


Share:

11th tamil Important 6 marks - Public Exam 2023 ( உரைநடை )

11th tamil Important 6 marks - Public Exam 2023 ( உரைநடை )

1. ‘கல்லும் கதை சொல்லும்’ – என்னும் தொடர், தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் பொருந்துவதை விளக்கி எழுதுக.

2. பௌத்தக் கல்வி, சமணக் கல்வி, மரபுவழிக் கல்வி முறைகளால் தமிழகக் கல்விமுறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க.

3. சிதறிய கடிதங்கள்’ உணர்த்தும் கருத்துகளைச் சிதறாது விளக்குக.

4. சுந்தர ராமசாமியின் ‘காற்றில் கலந்த பேரோசை’ என்னும் தலைப்பு, ஜீவாவின் வாழ்க்கைக்கு எங்ஙனம் பொருந்தும் என்பதை விளக்குக..


Share:

11th tamil Important 4 marks - Public Exam ( செய்யுள் )

11th tamil Important 4 marks - Public Exam ( செய்யுள் )

1. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?

  • நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை, நூலாசிரியர்
  • பெயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிரப்பு, நூலின் பெயர், யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலைக் கேட்போர், நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகியன, முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக, நன்னூல் குறிப்பிடுகிறது.

2. “சலச வாவியில் செங்கயல் பாயும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்

திருமலை முருகன் பள்ளூவில், வடகரை நாட்டின் வளத்தைக் கூறும்போது, பெரியவன் கவிராயரால் கூறப்படுகிறது.

பொருள் :

 நீர் நிறைந்த தாமரைத் தடாகத்தில், செம்மையான கயல்மீன்கள் துள்ளிப்பாய்ந்து, விளையாடும் என்பது பொருளாகும்.

விளக்கம்

வடகரை நாடு நீர் நில வளம் மிக்கது. அங்குத் தாமரை நிறைந்த குளத்தில், கயல் மீன்கள் அக்கமின்றித் துள்ளிப் பாய்ந்து விளையாடும்; மீனைப் பிடித்துண்ண வந்து சங்கிலியில் அமர்ந்துள்ள உள்ளான் பறவை, வண்டுகளின் இசையில் மயங்கி, வாலை ஆட்டியபடி அமர்ந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் வடகரை நாட்டின் நீர், நிலவளம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

3. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து என்பதை விளக்குக.

  • காவடி’ என்பது, தமிழக பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று.பண்டைய காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடி சிந்து . 
  •  உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ்மக்கள், குலவதோறும் வீற்றிருக்கும் முருகனின் கோவிலை நோக்கி வழிபடச் செல்வர்.
  • அப்போது முருகப்பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருள்களைக் காவடிகளில் கொண்டு செல்வர். அப்படிச் செல்லும்போது வழிநடைக் களைப்புப் போக, முருகப் பெருமானின் புகழைச் சிந்துவகைப் பாடலாகப் பாடுவர்.

4. சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாவை?

  • சேலத்து நாட்டில் பெற்ற சிலம்பு;
  • கோலத்து நாட்டாரிடம் பெற்ற முறுக்கிட்ட தண்டை;
  • பாண்டியனார் மகள் கொடுத்த பாடகம்;
  • குற்றாலர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்;
  • கண்டி தேசத்தில் பெற்ற காலாழி.

5. தமிழகப் பெண்கள் பாடிக்கொண்டே விளையாடும்போது, வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துகளாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?

  • சாழல்’ என்பது, பெண்கள் விளையாட்டு. 
  • இந்த விளையாட்டின்போது ஒருத்தி வினாக் கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமையும். இறைவன் செயலைப் பழிப்பதுபோல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவதுபோல் அந்த விடை இருக்கும்.

எ – கா : “சுடுகாட்டைக் கோவிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்?” என்பது பழிப்பது  வினா!

“எங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும், அவன் சினத்தால் உலகம் அனைத்தும் கல்பொடியாகி விடும்” என்பது, செயலை நியாயப்படுத்தும் விடை.

6. “உயர் தமிழை உயிரென்று போற்றுமின்கள்” – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக..

இடம் :

 பாரதிதாசனால் இயற்றப்பட்ட புரட்சிக்கவி பாடல்.

பொருள்

உயர்ந்த தமிழை உங்களின் உயிராகப் போற்றுங்கள்.

விளக்கம்

கொலைத்தண்டனை விதிக்கப்பட்டுக் கொலைக்களத்தில் நிறுத்தப்பட்ட உதாரன், அங்குக் கூடியிருந்தோரிடம், சில சொற்கள் பேசினான். “யானறிந்த தமிழே என் மரணத்துக்குக் காரணம் என மக்கள் தமிழை இகழ்வார்களோ! மக்களே, மாசு இல்லாத உயர்ந்த தமிழை உயிராகப் போற்றுங்கள்” என்று வேண்டினான்.

7. வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன யாவை?

  • சிறு வாய்க்கால், நமக்கு உணவு நல்கும் வயலுக்கு உபயோகப்படுகிறது; 
  • அலை கடலை மலையாகவும்,
  •  மலையை அலைகடலாகவும் மாற்றிட நடக்கிறது; 
  • கூழாங்கற்களை நெறுநெறு என உராய்ந்து நுண் துகளாக்கிச் சிறு மணலாக்குகிறது. மேலும், தன் வலிமைக்குள் அடங்கிய புல், புழு அனைத்தையும் கொண்டுவந்து, காலத்தச்சன் கடலில் கட்டும் மலைக்கு வழங்குகிறது.
  • மலையில் பொழிந்த மழையான பின், அருவியாய் இறங்கி,
  •  குகைமுகம் புகுந்து, பூமியின் வெடிப்புகளில் நுழைந்து, 
  • பொங்கி எழுந்து, சுனையாய்க் கிடந்து, 
  • ஊற்றாய்ப் பரந்து ஆறாக நடந்து, மடுவாகக் கிடந்து, மதகுகளைச் சாடி, 
  • வாய்க்கால் வழி ஓடித் தான் பட்ட களைக் கூறி, மேலும் இயன்றதைக் கொண்டுவருவதாக உறுதி கூறுகிறது.
  • நீக்கம் இல்லா அன்பும், ஊக்கமும் உறுதியும் கொண்டு அனுதினமும் அழைக்கிறது என்று, வாய்க்காலின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


Share:

11th tamil Important 4 marks - Public Exam 2023 ( உரைநடை )

11th tamil Important 4 marks - Public Exam 2023 ( உரைநடை )

1. ‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.

  • எனக்கு உயிர்தந்தவள் தாய், தான் ஊட்டிய பாலோடு, உலகை அறிமுகம் செய்ய ஊட்டி வளர்த்த மொழி தமிழ். என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. வளர்ந்தபின் வளமான மொழியை கற்றபோது, அதன் வளத்தோடு வீச்சும், ஆழம் புரிந்தது.
  • “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கு காணோம்” என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டேன். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறியதைத் தெளிந்தேன். “தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ்பொருள் அறிந்தேன். அதனால், என் தமிழை உயிரினும் மேலானதாக மதிக்கிறேன்.
( இது சொந்த நடையில் எழுதவேண்டிய விடை . நீங்கள் எந்த கையேட்டில் படித்திரிந்தாலும் அதுவும் சரியான விடையே . மாற்ற வேண்டாம் )

2. ‘மலை, மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது’ என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க

  • மனித சமூகத்தின் ஆதிநிலம் மலை.
  • சேயோன் மேய மை வரை உலகம் ; என்கிறது தொல்காப்பியம்.  .
  • திராவிடர்களைக் கமில் சுவலபில், ‘மலைநில மனிதர்கள்’ என்கிறார்.
  • இந்தியப் பழங்குடியினர் பெயர்கள், மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்து கொன்றன.
  • பழங்குடியினர், உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறு, ஓடைகல ஒட்டிக் குடியிருப்பை அமைத்துள்ளனர்.
  • அவை, பழங்குடியினரின் மலைசார்ந்த சமூக, சமயக் கூறுபாடு சார்ந்த புரிதலைத் தருகின்றன

3. ஆனந்தரங்கர், ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப் பகுதிவழி எடுத்துக்காட்டுக.

  • ஆனந்தரங்கர் நாட்குறிப்பில், அவர் காலப் புதுவை, தமிழகம், தென்னிந்திய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
  • பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ், நாணய அச்சடிப்பு உரிமை பெற்றது,
  •  லெபூர் தொனே, சென்னையைக் கைப்பற்றியது,
  • தேவனாம் பட்டணத்தைக் கைப்பற்றப் பிரெஞ்சு அரசு நடத்திய போர்,
  • புகழ்பெற்ற ஆம்பூர்ப் போர், 
  • தஞ்சைக் கோட்டை முற்றுகை,
  •  இராபர்ட் கிளைவ் படையெடுப்பு எனப்  வரலாற்றுச் செய்திகளை நேரில் கண்டு உரைப்பதுபோல், நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். இவற்றை நோக்க, ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியராகத் திகழ்வது புலப்படும்

4. ஃப்ரெஸ்கோ ஓவியங்கள், கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவை?

ஃபிரெஸ்கோ ஓவியங்கள் : 

  •  ‘ஃபிரெஸ்கோ’ என்னும் இத்தாலியச் சொல்லிற்குப் ‘புதுமை’ என்று பொருள். சுண்ணாம்புக் காரைப்பூச்சுமீது, அதன் ஈரம் காயும்முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம்.
  • ஃபிரெஸ்கோ வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் முதலான இடங்களில் காணலாம்.

கற்றளிக் கோவில்கள் :

  • செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுவதுபோல், கருங்கற்களை அடுக்கிக் கோவில் கட்டுவது ‘கற்றளி’ எனப்படும். 
  • மகாபலிபுரம் கடற்கரைக்கோவில், காஞ்சி கைலாச நாதர்கோவில், பனைமலைக்கோவில் ஆகியவை, கற்றளிக் கோவில்களுக்குச் சான்றுகளாகும்

5. ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தர ராமசாமி கூறுவன யாவை?

  • வாவின் பாணி, இரவல் பாணியோ, கற்று அறிந்ததோ அன்று! ‘பேச்சுக்கலை’ என்பது ஜீவா பெற்ற வரம்!
  • மக்கள் தரத்தை, அனுபவ அறிவை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளைத் தெளிவாக அறிந்த
  • ஒருவர், கூறவந்த செய்திகளைக் கலைநோக்கோடு அணுகி, கற்பனை கலந்த காலப்போக்கில்
  • வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுநடை, ஜீவாவின் பேச்சுநடை!
  • உழுது விதைத்தால் நல்ல அறுவடை காணமுடியும் என்பதை உணர்ந்தவர் ஜீவா!

6. ‘தாமஸிகம்’ என்றால் என்ன?.

  • நாகரிக வழக்கத்தில் காலத்துக்கு ஏற்றபடி சீக்கிரம் வாடிவிடும் மலர்களுடன் தொடர்பு உண்டு. 
  • தோட்டக்காரன் கைகளில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கும்.
  •  மலர்ச்செப்பினுள் வழக்கம்போல் போவதும் வருவதும் தான் அவற்றின் வேலை. 
  • இதனைத் ‘தாமஸிகம்’ அதாவது மெட்டீரியலிசம்  என்பர்.

Share:

11th tamil Important 2 marks - Public Exam 2023 ( உரைநடை )

11th tamil Important 2 marks - Public Exam 2023 ( உரைநடை )

1. பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?

  • எழுத்தை மனிதனின் கை எழுதினாலும், அந்த எழுத்தின் உணர்ச்சியை முகத்திலுள்ள வாயினால் மட்டுமே வெளிப் படுத்த முடியும். அதனால் எழுத்துமொழியைவிடவும் பேச்சுமொழிக்கு ஆற்றல் அதிகம் உள்ளது.
  • எனவே, எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது

2. தமிழ்நாட்டின் மாநில மரம் – சிறு குறிப்பு வரைக.

  •  தமிழ்நாட்டின் மாநில மரம் பனை.
  • இது, ஏழைகளின் கற்பக விருட்சம்.
  • சிறந்த காற்றுத் தடுப்பான்.
  • ஆழத்தில் நீர்மட்டம் குறையாமல் நீரைச் சேமித்து வைக்கும் தன்மையுடையது.

3. ‘கோட்டை’ என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

  • ‘தமிழ் -கோட்டை 
  • மலையாளம் - கோட்ட, கோடு, 
  • கன்னடா - கோட்டே, கோண்டே,
  • துளு -கோட்டே
  • தோடா -  க்வாட் எனத் திராவிட மொழிகளில் எடுத்தாளப்படுகிறது

4. உ.வே.சா. அவர்கள் பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.

  • இக்கல்விமுறை, தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறையாகும்.
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம், உ.வே.சா. பாடம் பயின்றமுறை இம்முறையாகும்.

5. ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

  • கப்பல்கள் வருகின்ற செய்தியைக் கேட்டதும், நஷ்டப்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற்போலவும்,
  • மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்ததுபோலவும்
  • நீண்டநாள் தவமிருந்து புத்திரப் பாக்கியம் கிட்டினாற்போலவும்,
  • தேவாமிர்தத்தைச் சுவைத்தது போலவும் மக்கள் சந்தோஷப்பட்டார்கள் எனப் பதிவு செய்துள்ளார்.
  • இதனை ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

6. இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?

  • நாகரம் ,
  • வேசரம் ,
  •  திராவிடம் 

7. ‘நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமையை ஜீவானந்தம் வாழ்வுடன் ஒப்பிடுக.

  • வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமை ஜீவானந்தத்தின் மேடைப்பேச்சின் சிறப்பை விளக்குகிறது. சில கருத்துகளை விரிவாகக் கூறிப் புரிய வைத்தால் போதும் என்பதே அவர் எண்ணம்.
  • எனவே, இரண்டு கைப்பிடி விசயத்துடன் மேடை ஏறுவார். வெடிமருந்துக்கு நெருப்பு வைத்ததும், பச்சை, மஞ்சள், சிவப்பு எனக் குடைகுடையாய் உதிர்வதுபோல, மாலை மாலையாய் இறங்கி வரும் கருத்து வண்ணஜாலம் அறிந்தவர் ஜீவா என்பதைத் தெளிவுபடுத்த, இவ் வமை கூறப்பட்டுள்ளது.

8. நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?.

  • நாட்டுப்புறங்களில் இருக்கும்போது, இயற்கையே சிறந்து விளங்குகிறது.

  • பட்டணத்திலோ, மனித சமுதாயமே முக்கியமானதாகத் தலைதூக்கி நிற்கிறது.
Share:

11th tamil Important 2 marks - Public Exam 2023 ( செய்யுள் )

11th tamil Important 2 marks - Public Exam 2023 ( செய்யுள் ) 

1.இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.

  • “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடில்லாத பறவை”

2.பாயிரம்’ பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

  • நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து, நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்.

3.ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின – தொடரின் பொருள் யாது?

  • மரங்கள் வெட்டப்பட்டன ,
  • மழை பெய்யவில்லை. 
  • மண்வளம் குன்றியது.
  •  வாழ்வதற்கான சூழல் இல்லாததால், ஆதரவற்றனவாய்க் குருவிகள், இருப்பிடம் தேடி அலைந்தன

4.வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன்

மாடம் எங்கும் அகிற்புகை நாறும் – அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன

  • கா- சோலை 
  • முகில் - மேகம் 
  • தென்கரை நாட்டின் உயர்ந்து வளர்ந்த சோலைகளில், மேகக்கூட்டம் தங்கிச் செல்லும் என்பதாகும்.

5.காற்றின் தீராத பக்கங்களில், எது எதனை எழுதிச் சென்றது?

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றது.

6.காவடிச்சிந்து என்பது யாது?

  • தமிழ்நாட்டில் பண்டைக்காலம்முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே, ‘காவடிச்சிந்து’ . 
  • முருக பெருமானை வழிபட பால், காவடி முதலானவற்றை கொண்டு  செல்வோர் வழியிடை பாடலாக பாடிச் செல்வர்.

7.தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?

புகழ்: புதன் புகழ் வரும் என்றால், தமிழர்கள் தம் உயிரையும் கொடுப்பர்.

பழி : பழி வரும் என்றால், உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

8.சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?

  • செயலின் வலிமை, 
  • தன் வலிமை, 
  • பகைவனின் வலிமை, 
  • துணையானவரின் வலிமை

9.மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?

  • மருந்து : செல்வம்
  • மருந்து மரமாக இருப்பவர் : பெருந்தகையாளர் 

10.மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.

  • மேருமலைபோல் மதீனா நகரின் மேல்மாடங்கள் உயர்ந்திருந்தன.
  • அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த பேரொலி, பெருங்கடல்போல் இருந்தது.

11.சாழல் – விளக்குக.

  • சாழல்’ என்பது, பெண்கள் விளையாட்டு. 
  • இந்த விளையாட்டின்போது ஒருத்தி வினாக் கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமையும். 
  • இறைவன் செயலைப் பழிப்பதுபோல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவதுபோல் அந்த விடை இருக்கும்.

12.உழைப்பாளர்களின் தோள்வலிமையால் விளைந்தன யாவை?

  • உழைப்பாளர்கள் தங்கள் தோள்வலிமையால் பாழ்நிலத்தைத் பண்படுத்திப் புதுநிலமாக்கினர்.
  • அழகு நகர்களையும் சிற்றூர்களையும் உருவாக்கினர்.
  • வரப்பெடுத்து வயல்களையும், ஆற்றைத் தேக்கி நீர்வளத்தையும் பெருக்கி, உழுது விளைபொருள்களை உற்பத்தி செய்தனர்.


Share:

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை பள்ளிகள் திறப்பு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் அரையாண்டு முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!


TN School Re-open Date 2023? பள்ளிகள் திறப்பு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! - Click Here 

பள்ளிகள் திறப்பு

2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது.

பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே வழங்கிய நாட்காட்டியின்படி பள்ளிகளுக்கு 02012023 அன்று விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பார்வை 1ல் காணும் கடிதத்தில் எண்ணும் எழுத்தும் சார்பாக 1 முதல் 3ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அளவிலான பயிற்சியை 02.01.2023 முதல் 04,02023 வரை நடத்திடுமாறு தெரிவிக்கப்பட்டது.

பார்வை 3ல் காணும் 03.12.2022 அன்று நடைபெற்ற எண்ணும் எழுத்தும் சார்பான ஆய்வு கூட்டத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு பள்ளித் திறக்கும் நாள்.05.012023 எனவும் மற்ற வகுப்புகளுக்கு பள்ளி திறக்கும் நாள் 02.01.2023 என்பதையும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

எனவே 1 முதல் 3ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 02.012023 முதல் 04.012023 வரை நடைபெறும் எண்ணும் எழுத்தும் சார்பான மூன்றாம் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி நடைபெறும் நாளில் எவ்வித மாற்றமும் இல்லாதால் அனைத்து ஆசிரியர்களும் மேற்கண்ட நாட்களில் பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share:

TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – இன்று தேர்வு முடிவுகள் வெளியீடா?

TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – இன்று தேர்வு முடிவுகள் வெளியீடா?

TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு முடிவுகள்

தமிழக அரசுத்துறைகளில் உள்ள 4ம் நிலை பணியிடங்கள் மற்றும் VAO பணியிடங்களுக்கு TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் நிரப்பப்படுகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டபடி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது.


இந்த தேர்வு மூலமாக 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதனால் இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


தற்போது இந்த வழக்கின் தீர்ப்புகள் வெளியான நிலையில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள்  Feb முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வின் முடிவுகள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதனால் தேர்வர்கள் அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தை சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share:

10th Maths First Revision Question paper 2023 - Original Answer key

10th Maths First Revision Question paper 2023 - Original Answer key

Maths

10th Maths First Revision Question paper 2023 - Original Answer key -  English Download Here ( Nkl Private School )

10th Maths First Revision Question paper 2023 - Original Answer key - Tamil Medium Download here

Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 24.01.2023 - School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 24.01.2023

திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்

குறள் 110:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

பொருள்:

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.


பழமொழி :

Time cures all things.

காலம் அனைத்திற்கும் தீர்வு காணும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன்.

 2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்

பொன்மொழி :

தூய்மையான இதயத்தைக் கொண்டிருப்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்க வேண்டும்

பொது அறிவு :

1. எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் யார்?

 தாம்சன்

 2.ஆசியாவில் உரத் தயாரிப்பில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது ?

 இந்தியா.

English words & meanings :

peace - calm. noun. அமைதி. பெயர்ச் சொல். Piece - segment. noun. ஒரு பகுதி அல்லது ஒரு துண்டு. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

இந்த மொச்சை பயிறில் உள்ள போலேட் பிறந்த குழந்தைகளின் பிறப்புக் குறைப்பாட்டை போக்க உதவுகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு 400 எம்.சி.ஜி போலேட் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.

இதுவே கர்ப்ப காலத்தில் 600 எம். சி.ஜி அளவு அதிகரிக்கிறது. கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் முதுகெலும்பு முழுமையற்ற வளர்ச்சி, மூளையின் பகுதிகளில் ஏற்படும் முழுமையற்ற வளர்ச்சி போன்ற முக்கிய பிறப்பு குறைப்பாட்டை தடுக்க உதவுகிறது.

NMMS Q

விசையின் விளைவானது__________ , ____________ சார்ந்தது.

விடை: எண்மதிப்பு, பரப்பளவைச் 

ஜனவரி 24 இன்று


தேசிய பெண் குழந்தை நாள்

தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.[1] மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது

நீதிக்கதை

இறைவன் படைப்பு

ஒரு காட்டில் ஒரு முயல் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த ஆமை. நம்மால் ஏற்கனவே வேகமாக போக முடியாது இதில், முதுகில் வேறு பாரமாக ஓடும். முயலைப் பார்த்து பொறாமைப்படுவதில் பயன் இல்லை என்னை இப்படிப் படைத்ததற்காக ஆண்டவனைத்தான் நொந்து கொள்ளவேண்டும் என ஆமை எண்ணியது.

அப்போது அன்று இரை எதுவும் கிடைக்காததால் அலைந்து கொண்டிருந்த சிங்கம், விளையாடிக்கொண்டிருந்த முயலைப்பிடிக்க பாய்ந்தது. முயல் ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்தது. ஆமையோ, தன் கூட்டுக்குள் முடங்கியது.

சிறிது நேரத்தில் சிங்கம் சென்றுவிட முயல் பயத்தில் அவ்விடம் வந்ததும், ஆமை தன் கூட்டிலிருந்து தலையை நீட்டிப் பார்த்தது. ஒவ்வொரு விநாடியும் மரணபயத்திலேயே முயல் வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கையில், விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள தன் முதுகிலேயே தனக்கு கூட்டையும் கொடுத்த இறைவனை நிந்தித்தது எவ்வளவு தவறு என உணர்ந்தது.

இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. அந்த தனித்தன்மையை உபயோகித்து ஆபத்துக் காலங்களில் தப்பிக்கலாம். இதுவே இறைவன் கருணை என்பதை உணர்ந்தது ஆமை.

இன்றைய செய்திகள் - 24.01.2023

* உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவிதமான வருமான வரம்பும் இல்லாமல் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தபட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு.

* மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து: பாரத் பயோடெக் நிறுவனம் 26-ம் தேதி அறிமுகம்.

* இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் விதமாக, கல்வாரி வகை நீர்மூழ்கியின் ஐந்தாவது கப்பலான ஐஎன்எஸ் 'வகிர்'  கடற்படையில் சேர்க்கப்பட்டது.

* சீன மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

* அமெரிக்க அதிபர் பைடன் இல்லத்தில் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.

* மாநில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கைப்பந்து போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் போராடி வென்ற சிட்சிபாஸ்.

* பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா.

Today's Headlines

* Chief Minister MK Stalin welcomed  the order by Supreme Court regarding all the government proceedings should be issued in all Indian languages.

* Minister Ma Subramanian said that the insurance scheme will be implemented without any income limit for the disabled.

* Weather forecast: Expecting 4 days of rain in Tamil Nadu

* Corona Prevention dose through Nose: Bharat Biotech launches on 26th.

* In order to add strength to the Indian Navy, the fifth ship of the Calvary type submarine, INS 'Vagir' was added. 

* More than 13,000 people have been died of corona virus in Chinese hospitals in the last week, the Government declared. 

* US President Biden House: Seizure of key documents.

* State School and Colleges Volleyball Tournament started in Chennai yesterday.

* Australian Open Tennis: Citzipas won the 4th round.

* Women Junior World Cup Cricket: India defeated Sri Lanka.


 Prepared by

Covai women ICT_போதிமரம்


Share:

10th Tamil First Revision Question Paper 2023 - Answer key Original

10th Tamil First Revision Question Paper 2023 - Answer key Original

Tamil

10th Tamil first Revision important Question 2023  -Download Here

10th Tamil first Revision Model Question paper 2023  - Download Here

10th Tamil first Revision original Question paper 2023  - Download Here

Share:

10th English First Revision Question paper 2023 - Original Answer key

10th English First Revision Question paper 2023 - Original Answer key

English

10th English First Revision Question paper 2023 - Original Answer key -  Download Here (theni )

10th English First Revision Question paper 2023 - Original Answer key - English Medium Download Here 

Share:

10th Science First Revision Question paper 2023 - Original Answer key

10th Science First Revision Question paper 2023 - Original Answer key

Science

10th Science First Revision Question paper 2023 - Original Answer key - Tamil Medium Download Here (theni )

10th Science First Revision Question paper 2023 - Original Answer key - English Medium Download Here ( theni)

Share:

10th Social Sciene First Revision Question paper 2023 - Original Answer key

10th Social Sciene First Revision Question paper 2023 - Original Answer key

10th Social Sciene

10th Social Sciene First Revision Question paper 2023  - Tamil Medium Download here

10th Social Sciene First Revision Model Question paper 2023  - English Medium Download Here 

Share:

12th Tamil 2nd ( Second ) Revision Original Question Paper 2023

12th Tamil 2nd ( Second ) Revision Original Question Paper 2023

12th Tamil

12th Tamil 2nd ( Second ) Revision Original Question Paper 2023 - Download Here ( Tenkasi District )

Share:

American English - British English ( 11th ,12th English )

American English - British English ( 11th ,12th English )

There are differences in spelling for some words between Americans and British . foe example the word "colour "is spelt by the Americans as "color". The differences may be based on not only spelling but also pronunciation and vocabulary.

British english  -  American english

  1. accountant        -financial controller
  2. aerial                  -antenna
  3. angry                  -mad
  4. anti-clockwise -counter-clockwise
  5. autumn            -fall
  6. biscuit               -cookie
  7. bonnet              - hood
  8. bookshop         -bookstore
  9. breaklight        -stoplight
  10. callingcard      -visitingcard
  11. car                     -automobile
  12. caretaker         -jaintor
  13. cashcard         -ATMcard
  14. cellphone       - mobilephone
  15. centre             - center
  16. chairman      - president
  17. chemist        - druggist
  18. cheque         - check
  19. chips             - crisp,french fries
  20. cinema/film - movie
  21. corridor        - hallway
  22. cooker           - stove
  23. cot                 -  crib
  24. coffin            - casket
  25. cotton          - thread
  26. cross roads - intersection
  27. cupboard    - closet
  28. currency note -bill
  29. curtain        - drapes 
  30. cute             - cunning
  31. cutlery        - silverware
  32. cyclist         - cycler
  33. disc             - disk
  34. diary           - databook
  35. digit           -  figure
  36. dish towel - tea towel
  37. dressing table - dresser
  38. dustbin       - trashcan,garbagecan
  39. engine driver - locomotive engineer
  40. engine        - motor
  41. escalator    - elevator
  42. estate car    - station wagon
  43. exercise book -note book
  44. ex-service man -veteran
  45. extra time    - over time
  46. financial year -fiscsl year
  47. fire engine -fire truck
  48. flat              - apartments
  49. flat mate    - room mate
  50. flex             - cord
  51. football     - soccer
  52. freight car - wagon
  53. fridge        - refrigerator
  54. friend       - pal
  55. frying pan - skillet
  56. garden      - yard
  57. goods train - freight train
  58. ground floor -first floor
  59. hand bag    - purse
  60. head teacher - principal
  61. health club  - gym
  62. high street - main street
  63. hire purchase - instalment plan
  64. hoarding    - bill board
  65. holiday       - vacation
  66. ill                 - sick
  67. indicator   - blinker
  68. invigilator  - proctor
  69. jam             - jelly
  70. jetty           - dock
  71. jug            -  pitcher
  72. kennel     - dog house
  73. kerb         - curb
  74. kiychen paper - paper towel
  75. letter box   - mail box
  76. life jacket   - life vest
  77. lift               - elevator
  78. living room - sitting room
  79. long jumb   - broad jumb
  80. lorry             - truck
  81. luggage      -  baggage
  82. luggage van - baggage van
  83. maize          - corn
  84. manager     - director
  85. match        - game
  86. milk tooth - baby tooth
  87. mineral     -  soda
  88. mobile phone - cell phone
  89. nail varnish - nail polish
  90. nappy         - diaper
  91. notice board - bulletin board
  92. number plate - licence plate
  93. nursing home - private hospital
  94. paraffin        -  kerosene
  95. paraffin oil   - coal oil
  96. pavement   -  side walk
  97. pen friend   - pen pal
  98. pepper pot  - pepper shaker
  99. petrol          -  gasoline
  100. physiotherapy - physical theraphy
  101. pigsty         - pig pen
  102. plane         - air plane
  103. plug hole    drain
  104. polling booth - voting booth
  105. post           - mail
  106. post man   - mail man
  107. postal vote  -absentee ballot
  108. post code    -zip code
  109. poridge      -  oat meal
  110. power cut  - power outrage
  111. presenter   - announcer
  112. press          - news
  113. conference programme - conference program
  114. puncture   - blow out
  115. push chair  - stroller
  116. queue         -  line
  117. railway      -  rail road
  118. resume     - curriculum vitae
  119. ring road  = outer belt
  120. roll of honour - honour roll
  121. rubber       - eraser
  122. rubber band  - elastic band
  123. rubbish     - garbage
  124. sanitary towel - sanitary napkin
  125. set square  - triangle
  126. shop       -  store
  127. skin        = peel
  128. sleeping partner - silent partner
  129. slip road    - ramp
  130. spanner     - wrench
  131. state school - public school
  132. steno graphy - short hand
  133. stupid          - dumb
  134. sub way       - underground way
  135. sweet           - candy
  136. swiss roll    - jelly roll
  137. tap               - faucet
  138. taxi              - cab
  139. terminus   -  depot,bus stop
  140. tie               - neck tie
  141. tie break    - tie breaker
  142. tie pen       - tie tag
  143. timber       - lumber
  144. time table - schedule
  145. tin              - cane
  146. toilet          - bath room,loo
  147. toffee         - candy
  148. torch         - flash light
  149. trolley       - cart
  150. trousers    - pants
  151. underground - sub way
  152. vest            - undershirt
  153. warder      - jailor
  154. wind screen  - wind shield
  155. wire           - telephone
  156. zip             - zipper
  157. constable  - patrol man
  158. honour     - honor
  159. plough     - plow
  160. flat            - apartment

Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 20.01.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 20.01.2023  -  School Morning Prayer Activities - 20.01.2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: செய்நன்றி அறிதல்

குறள் : 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

பொருள்:

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

பழமொழி :

All things come to those who wait.

பொறுத்தவரே பூமியை ஆள்வார்

இரண்டொழுக்க பண்புகள் :

1. புத்தகம் மனித குலத்தின் குல சொத்து வாசிப்பேன். 

2. மனிதன் இறைவனின் அற்புத படைப்பு. நேசிப்பேன்.

பொன்மொழி :

சொற்கள் நம் சிந்தனையின் உடைகள். அவற்றை கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக்கூடாது.

பொது அறிவு :

1. பாராசூட் பயிற்சிப் பள்ளி எங்கு அமைந்துள்ளது ? 

 ஆக்ராவில். 

 2. இந்தியாவில் மொத்தம் எத்தனை மொழிகள் உள்ளன? 

 1652 மொழிகள்.

English words & meanings :

Meat - flesh of the animals. noun. விலங்குகளின் மாமிசம். பெயர்ச் சொல். Meet - happen to visit or go to the presence of some one. verb. ஒருவரை சந்தித்தல். வினைச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

மொச்சை பயிறில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களில் தியமின், வைட்டமின் கே மற்றும் பி6, தாமிரம், செலினியம், இரும்புச்சத்து, நியசின், ரிபோஃப்ளவின், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கோலின், சோடியம், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது உங்களுக்கு மெலிந்த புரதத்தை வழங்குகிறது.


NMMS Q

கீழ்க்கண்டவற்றுள் எது உலோகப்போலி அல்ல? 

a) போரான் b) நைட்ரஜன் c) சிலிக்கான் d) ஜெர்மனியம். 

விடை : நைட்ரஜன்

ஜனவரி 20 இன்று

எட்வின் யூஜின் ஆல்ட்ரின் அவர்களின் பிறந்தநாள் 

எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்

நீதிக்கதை

இறைவனுக்கு நன்றி சொல்வோம்

ஒரு ஊரில் காகமொன்று இருந்தது. அது கருப்பு நிறத்தில் இருப்பதை வெறுத்தது. ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தது அப்போது நீரில் இரு அன்னப்பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன.


அவற்றைப் பார்த்த காகம் அந்த அன்னப்பறவைகளைப் போல நான் வெள்ளையாக இல்லையே என வருந்தியது. அந்தப் பறவைகளைப்போல நாமும் தண்ணீரில் நீந்தினால் தன் சிறகுகளில் இருக்கும் கரிய நிறம் போய் வெண்மை நிறம் வந்துவிடலாம் என எண்ணியது.

உடனே அன்று முழுதும் அது தண்ணீரில் நீந்தியது. தன் இறகுகளை தேய்த்து தேய்த்து பார்த்தது. அதனால் சில இறகுகளையும் இழந்தது.

அதைப் பார்த்த அன்னப் பறவைகளில் ஒன்று காகத்திடம் இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு உருவம், நிறம் பெற்றவை. அதை மாற்ற நினைத்தால் நடக்காது என அறிவுரை கூறியது. மேலும், கடவுள் எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும் என்றது.

இன்றைய செய்திகள் - 20.01.2023

* மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.

* நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மீண்டும் மத்திய அரசு கடிதம்: மா.சுப்பிரமணியன் தகவல்.

* அரசுப் பள்ளிகளுக்கான என்எஸ்எஸ் நிதி, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

* தவறான பயன்பாட்டை தடுக்க மனநோய் மற்றும் தூக்க மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்று மருந்துகட்டுப்பாடு இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

* விக்கிப்பீடியா ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.

* உலகம் முழுவதும் தொற்றை சமாளிக்க சுகாதார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்: ஜி-20 கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்.

* சீன புத்தாண்டு விடுமுறையில் தினசரி கரோனா உயிரிழப்பு 36 ஆயிரத்தை தாண்டும்: லண்டன் ஆய்வு நிறுவனம் கணிப்பு.

* ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை : விராட் கோலி, சிராஜ் முன்னேற்றம்.

* ஹாக்கி உலகக்கோப்பை: 14-0 என்ற கணக்கில் சிலி அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து.

Today's Headlines

* Minister SenthilBalaji informed  that 2 crore Aadhaar numbers had been linked with electricity connection number.

 * Central Government sent letter again asking for clarification on NEET Exemption Bill Information by Minister M. Subramanian

* The School Education said NSS funds for government schools will be paid directly into bank accounts said by the school education department .

 * The Drug Control Directorate has advised that psychotropic and sleeping medicines should be dispensed only with a doctor's prescription to prevent misuse.

* Wikipedia sources are not trust worthy : an advice from Supreme Court

 * Health infrastructure must be built to tackle the pandemic worldwide: India insists at G-20 meeting

 * London Research Institute predicted that Corona death toll will exceed 36,000 during Chinese New Year holiday.

* ICC ODI Rankings: Virat Kohli and Siraj Progressed 

 * Hockey World Cup: Netherland beat Chile by14-0 and reached quarter-final round

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Share:

பழமொழி விளக்கம் : வாழ்க்கை நிகழ்வில் ( நிகழ்வு ) - 11, 12th

பழமொழி விளக்கம் : வாழ்க்கை நிகழ்வில் ( நிகழ்வு )

முயற்சி திருவினையாக்கும்

பழமொழி விளக்கம்-

முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து செயலை செய்து வந்தால் வாழ்வில் உயர்வு அடையாளம் என்பதே இப்பழமொழியின் விளக்கம்.

வாழ்க்கை நிகழ்வு:

சங்கீதா ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி படிப்பில் சுமார். ஆசிரியர் வகுப்பில் சங்கீதாவை எழுப்பி தமிழ் பாடத்தைப் படிக்கச் சொன்னார். அவள் தவறாக படித்ததைக் கேட்டு வகுப்பு மாணவிகள் சிரித்தனர். ஆனால் அவள் அதற்காக வெட்கப்படவில்லை. நேரம் கிடைக்கும் போதெலலாம் புத்தகத்தை எடுத்து படித்துப் பார்த்தாள். பள்ளியில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சங்கீதா தன் பெயரைக் கொடுத்த போது அனைத்து மாணவிகளும் அவளைப் பார்த்து ஏளனம் செய்தனர். இவளா பேசப் போகிறாள் என்று கூறி அவள் மனதைப் புண்படுத்தினர். வீட்டில் பேசிப் பழகினாள். நடந்த பேச்சுப் போட்டியில் சிறப்பாகப் பேசி முதல் பரிசைப் பெற்றாள். அனைவரும் அவளை பாராட்டினார்கள். முயற்சி செய்தால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை.

நீதி:

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பதை உணர்ந்து தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதே இப்பழமொழி உணர்த்தும் நீதி.

“சிறு துரும்பும் பல்குத்த உதவும்"

பழமொழி விளக்கம்;

எந்தவொரு சின்னச் செயலுமே பயனுள்ளதாக அமையும் என்பதனை உணர வேண்டும். 

வாழ்க்கை நிகழ்வு:

நான் பள்ளியில் படிக்கும் போது என்னுடன் கந்தன் என்ற மாணவனும் படித்து வந்தான். ஓரளவு படிக்கும் மாணவன், ஆனாலும் தினந்தோறும் பள்ளிக்கு வந்து போகும் போது மாணவர்கள் பயன்படுத்தி வீணாக்கிய காகிதங்களைப் பொறுக்கிச் செல்வான்.

“ஏன்டா இந்தக் குப்பைக் காகிதங்களைப் பொறுக்கிற? என்று நான் அவனிடம் கோபப்பட்டதுண்டு. ஆனால் கந்தன் சிரித்துக் கொண்டே அந்தக் காகிதத் துண்டுகளைத் தனது கூடைக்குள் அள்ளிச் செல்வான். நான் கூட இவன் இந்தக் காகிதத் துண்டுகளை கடையில் போட்டு பணம் சம்பாதிக்கிறானோ என்று எனக்குள்ளே கேட்டதுண்டு. நான் எண்ணியது போல எதுவும் நடக்கவும் இல்லை. கந்தனின் இந்தச் செயல் எங்களது நட்பையே பிரித்து விட்டது. எவ்வளவு கூறியும் கேட்காத இந்தக் கந்தனின் நட்பு எதற்கு என்று நட்பையும் முறித்துக் கொண்டேன், ஆனாலும் அவனது செயல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ஒருநாள் பள்ளியில் தலைமையாசிரியர், நமது பள்ளியில் ஓர் கண்காட்சி வைக்கபோகிறேன். கழிவுப் பொருட்களிலிருந்து படைக்கும் பொருள்களின் கண்காட்சி இது என்றார். ஒவ்வொரு மாணவர்களும் வீணான பொருட்களைத் தேடி அலைந்து சேர்த்தனர். கண்காட்சி தொடங்கியது. கந்தன் பேப்பர் கூழினால் செய்த ஒரு மனிதச் சிலையைக் கண்காட்சியில் வைத்தான். அந்தச் சிலை அனைவரையுமே கவர்ந்தது. முதல் பரிசையும் வென்றது. நான் கந்தனின் செயலைக் கண்டு பெருமிதம் கொண்டேன். தினம் தினம் கொண்டு சென்ற 

 காகிதத் துண்டுகளை தண்ணீரில் ஊறவைத்து அதில் வடித்த மனித உருவச் சிலை கண்டு பூரித்துப் போனேன்.

நீதி:

ஆம் கழிவிப் பொருட்கள் என்று எதையமே வீனாக்கக கூடாது அதுவும் ஒரு சில நேரத்தில் பயனுள்ள. பொறளாக மாறும் என்பது போல சுந்தன சிறு திரும்பும் பல்குத்த உதவும் என்பதனை நிருபித்து விட்டான். 

"சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்"

பழமொழி விளக்கம்:

விளக்குதானே எரிந்து கொண்டே இருக்கும் என்று இருந்து விடக்கூடாது தீரி எரிய ஒளி மங்கும். அப்போது திரியைத் தூண்டிவிட்டால் தான் ஒளி பிரகாசிக்கும். இது திறமைமிக்கவர்க்கும் வழிகாட்டுதல் நல்ல பயன்தரும் எனவதை விளக்க இப்பழமொழி பயன்படுகிறது.

வாழ்க்கை நிகழ்வு:

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆவார் அவருடைய தந்தையார் புகழ்பெற்ற வழக்கறிரும் தேசப்பக்தருமான மோதிலால் நேரு அவர்கள் தன் ஒரே மைந்தன் ஜவகரைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தார். இயற்கையாகவே நுண்ணறிவு படைத்தவர் ஜவகர். பிள்ளைகளோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கையில் அது ஒரு சிறு குழிக்குள் பந்து விழுந்துவிட்டது. கையை விட்டு எடுக்க முடியவில்லை. பிள்ளைகள் திகைக்க ஜவகர் ஒரு வாளி தண்ணீரைக்குழியில் ஊற்றினார். பந்து மேலே வந்தது. இத்தகையை நுண்ணறிவை ஜகவர் பெற்றிருந்தார்.

நீதி: 

அதேபோல் மாணவர்கள் எவ்வளவு நுண்ணறிவு பெற்றிருந்தாலும் அவன் வளர்ச்சிக்கு உதவி செய்ய ஆசிரியர் தேவை என்பது சுடர் விளக்காயினும் தூண்டு கோல் வேண்டும் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 

பழமொழி விளக்கம்:

சாதி, மத, இன வேறுபாடுகள் இல்லாமல் இருந்தால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதைந்தான் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழியின் விளக்கமாகும். 

வாழ்க்கை நிகழ்வு :

ஒற்றுமை என்றும் உயரியது என்பது வெள்ளிடை மலை. மலைச்சாமிக்கு மூன்று சகோதரர்கள். திருமணம் ஆவதற்குமுன் எனும்பம் தசையாய் ஒட்டி வாழ்ந்தவர்கள், வீட்டுக்கு வந்த மகராசிகளால் வேறுவேறு ஆயினர். ஒரு வீட்டிற்குள் நான்கு குடும்பங்கள் போட்ட சண்டையில் அக்கம் பக்கத்தார் அலுத்துக் கொண்டனர். பின்னர். தனித்தனியாக வாடகை வீடு பார்த்துக் கொண்டு போக வேண்டியதாயிற்று. பின் பாகப்பிரிவினை நடந்தது. ஆளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தேறியது. அவர்களுக்குக் கூட்டுக் குடும்பமாக இருந்தபோது இருந்த நிலைமையின் அருமை புரிந்தது.

நீதி:

நம் மக்கள் அனைவரும் தவறாமல் வரி செலுத்தினால் நம்முடைய நாடு வல்லரசாக மாறும் இவையே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழியின் நீதியாகும்,

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு 

பழமொழி விளக்கம்:

கற்றோர்க்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும்.

வாழ்க்கை நிகழ்வு :

ஓர் ஊரில் முத்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். சொந்தத் தொழிலில் ஈடுபட்டுக் கடினமாக உழைத்துச் செல்வந்தராக உயர்ந்தார். அவருக்குப் புகழினி. மதியழகன் என்ற இரண்டு பிள்ளைகள், பிள்ளைகள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பாமல், தொழிலில் ஈடுபடுத்த எண்ணினார். ஆனால், தந்தையின் ஆலோசனையையும் மீறி கல்லூரிப் படிப்பு வரை இருவரும் படித்து முடித்தனர், முத்தனுக்குக் கல்வியின் மேல் பெரிய ஈடுபாடோ, விருப்பமோ கிடையாது. ஆகவே, சரியாகக் கல்வி கற்காத முத்தனை அவரது வியாபாரக் கூட்டாளிகள் ஏமாற்றி விட்டனர். இதனால் வீடு, வயல், ஆடுமாடுகள் எனச் செல்வத்தை இழந்து ஒருவேளை உணவுக்கே துன்பப்படும் நிலைக்கு அவரும் அவரது குடும்பத்தினரும் ஆளாகினர். முத்தனின் பிள்ளைகள் இருவரும் இனியும் தாமதிக்கக்கூடாது என எண்ணி வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பித்தனர். உரிய கல்வித்தகுதி பெற்றிருந்ததால், இருவருக்கும் நல்ல வேலை கிடைத்தது. சில நாள்களிலேயே குடும்பத்தின் வறுமை நீங்கியது.

'தன் கையே தனக்கு உதவி

பழமொழி விளக்கம்:

பிறர் உதவியை எதிர்பார்க்காமல் நம் பணியை நாம் செய்து கொள்வது இப்பழமொழியின் கருத்து. 

வாழ்க்கை நிகழ்வு:

மாடசாமி தன்னுடைய பிள்ளைகள் இருவரையும் எப்படியாவது மேல் படிப்பைப் படிக்க வைத்து பெரிய மனிதர்களாக்கிட வேண்டும் என விரும்பினார். அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். குழந்தைகள் அவருக்கு சற்று காலம் கடந்தே பிறந்தனர். அதனால் ஓய்வு பெறும் வயதுக்குள் அவர்களை உயர் படிப்பிலோ உயர் பதவியிலோ அமர்த்திப் பார்க்க, கொடுத்து வைக்கவில்லை. தான் அதிகமாகச் செலவு செய்து தன் தங்கைகளைப் பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்து இருந்தாலும், அவர்கள்கூட அவர் நிலையை உணர்ந்த பாடில்லை. இருவரையும் பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார். மதிப்பெண்கள் நன்கு எடுத்திருந்ததால் இடம் கிடைத்துவிட்டது. யானைக்குத் தீனி போட வேண்டும். அதுபோல் அந்தப் படிப்புக்குப் பணம் கட்ட வசதியில்லை. அவரது ஓய்வு ஊதியம் உண்பதற்கே சரியாக இருந்தது. நிலம் கொஞ்சம் ஊரில் இருந்தாலும் சரியான விலைக்குப் போகும் நிலை இல்லை. முடிவில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். கடன் வாங்குவதைவிட நல்ல வழியாக எங்காவது ஒரு பள்ளியில் சிறு பள்ளியாக இருந்தாலும்கூட, வேலைக்குச் சேர்ந்து ஒரு நாலாயிரம் அல்லது ஐந்தாயிரம் சம்பாதிக்கலாம் என்பது தான் அது.

நீதி:

பிறரை எதிர்பார்க்காமல் தாமே உழைத்து வாழ்க்கையை நடத்துவது என்பது இப்பழமொழியின் கருத்தாகும்.

"குறைகுடம் கூத்தாடும்" 

பழமொழி விளக்கம் :

எதையும் அரை குறையாக அறிந்து கொள்ளுவது துன்பத்தையே தரும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.

வாழ்க்கை நிகழ்வு!

பத்தாம் வகுப்புப் படிக்கும் போது நந்தன், விந்தன் என இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களுள் நந்தன் எப்போதும் படிப்பில் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில்தான் இருப்பான். விந்தன் எப்போதும் முதல் இடமே வசிப்பான். பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு நடைபெறுகையில் விந்தன் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாள். மருத்துவர் அவனைத் தேர்வு எழுத வேண்டாம் எனவும் வீட்டில் இருந்து ஓய்வு எடுக்குமாறும் கூறியிருந்தார். ஆனால் விந்தன் தேர்வை அலட்சியப்படுத்தாது, உடல்நலம் குன்றிய நிலையிலும் தேர்வு எழுதினான். அந்நிலையில் முதல் மதிப்பெண் பெற இயலவில்லை. நந்தன் அந்த முறை முதலிடம் பெற்றான். அவன் தன்னைத் தானே பெருமையாகப் பேசிக் கொண்டான், தன்னைப் போல் யாராலும் படிக்க முடியாது என்றும், இனிவரும் தேர்வுகளில் எல்லாம் தானே முதல் மதிப்பெண் எடுப்பேன் என அடிக்கடி கூறினான். சில நாட்களில் அரசு பொதுத் தேர்வு நடைபெற்றது. அதில் விந்தன் முதல் இடம் பெற்றான். அதற்காக அவன் யாரிடமும் பெருமிதம் கொள்ளவில்லை. எப்போதும் போல் அடக்கத்துடன் செயல்பட்டான். அனைவரும் 'குறைகுடம் கூத்தாடும் நிறைகுடம் எப்போதும் தளும்பாது' எனக் கூறி விந்தனைப் பாராட்டினார்கள்.

நீதி:

முழுமையான அறிவைப் பெறாமல் பெருமைப்பாராட்டுவது தவறான செயல். எவ்வளவு கற்றாலும் அடக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே இப்பழமொழி உணர்த்தும் நீதி,

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை"

பழமொழி விளக்கம்:

தனி ஒருவனால் சாதிக்க முடியாத பல காரியங்களைக் கூட்டு முயற்சியினால் வெற்றி பெறச் செய்ய முடியும் என்பது இப்பழமொழியின் கருத்தாகும்.

வாழ்க்கை நிகழ்வு:

ஒரு ஊரில் பல சமயத்தார்கள் ஒன்று கூடி வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரில் நல்லது கெட்டது எது நடந்தாலும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். இப்படிப் பல வருடங்கள் கழிந்து விட்டன. பிறகு ஒருவருக்கொருவர் சில காரணத்துக்காக வாய்ச் சண்டையாகி, கைச்சண்டையில் போய் பிறகு உயிரைப் பறிக்கக் கூடிய சண்டையாக மாறிவிட்டது. இந்தச் செயலைப் பார்த்து பக்கத்து ஊர்க்காரர்களும் இவர்களை தாழ்வாக நினைத்தார்கள்."

வில் ஒருவருககொருவர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு காவல் நிலையம், நீதிமலம் தன்னிடம் இருங்கும் பணத்தையெல்லாம் விரயம் செய்து கடைசியில் தன் குடும்பத்தைச் சோகத்து தள்ளி விட்டார்க்ள் பிறகு ஒவ்வொரு சமயத்தாரும் தன் நிலையைத் தெரிந்து கொண்டு, நாம் ஒற்றுமையடன் இருந்தால் தான் வாழ்க்கையில் செம்மையை அடைவோம் என்றுச் சொல்லி. ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்.

நீதி:

”ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற பழமொழிக்கேற்ப தேரினை இழுப்பத்தற்கும் பல மனிதர்கள் தேவை. அது போல ஒருவர் மட்டும் தேரினை இழுக்க முடியாது என்பது போலக் கூடி வாழ்ந்தால் கோடி நன்மையாகும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

பழமொழி விளக்கம்:

உலகில் செல்வம் படைத்தவராக இருந்தாலும் நோய் இருப்பின் அவர்கள் பெரியவர்களே. ஏழ்மையானவர் ஒருவர் நோயற்ற வாழ்வு பெற்றிருந்தால் அவரே உலகில் செல்வந்தர் ஆவார். 

வாழ்க்கை நிகழ்வு :

என பாசத்துக்குரிய நண்பர் சிறப்பாகக் கல்வி கற்று ஒரு பட்டதாரியானார். பின் பணத்தின் தேவையை உணர்ந்து பல மாணவர்களுக்குக் கணிதம் சொல்லிக் கொடுத்து. பல மாணவர்களைத் திறமையான மாணவர்களாக உருவாக்கினார். அவருடைய எளிமையான முறை மாணவர்களைக் கவர்ந்தது. பல பள்ளிகளிலிருந்து வந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் அவரிடம் கல்வி பயின்றனர். கடின உழைப்பால் சில மணிநேரம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதுண்டு அதைச் சரியாகக் கவனிக்காமல் மாத்திரைகளை மட்டும் வாங்கி உண்ணுவார். அதனால் அவருக்கு உடல் நிலை கடுமையாகப் பாதித்து மருத்துவரிடம் சென்றபோது. அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உண்டதால் அவரது சிறுநீரகம் பாதித்தது என்று டாக்டர் கூறினார். பிறகு அவர் சம்பாதித்த பணம் எல்லாம் தன் நோய்க்குச் செலவு செய்ததனால் ஏழ்மைக்குத் தள்ளப்பட்டார்.

நீதி:

நாம் பணத்தைச் சம்பாதித்துவிடலாம். ஆனால் நம் உடல்நிலை பாதிக்கப்பட்டால் மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டுவர இயலாது. இதுவே இப்பழமொழியின் கருத்தாகும்,

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

பழமொழி விளக்கம்:

இளமையில் கல்வி கற்காதவன் முதுமையில் கல்வி கற்பது என்பது முடியாத காரியமாகும். அதுபோல இளமையில் முயற்சி செய்யாதவன் முதுமையில் முயற்சி செய்ய முடியாது என்பதே இப்பழமொழியின் கருத்தாகும். 

வாழ்க்கை நிகழ்வு:

நானும் என் நண்பன் சந்திரனும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தோம். ஆனால்நான் சிறுபிள்ளைத்தனமாக விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அவன் நன்றாகப் படித்து உயர்நிலையை அடைந்தான். நான் அவனைப் போல உயர்நிலையை அடைய நினைத்தேன். ஆனால் முடியவில்லை. பின்பு அவனைப் போல கல்வியில் உயர்நிலை அடைய முதியோர்கல்விக்குச் சென்றுப் படிக்க ஆசைப்பட்டு படித்து வந்தேன், என் முதுமை காரணமாக என்னால் கல்வி கற்க முடியவில்லை. இதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால் கற்க வேண்டிய கல்வியை முறையாக இளமையிலேயே கற்க வேண்டும். 

நீதி:

சிறுவயதில் கற்றுக் கொள்வதும், அதன்படி செய்வதும் இறுதி வரை தொடரும், அவ்வளவு சீக்கிரத்தில் அதை மாற்றிவிட முடியாது. இக்கருத்தைத்தானே “ஐந்தில் வளையாது ஐம்பதில் வளையுமா?” என்னும் பழமொழி சொல்கின்றது?

நுணலும் (தவளை) தன் வாயால் கெடும்.

பழமொழி விளக்கம்:

ஒருவன் தன் வாழ்வில் அளவறிந்து பேசுவது அறிவுடைமை யாரும் அளவில்லாமல் பேசுவது தீமை விளைவிக்கும் என்பதே இப்பழமொழியின் விளக்கம்..

வாழ்க்கை நிகழ்வு :

தவளை இருக்கிறதே தவளை, அது சும்மா இருக்காது அது எப்போதும் தர, தர என்று கத்திக் கொண்டே தான் இருக்கும் இடத்தை வெளிப்படுத்தும். பசியோடு போகிற பாம்புக்கு அது இரையாகிவிடும். அதுபோலத்தான்

அரளின் அரசியல் எதிரி முந்தையா. ஒரு சமயம் அருண் முத்தையாவை வாய்த்தகராறில் குற்றிக் கொலை லெதான விடுவேன் என்று மெல்ல என் தலைவனை எப்படித் திட்டலாம் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டர் மூன்றாவதாக சின்னப்பன். ஒருநாள் உணமையாகவே முத்தையாவை யாரோ ஒருவர் கொலை செய்யப்போய் அது அருணை ஆபத்தில் மாட்டிவிட்டது பிறகு காவல் நிலையம், நீதிமன்றம் என்று அலைந்து கடைசியில் வெளிவருதற்குள் போதும் போதும் என்றாறிவிட்டது அருணுக்கு

நீதி

யாராக இருந்தாலும் சிந்தித்து வார்த்தையைப் பிறரிடம் கூற வேண்டும். இல்லையென்றால் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். நுணலும் தன் வாயால் கெடும்' என்பது இக்கதையின் நீதி.

சிறுதுளி பெருவெள்ளம்" 

பழமொழி விளக்கம்:

மழையானது முதலில் சிறுசிறு துளியாக வரும் அந்த சிறுதுளி ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்தால் அந்த சிறுதுளி எங்கும் வெள்ளம்போல் காட்சியளிக்கும் இவையே சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழியின் விளக்கமாகும்.

வாழ்க்கை நிகழ்வு :

சிறுதுளி பெருவெள்ளம் என்னும் பழமொழியை நன்மைக்கும் எடுத்துக் கொள்ளலாம். தீமைக்கும் பயன்படுத்தலாம். சிறுகச் சிறுக சேமித்ததாலேயே குசேலன் மனைவி கண்ணனுக்கு அவல் இடித்துக் கொடுக்க முடிந்தது. குசேலனும் கண்ணனும் வகுப்பு நண்பர்கள். கண்ணன் துவாரகையின் மன்னன். குசேலனோ குழந்தை குட்டிப் பெறுவதில் மன்னனானான்.

வறுமை வாட்டியது, வயிற்றுக்குச் சோறிட முடியாத வறுமையில் குடும்பம் வாடியது. இந்நிலையில் கண்ணனைக் கண்டுவர குசேலர் புறப்பட்டார். வெறுங்கையோடு போகலாமா? என்ன செய்வது? குசேலன் மனைவி வறுமை நிலையிலும் ஒரு பிடி தானியத்தை எடுத்துத் தனியே தினமும் வைத்திருந்தாள். அதை எடுத்து அவல் இடித்துக் கண்ணனிடம் கொடுக்க சொல்லி குசேலனிடம் கொடுத்தாள், கண்ணன் விரும்பியுண்ட அந்த அவல் குசேலன் வீட்டைக் குபேரன் ஆக்கியது.

நீதி:

நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூபாயாக சேர்த்து வைத்தால் ஒரு சில ஆண்டுகளில் அவை பெரும் தொகையாக மாறும் இவற்றை சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழியின் நீதியாகும்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் 

பழமொழி விளக்கம்:

ஒருவன் திறமைசாலியாக இருந்தால், அவன் எந்த சிக்கலான பிரச்சனையையும் சந்தித்து, வெற்றி கொள்வான். 

வாழ்க்கை நிகழ்வு :

சரவணன் ஒரு திறமைசாலி ஒருநாள் அவன் தன் இரு சக்கர வாகனத்தில் ஒரு சுரங்கப்பாலத்தின் வழியே சென்றபோது, அந்த சுரங்கப் பாலம் தொடங்குமிடத்திலிருந்து சில அடிகள் தூரத்தில் ஒரு வேன் நின்றிருந்தது. சுரங்கப் பாலத்தின் உயரம் குறைவான இருந்தது. அதை சுவனத்தில் கொள்ளாமல், வேன் ஓட்டுநர் உள்ளே நுழைந்ததும், வேனின் கூரை, சுரங்கத்தின் கூரையை உரசியபடி, நின்றுவிட்டது. முன்னாலும் போக முடியவில்லை. பின்னாலும் வண்டியை எடுக்க முடியவில்லை. வேன் ஓட்டுநர் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தபடி இருந்தான். அச்சமயத்தில் அங்கு சென்ற சரவணன், அந்த ஓட்டுநரிடம், அந்த வேனின் நான்கு சக்கரங்களிலும் இருந்த காற்றை பாதியளவுக்கு வெளியேற்றச் சொன்னான். இதனால், வேனின் உயரம், சற்று குறைந்தது. வேனை மெதுவாக ஓட்டியபடி சுரங்கத்தை விட்டு வெளியே வந்தான் அவன். சரவணின் புத்திசாலித்தனமான யோசனை அந்த வேன் ஓட்டுநரைக் காப்பாற்றியது. 

நீதி :

ஒரு திறமைசாலி, சாதாரணமான ஒரு யோசனையைக் கொண்டு. சிக்கலான பிரச்சனையை வென்றிடுவான். 

பேராசை பெரு நட்டம்:

பழமொழி விளக்கம் : 

ஒருவன் அளவுக்கு மீறி ஆசைகள் ஏற்படும்போது தீய வழியில் அடைய முற்படுவார்கள். இதனால் நாம் பெரும் விலைக் கொடுக்க நேரிடும். எனவேதான் இவற்றை பேராசை பெருநட்டம் என்ற பழமொழியின் விளக்கமாகும்.

வாழ்க்கை நிகழ்வு: என் தந்தையார. ஒரு நகை கடை விளம்பரத்தைக் கண்டார். அதில் பத்தாயிரம் முதலீடு செய்தால் மாதாமாதம் அதிக வட்டி தருவதாக போடப்பட்டிருந்தது. அதைப் பார்த்து பணம் போடப் போவதாக கூறினார். அதை கேட்ட என் தாயாரும் என் சகோதாரும் எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. விடாப்பிடியாக நான் பணம் போட்டே தீருவேன் என்றார். அவர் போக்கிலே வீட்டுவிட்டோம். அன்று மாலையே நகை கடைக்குச் சென்று (₹30,000) முதலீடு செய்தார் சில மாதங்கள் வட்டி பணம் காசோலையாக செக்காக வந்தது. என் தந்தையின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அது மாதங்களுக்குப் பின் வட்டி பணம் வரவில்லை. நேரிடையாகச் சென்று கேட்டபோதுகடையை மூடி விட்டார்கள். பின் பணத்தை ஏமாந்தவர்கள் தொடர்ந்த வழக்கு சில வருடங்களுக்குப் பின் குறிப்பிட்ட பணம் மட்டும் கைக்கு வந்தது. அப்போதுநான் என் தந்தை “பேராசை பெரு நட்டம்"" என்பதை உணர்ந்தார்.

நீதி :

ஆசை அளவுக்கு மீறினால் பெரும் தீமை ஏற்படும். இதனால் பெரும் நட்டம் ஏற்படும். இவற்றை பேராசை பெரு நட்டம்" என்ற பழமொழிக் கூறும் நீதியாகும்.

இளங்கன்று பயம் அறியாது ?

பழமொழி விளக்கம் :

பொதுவாக இளமையில் பயம் இருக்காது.

வாழ்க்கை நிகழ்வு : 

மாரியப்பன் மாடி வீட்டில் குடியிருந்தார். அவரது வீட்டுப் பால்கனியின் கைப்பிடிச்சுவர் உயரம் குறைவாக இருந்தது. அவரது ஐந்து வயது மகள் பால்கனியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, அதன் சுவர் மீது ஏறி நின்று விட்டான், தற்செயலாக அதைக் கண்ட மாரியப்பன் ஓடிப்போய் மகனை இழுத்து அணைத்துக் கொண்டார். பின் மகனிடம் ”இதன் மேல் ஏறி நிற்கிறாயே உனக்கு பயமில்லையா? விழுந்துவிட்டால் என்ன செய்வது” என்று கேட்டார். இளங்கன்று பயமறியாது என்பது போல "அதெல்லாம் ஒன்றும் ஆகாதப்பா என்று சொல்லி தனது தந்தையைப் பார்த்து சிரித்தான்.

நீதி:

இளமைத் துடிப்புள்ள இளையோர் தாங்கள் செய்யும் காரியத்தின் நன்மை தீமை அதன் பின் விளைவுகள் பற்றி எண்ணிப் பாராமல் அதில் துணிவுடன் இறங்கிவிடுகிறார்கள். அதற்குக் காரணம் அவர்களுடைய இளமையே என்பது இப்பழமொழி உணர்த்தும் நீதியாகும்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு :

பழமொழி விளக்கம் :-

அறிஞர்க்கெல்லாம் அறிஞராக விளங்கக் கூடியவன் இவ்வுலகில் உண்டு. நான் என்னும் கர்வம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதே இப்பழமொழியின் விளக்கமாகும். 

வாழ்க்கை நிகழ்வு

பிரபு என்ற இளைஞன் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருபவன் மிகவும் புத்திசாலியானவன். நன்கு படிக்கக் கூடியவன். அதனால் கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் அனைவருக்கும் இவனைப் பிடிக்கும்: பேராசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு முன்பே எல்லா பாடங்களையும் படித்து முடித்து விடுவான். அவர்கள் கேட்தம்1 அனைத்து வினாக்களுக்கும் தானே முதலில் பதில் கூற வேண்டும் என்பதில் சுவனமாக இருப்பவன். இதனால் அவன் மனதில் தான்தான் மிக சிறந்தவன் என்னும் கர்வம் இருந்து வந்தது.

இரண்டாம் ஆண்டில் புதியதாக வேணு என்பவன் அக்கல்லூரியில் அவன் பிரிவில் வந்து சேர்ந்தான். வேணு பிரபுவைப் போல் இல்லாமல் அமைதியாகப் பேராசிரியர் நடத்தும் பாடங்களைக் கவனித்தான். அந்தாண்டு தேர்வில் பிரபுவை விட வேணு அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றேன். அது மட்டுமில்லாமல் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டான். இதுவரை பிரபுவை மட்டுமே பாராட்டிய பேராசிரியர்கள் இப்பொழுது வேணுவைப் பாராட்ட ஆரம்பித்தனர். இதனைப் பார்த்த அவன் பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பிரபுவைப் பார்த்து "இதான்டா வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுன்னு சொல்வாங்க. எப்பவும் தனக்குத்தான் எல்லாம் தெரியும்னு கர்வம் கூடாது” எனக் கைக்கொட்டிச் சிரித்தனர்.

நீதி : 

நான் தான் பெரிய அறிவாளி என்ற கர்வத்துடன் செயல்படக் கூடாது.


Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support