Daily TN Study Materials & Question Papers,Educational News

10 ரூபாய் நோட்டுகளும் இனி செல்லாதா? – ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்!

10 ரூபாய் நோட்டுகளும் இனி செல்லாதா? – ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்!



இந்தியாவில் பழைய பத்து ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரூபாய் நோட்டுகள்

இந்தியாவில் ரிசர்வ் வங்கி நோட் பிரிண்ட் பிரைவேட் லிமிட் மற்றும் செக்யூரிட்டி பிரின்டிங் அண்ட் மீண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வருகிறது. அந்த வகையில் 2019 – 20 நிதியாண்டில் ரூ.147 கோடி 10 ரூபாய் நோட்டுகளும், அடுத்த நிதியாண்டில் ரூ. 128 கோடியே 40 லட்சம் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டன. அதன்பின் 2021- 22 நிதியாண்டில் ரூ. 75 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன.


இப்படி படிப்படியாக பத்து ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளது.மேலும் கொரோனாவுக்கு பின் ரிசர்வ் வங்கி கிளீன் மனி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் கிழிந்த பழைய நோட்டுகள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் மனிகண்ட்ரோல் அறிக்கையின்படி 20 நோட்டுக்கள் அச்சிடுவதை விட ரூபாய் 10 நோட்டுகளை தயாரிக்க செலவு அதிகமாகும் என தெரிவித்துள்ளது. அதனால் புதிய பத்து ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

Unordered List

Support