ரசிகர்களுடன் 'கில்லி' படம் பார்த்த இயக்குனர் தரணி...!

ரசிகர்களுடன் 'கில்லி' படம் பார்த்த இயக்குனர் தரணி...!


விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்த 'கில்லி' படம் சில தினங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆனது. முதல் நாளிலேயே சுமார் 8 கோடி வரை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. தமிழ், தெலுங்கில் இதுவரை ரீ-ரிலீஸ் ஆன படங்களில் முதல் நாள் வசூலில் அதிகம் வசூலித்துள்ளது 'கில்லி' படம் தானாம்.


இப்படத்தை தரணி இயக்கியிருந்தார். 'கில்லி' படத்திற்கு முன்பாக “எதிரும் புதிரும், தில், தூள்” ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் விக்ரம் நடித்த 'தில், தூள்' இரண்டுமே சூப்பர் ஹிட் படங்கள். நான்காவதாக அவர் இயக்கிய 'கில்லி' படமும் சூப்பர் ஹிட் படம். அடுத்து தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த 'பங்காரம்' படத்தை இயக்கினார். அந்தப்படம் வெற்றி பெறவில்லை. அதற்கடுத்து தமிழில் அவர் இயக்கி விஜய் நடித்த 'குருவி', சிம்பு நடித்த 'ஒஸ்தி' ஆகிய படங்களும் வெற்றிகரமாக ஓடவில்லை.


கடந்த 13 ஆண்டுகளாக எந்தப் படத்தையும் அவர் இயக்கவில்லை. 'கில்லி' படத்தின் ரீ-ரிலீஸுக்குப் பிறகு பல யு டியுப் சேனல்களும் அவரைப் பேட்டி எடுக்க பரபரப்பாகி வருகிறார்கள். இந்நிலையில் ரசிகர்களுடன் படத்தைப் பார்த்து ரசித்துள்ளார் இயக்குனர் தரணி. அவருடன் படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த ஜானகி சபேஷ் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். தரணி எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


'கில்லி' ரிரிலீஸுக்குப் பிறகு தரணிக்கு மீண்டும் படம் இயக்கும் வாய்ப்புகள் வரலாம்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...