11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான தேர்வு முறை மாற்றம் – CBSE முக்கிய அறிவிப்பு!

11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான தேர்வு முறை மாற்றம் – CBSE முக்கிய அறிவிப்பு!


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது 2024-25 ஆம் கல்வியாண்டிலிருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.

தேர்வு முறை மாற்றம்:

CBSE இன் இயக்குனர் (கல்வி) ஜோசப் இமானுவேல் அவர்கள் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி, 2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் இருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முறையில் திறன் சார்ந்த கேள்விகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முறையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று சிபிஎஸ்சி தெளிவுபடுத்தி உள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி ,வாழ்க்கை சூழ்நிலை கருத்துக்களின் அடிப்படையில் மாணவர்களின் சிந்தனை திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CBSE தெரிவித்துள்ளது.


அதாவது இனி 11 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான தேர்வுகளில், பாடத்திட்ட அடிப்படையிலான கேள்விகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வினா கேள்விகள் போன்ற திறன் சார்ந்த கேள்விகளின் சதவீதம் 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் எனவும், குறுகிய மற்றும் நீண்ட கேள்விகளின் சதவீதம் 40லிருந்து 30 சதவீதமாக குறைக்க குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை மனப்பாடம் செய்வதிலிருந்து விலகி, 21ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு தயார்படுத்துவதற்கான கல்விச் சூழலை உருவாக்குவதே சிபிஎஸ்இ வாரியத்தின் முக்கிய குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...