4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களே., மீண்டும் இறுதி தேர்வு தேதி மாற்றம்., மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு!!

4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களே., மீண்டும் இறுதி தேர்வு தேதி மாற்றம்., மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு!!

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வை, ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்து இருந்தது. பின்னர் ரமலான் பண்டிகை வர இருப்பதையொட்டி 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்ரல் 10ஆம் தேதிக்கான தேர்வு ஏப்ரல் 22 ஆம் தேதியும், ஏப்ரல் 12ஆம் தேதிக்கான தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதியன்று மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின் கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் சமூக அறிவியல் பாடத் தேர்வு ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments