பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியமாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன
இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன. இதில் சுமார் 40ஆயிரத்துக்கும் மேலான முதுநிலைஆசிரியர்கள் ஈடுபட்டனர். தற்போதுவிடைத்தாள் திருத்துதல் முடிவுற்றதை அடுத்து மாணவர்களின் மதிப்பெண்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நாளை (ஏப்.15) முதல் தொடங்கும்.
அதைத்தொடர்ந்து மாணவர் மதிப்பெண் பகுப்பாய்வு உள்ளிட்டவேலைகளை முடித்து,
திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள்
மே 6-ல். வெளியிடப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.