சம்மருக்கு டூர் போறீங்களா.. தென் இந்தியாவில் உள்ள டாப் 5 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!!

சம்மருக்கு டூர் போறீங்களா.. தென் இந்தியாவில் உள்ள டாப் 5 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!!



இந்த சம்மருக்கு டூர் போக விரும்புகிறவர்களா நீங்கள்.. கோடைக்கால வெயிலில் இருந்து தப்பிக்க மலைப்பிரேதசங்களுக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்றால், தென் இந்தியாவில் உள்ள முக்கிய மலைவாசஸ்தலங்களை மிஸ் பண்ணிடாதீங்க.


கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் மக்கள் குடும்பத்துடன் டூர் செல்வது அதிகரித்துள்ளது. கோடைக்கால வெயிலில் இருந்து தப்பிக்க மலைப்பிரேதசங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வது அதிகரித்துள்ளது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.


இந்த ஆண்டு வெப்பம் மிகக் கடுமையாக மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்ப நிலை வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் சதத்தை தாண்டி விட்டது. இதனால், வெயிலில் இருந்து தப்பிக்க இந்த ஆண்டு மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடுத்தர வசதி கொண்ட மக்களால் வட மாநிலங்களுக்கோ.. வெளிநாடுகளுக்கோ செல்ல முடியாது.


எனவே, தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு அருகில் உள்ள மலைவாசஸ்தலங்களுக்கு டிரிப் அடிப்பதையே விரும்புகிறார்கள். அந்த வகையில், தென் இந்தியாவில் உள்ள முக்கிய மலைவாசஸ்தலங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.


கூர்க்: இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்ட்ட கூர்க், இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும். பனி படர்ந்த இயற்கை சூழல், காணும் இடம் எல்லாம் பச்சை பசேல் என பசுந்தோல் போர்த்தியது போன்ற மேற்கு தொடர்ச்சி மலை, ஊர்ந்து செல்லும் நீரோடைகள் என கூர்க் சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கும் மனதுக்கும் ஒருசேர விருந்தாக இருக்கும். காபி தோட்டங்களுக்கு பெயர் பெற்ற கூர்க்கில், காணும் இடம் எல்லாம் காபி பயிர்கள் ரம்மியமான சூழலை கொடுக்கும்.


ஊட்டி: மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டி சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் கோடைவாசஸ்தலமாக உள்ளது. தேயிலை தோட்டங்கள், மலைப்பகுதிகள் என இங்குள்ள இயற்கையான சூழல் பயணிகளின் மெய்சிலிர்க்க வைக்கும். நீலகிரி மலை ரயில் பயணம், ஊட்டி ஏரி என இங்கு வெயிலில் இருந்து இளைப்பாற அருமையான இடங்கள் உள்ளன.


கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மேகக்கூட்டங்கள் தவழ்ந்து சென்று நம் மனதை வருடி செல்லும். கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா இடங்களாக குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்டவை உள்ளது. அங்குள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும் செய்யலாம்..


ஏற்காடு: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது ஏற்காடு. ஏற்காட்டு மலையில் காணப்படும் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும்.


குன்னூர்: நீலகிரி மலையில் அமைந்துள்ள குன்னூர் தேயிலை உற்பத்திக்கு புகழ் பெற்ற இடமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறந்த மலை பிரதேசங்களில் இதுவும் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ள குன்னூர் ஊட்டியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது. ஊட்டியில் காணப்படும் பரபரப்பு எல்லாம் நமக்கு செட் ஆகாது என நினைப்பவர்களுக்கு குன்னூர் சிறந்த இடமாக இருக்கும்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...