பள்ளி சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

பள்ளி சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!


பாட்னா மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் தயாரிக்கும் பணி தற்போது தொடங்கி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

 ஆதார் அட்டை கட்டாயம்:

அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட கல்வி அலுவலக அறிக்கையின்படி, கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 134 குழந்தைகளின் ஆதார் அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஆதார் அட்டை தயாரிக்க மட்டும் மாவட்டத்தில் 46 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 27 மையங்களில் ஆதார் அட்டை தயாரித்து மேம்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.

மீதமுள்ள 19 ஆதார் மையங்களில் ஏப்ரல் இறுதிக்குள் ஆதார் தயாரிக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாத குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் அட்டை எடுக்கப்பட்டு வருகிறது. ஆதார் அட்டையில் ஏதேனும் தவறு இருந்தால், அதை சரிசெய்ய ரூ.50 முதல் 100 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆதார் எண்களை பெற பணம் கேட்டால் புகார் தெரிவிக்கவும் அரசு தெரிவித்துள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...