இந்த கோவிலுக்கு போய் இருக்கீங்களா? விருதுநகரில் மலையை குடைந்து கட்டப்பட்ட சிவன் கோயில்!
குடைவரை கோயில் என்பது கட்டுமானங்கள் ஏதும் இன்றி மலையை குடைந்து கட்டப்பட்ட கோவிலை குறிக்கும். விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலும் கற்றளி கோவில்களே அதிகம் காணப்படும் நிலையில், மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் ஒரு குடைவரை கோயில் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
திருமங்கலம் ராஜபாளையம் நெடுஞ்சாலையில் அழகாபுரிக்கு அடுத்துள்ள ஊர் தான் மூவரை வென்றான். மூவரை வென்றான் கிராமத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு சென்றால் சிறிய அளவிலான குன்று இருப்பதை காணலாம் அங்கு தான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அமைப்பை பொருத்தவரை, கோவில் ஒரு மலையை குடைந்து கட்டப்பட்ட குடவரை கோவில்.
முன்பு இருக்கும் மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் மட்டுமே கற்களை கொண்டு கட்டப்பட்டது. மற்றபடி கருவறை முழுவதும் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளது. மூலவராக சிவன் தாய் பாறையிலேயே செதுக்கப்பட்டு காட்சி தருகிறார். கருவறையை ஒட்டிய பக்கவாட்டு பகுதியில் இடது பக்கத்தில் விநாயகர் சிற்பமும், வலது பக்கத்தில் ராஜ கோலத்தில் உள்ள முருகன் சிற்பம் மற்றும் நடமாடும் நடராஜரின் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக மலையிலேயே செதுக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வெளியே மரகதவல்லி அம்மன், தட்சிணா மூர்த்தி, முருகன், விநாயகர் போன்றோர் காட்சி தருகின்றனர். மூவரை வென்றான் கோவில் என்று அறியப்பட்டாலும் இதனை மக்கள் மொட்டமலை என்கின்றனர்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.