மதுரை கள்ளழகர் திருவிழா கட்டுப்பாடுகள் ரத்து – உயர்நீதிமன்ற உத்தரவு!

மதுரை கள்ளழகர் திருவிழா கட்டுப்பாடுகள் ரத்து – உயர்நீதிமன்ற உத்தரவு!


மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.


கள்ளழகர் திருவிழா:

ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியான அழகர் மலை கோவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெறும். மதுரை மாவட்ட ஆட்சியர் நடப்பாண்டில் கள்ளழகர் திருவிழாவின்போது உயர் அழுத்த மோட்டார்கள் கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை அடிப்பதற்கு தடை மற்றும் முறையாக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே நீரைப் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்.


இந்நிலையில் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆனது கள்ளழகர் திருவிழாவின் போது முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கள்ளழகர் மீது நீரைப் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாடு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...